பிரபலமான இடுகைகள்

புதன், 30 மார்ச், 2011

Paulo Coelho வின் பொன்மொழிகள் -1



Paulo Coelho வின் பொன்மொழிகள் -1 

  • நீங்கள் வேண்டியதை அடைவதற்கு உறுதியாக முயற்சித்தால் இந்த அண்டமே துணையாக இருக்கும்.

  • கனவு காணும் வாய்ப்பு இருப்பதால் தான், இந்த வாழ்கையே சுவாரிசயமாக இருக்கிறது  

  • ஒருவர் மீது அன்பு செலுத்துவதால் தான் நீங்கள் அன்பாக இருகின்றீர்கள். அன்பு செலுத்த காரணம் எதுவும் தேவையில்லை 

  •   கனவை அடைவதற்கு தடையாக இருப்பது ஒன்று தான். தோற்றுவிடுவோமோ என்ற பயம் தான் அது.

  • எல்லோரும் அடுத்தவர்கள் எப்படி வாழவேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். தான் எப்படி வாழ வேண்டும் என்று தான் யாருக்கும் தெரிவதில்லை.

  •   ஏழு முறை விழுந்து எட்டு முறை எழுவது தான் வாழ்கையின் ரகசியம்
  
  • உங்கள் இதயம் சொல்வதை கேளுங்கள். என்னென்றால் அங்கு தான் வாழ்கையின் பொக்கிஷம் இருக்கிறது  

  • நான் ஏன் கடந்தகாலத்திலும் எதிர்காலத்திலும் வாழவில்லை. நான் நிகழ்காலத்தில் தான் விருப்பமுடையவனாக இருக்கிறேன். நீயும் உன் நிகழ்காலத்தில் வாழ்தால் மகிழ்ச்சியுடன் இருப்பாய். வாழ்கையே ஒரு திருவிழாவாக, கொண்டாட்டமாக இருக்கும். ஏனென்றால் வாழ்கை என்பது நாம் வாழும் இந்த நொடி தான்.

  • வேகமாக செயல்படுவதில் மகிழ்ச்சியை காண முயற்சி செய்யுங்கள். வழக்கமாக செயல்படும் முறையில் ஆக்கபூர்வமான மாற்றத்தை கொண்டுவந்தால், உங்களுள் ஒரு புதிய மனிதனை காணலாம்  

  • துன்பத்தை பற்றிய எண்ணம் மற்றும் பயம் துன்பத்தை விட கொடுமையானது என்று உன் இதயத்திடம் சொல். தன் கனவை தேடி செல்லும் எந்த இதயமும் துன்பபடுவதில்லை. தேடும் ஒவ்வொரு கணமும் நீங்கள் கடவுளை சந்திப்பீர்கள் 

  • உலகில் எளிமையாக இருக்கும் ஒன்று தான் அசாதாரமானது. ஞானம் அடைந்தவர்கள் தான் அதை உணருவார்கள் 

  • நான் உன் கனவில் ஒரு பகுதி என்றால் கண்டிப்பாக ஒரு நாள் நீ திரும்பி வருவாய் .

  • இது தான் காதல். அன்புவயபட்டால் நீ எதையும் உருவாக்கலாம். நீ அன்பு வயபட்டால் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முயற்சி செய்யவேண்டாம். ஏனென்றால் எல்லாம் உனக்குள்ளே நடக்கிறது. 
  
  • நாம் வலிமையுடையவராக நடிக்கிறோம். நமக்கு வலிமை இல்லாத காரணத்தினால்.  

  • ஒருவனை கட்டுப்படுத்த நீங்கள் நினைத்தால், அவனை பயம் கொள்ள செய்தால் மட்டும் போதும். எளிதில் கட்டுபடித்திவிடலாம்     

2 கருத்துகள்:

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

உலகில் எளிமையாக இருக்கும் ஒன்று தான் அசாதாரமானது. ஞானம் அடைந்தவர்கள் தான் அதை உணருவார்கள் //

Beautiful..

( Kindly remove word verification to enable easy reply )

Unknown சொன்னது…

அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது . மேலும் தொடரட்டும் .

கருத்துரையிடுக