பிரபலமான இடுகைகள்

வியாழன், 3 அக்டோபர், 2013

விஷமாகி போன சமூகம்

காந்தி ஜெயந்தி ...மது மூலம் கூடுதல் வருமானம் பார்க்கும் வாய்பை சிலருக்கு எற்படுத்தி தருகிறது...நம் நாட்டு குடிமகன்கள் மேல் அபார நம்பிக்கை வைத்து , முன் கூட்டியே மதுபானங்களை அதிகம் வாங்கி பதுக்கி வைத்து, குவார்டர் 150 முதல் 200 ருபாய் வரை விற்று...கொள்ளை லாபம் பார்த்து...இதில் போலிஸ் கும் பங்கு மற்றும் சரக்கு கொடுத்து.....காற்றுல்ல போதே தூற்றிக்கொள்ளும் இவர்கள்...சமூக விரோதிகளா? கை தேர்ந்த வியாபாரிகளா? நாம் காந்திக்கு கொடுக்கும் உண்மையான மதிப்பு இது தான். போலி அரசியல் வாதிகள், போலி வியாபாரிகள், போலி சமூதாய சேவகர்கள் காந்தியின் பெயரை அவர் பிறந்த நாள் அன்று தங்கள் பிழைப்பிற்காக பயன்படுத்திக்கொள்கிறனர்...உணமையாக காந்தியின் வழியில் நடக்க விழைபர்களுக்கு தடைக்கல்லாக இந்த சமூகமே இருப்பது அதனிலும் கொடுமை.காந்தியின் அறவழிபோராட்ட முறை தற்கால்த்திற்கு பொருந்தாத முறையாகவே தோன்றுகிறது. சமூகத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்ற உறுதிகொண்டவர்கள் கூட சகுனித்தன யுக்திகளை கையாண்டால் மட்டுமே ஒரளவு வெற்றி பெற முடியும். நல்லவர்களாகவே இருந்தால் காணாமல் போய்விடுவார்கள்.

என் மனதும் சிறிது சிறிதாக கெட்டுக்கொண்டு வருவதை உணருகிறேன். யாருக்கும் கெடுதல் செய்யாமல் வாழநினைத்தால், இளிச்சவாயன் என்று நினைத்து காலைவாரிவிட்ட நபர்கள் , காலைவாரிவிட முயர்ச்சி செய்யும் நபர்களிடம் தோற்றுப்போவதை விட, அவர்களுக்கு கெடுதல் செய்தால் என்ன என்று தோன்றுகிறது. நான் மாறுவதும் மாறாததும் என்னை சுற்றியுள்ள சமூகத்தின் கையில் தான் இருக்கிறது. இப்படி தான் பலர் மாறி சமூகமே சீர்க்கெட்டு போயுள்ளது என்பதையும் உணர்கிறேன். டார்வினின் " Survival of the fittest" தத்துவத்தில் ‘Fittest" என்பதற்கு தற்கால உலகத்தில் உள்ள அர்த்த்ம் “ எய்த்து பிழை” என்பதாகவே உணர்கிறேன். வெளிப்படையாக திருட்டு தொழிலை செய்பவர்களை விட "white collar criminals" தான் இந்த சமூகத்தை அதிகம் சீர்குலைய செய்பவர்களாக இருக்கின்றனர். இந்த சமூகதில் நல்லவர்களாக வாழ்பவர்களை விட நல்லவர்களாக வேஷம் போடுகிறவர்களே நிறைந்து காணப்படுகின்றனர். பணமும் பதவியையும் பெற்றுவிட்டால்...பிறகு தெரிந்தே கூட தவறு செய்யலாம். எவராலும் அவர்களை எதுவும் செய்ய்முடியாது.இன்றைய அரசியல்வாதிகள் நமக்கு உணர்த்தும் பாடம் இது. ரவுடிகள் அரசியலுக்கு வரும் உளவியல் காரணமும் இது தான்.

அநியாத்தைக்கண்டு பல தடவை பொங்கி இருக்கிறேன். ஒங்கி கதரினாலும், போராடினாலும் ஒருவரும் உதவ வரமாட்டார்கள் என்பதை உண்ர்திருக்கிறேன். தங்களை தற்காத்துக்கொண்டு சமூகம் எப்படி போனால் என்ன என்று வாழ்பவர்களே அதிகம் என பல சம்பவங்கள் உணர்த்திருக்கின்றன. நான் குடியிருக்கும் நகரின் நலசங்கத்தை கைபற்றும் நோக்கில் நடந்த பிரச்சனையில் நான் தலையிட்டதால் எனக்கு அடியும் உதையும் விழுந்தது. இப்பொழுது பலமாதங்களாக நிர்வாக செலவிற்கு வாங்கிய பணத்திற்கு கணக்கு காட்டாமல் அவர்களுக்கு உள்ளேயே அடிதடி பிரச்சனை நடந்து வருகிறது. அன்று ரவுடியிசத்திற்கு பயந்து வாய் திறக்காத குடியிருப்பை சார்ந்தவர்கள் இன்று என் உதவியை கேட்கின்றனர். தனிபட்டமுறையில் நான் போராடிக்கொண்டுயிருந்த நான் இப்பொழுது போராட விருப்பம் இல்லாமல் இருக்கிறேன்.

என் மாமனார் எனக்கு அடிக்கடி தரும் ஆலோசனை “ பாம்பு திங்கற ஊருக்கு போனால் நடுத்துண்டு எனக்கு” என்று இருக்கவேண்டும் என்பதே. எல்லோரும் நடுத்துண்டிற்காக தான் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறோம். சமூகமே விஷம் ஆகிக்கொண்டிருப்பதை உணராமல்

சனி, 16 மார்ச், 2013

பரதேசி


பரதேசி. இன்னும் சில மாதங்களுக்கு ப்ல விவாதங்களை எழுப்ப போகும் படம். ரெட் டீ என்ற நாவலை அடிபடையாக வைத்து பின்னப்பட்ட இந்த படம் பாலா இயக்கதில் வந்ததிலேயே சிறந்த படம் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. படத்தின் முதல் அரை மணி நேரத்தை ஜாலியாக எடுக்கிறேன் என்ற பெயரில் பாலா செய்துகொண்ட வியாபார ரீதியான சமரசத்தை தவிர்த்து பார்தால் இது மிக அருமையான படம். மிக நுணுக்கமாக அமைக்க பட்ட பாத்திர அமைப்புகள் (வேதிகா மட்டும் திருஷ்டி), மனதை தொடும், பிசையும் காட்சிகள், அருமையான ஒளிப்பதிவு  - மற்ற் பாலா படங்களில் உள்ள அனைத்து அம்சங்களும் இருந்தாலும், ஒரு உண்மை சம்பவத்தை இதை விட அழகாக யாரும் பதிவு செய்ய முடியாது( எனினும் ரெட் டி யின் தமிழ் வடிவம் எரியும் பனிக்காடு என்னுள் எற்படுத்திய பாதிப்பு இன்னும் அதிகம். படத்தின் முதல் அரை மணி நேர  சமரசம் நாவலில் இல்லை). என் நண்பர் ஜானகிராமன் அவர்கள் முதல் அரை மணி நேரம் நாஞ்சில் நாடான் எழுதிய ”இடாலாக்குடி ராசா” என்ற கதையை தழுவியே எடுக்கப்பட்டது. அந்த கதையை படித்தவர்களுக்கு முதல் அரை மணி நேரமும் பிடித்தது என்ற தகவலை கூறினார். இன்னொரு நண்பர் ரெட் டீ அப்படியே எடுத்திருந்தால் முற்றிலும் அழுகாச்சியாக இருந்திருகும் என்று கூறினார். படம் பார்க்கும் நமக்கே அப்படி என்றால்....தேயிலை தோட்டத்தில் கொத்தடிமைகலாக உண்மையில் வாழ்ந்த மக்களுக்கு?.

படத்தின் பலம்

பாலாவின் இயக்கம், அதர்வாவின் நடிப்பு, செழியனின் ஒளிப்பதிவு, சிறு சிறு நடிகர்களின் நடிப்பு பாத்திர தேர்வு (அதர்வாவின் பாட்டி யின் எதார்த்த நடிப்பு மிக சிறப்பு)

இடைவேளையின் பொழுது சாக கிடக்கும் தருவாயில் தன்னை விட்டு முன்னேரும் கூட்டத்தை நோக்கி நீளும் கை...அதை காட்சி அமைத்த விதம்

மதமாற்றம் செய்ய கிருத்துவர்கள் செய்யும் தந்திரத்தை நக்கல் அடித்த விதம்

வசனம் குறைவாக  இருந்தும் காட்சிகள் மூலமே சொல்ல வந்ததை மிக அழுத்தமாக சொல்லியது

மிக உருக்கமானா முடிவும், அப்போழுது அத்ர்வாவின் நடிப்பும், காட்சிஅமைப்பும்

படத்தின் குறை

பட ஆரம்பிக்கும் பொழுது Steady cam shot சரியாக எடுக்கபடவில்லை. மேலும் சாலுர் கிராமத்து மக்கள் குறுக்கும் நெடுக்குமாக  நடந்துகொண்டே இருந்தது எதார்தமாக இல்லை

வேதிகாவின் நடிப்பு

பின்னனி இசை..... மிக மோசம். இளையராஜா இல்லாத குறை நன்றாக  தெரிந்தது

வியாழன், 17 ஜனவரி, 2013

தானம் அறக்கட்டளையின் 8ஆவது குறும்பட விழா போட்டி

தானம் அறக்கட்டளையின் 8ஆவது குறும்பட விழா போட்டி


'மேம்பாட்டு குறும்பட விழா' எனும் தலைப்பில் ஒவ்வொரு ஆண்டும் தானம் அறக்கட்டளை குறும்படம் மற்றும் ஆவணப்படங்களுக்கான போட்டிகளை நடத்தி வருகிறது. 1.வறுமை (2005), 2.தண்ணீரும் வாழ்க்கையும் (2006), 3.தண்ணீரும் மக்களும் (2007), 4.கலாச்சாரமும், பாரம்பரியமும் (2008), 5.வறுமைக்கு எதிரான ஆயிரமாண்டு வளர்ச்சி இலக்கு (2009) 6.மக்கள் ஜனநாயகமும், மேம்பாடும் (2010) 7.வாழ்வாதாரம் (2011) என்ற தலைப்புகளில் கடந்த ஏழாண்டுகளாக தானம் அறக்கட்டளையின் மேம்பாட்டு குறும்பட விழாக்கள் நடைபெற்றன. அதன் தொடர்ச்சியாக இவ்வாண்டு 'உணவுப்பாதுகாப்பும் பருவநிலைமாற்றமும்' எனும் தலைப்பில் ஜனவரி 28-30, 2013 தேதிகளில் நடைபெறவுள்ளது. சுற்றுச்சூழல், உணவு, பருவநிலை, நீர்நிலைமேம்பாடு, வேளாண்மை, வறுமை போன்ற கருத்தமைவுகளில் உள்ள குறும்படம் மற்றும் ஆவணப்படங்களை இப்போட்டிக்கு அனுப்பலாம். சிக்கலுக்கான தீர்வினை முன்மொழிவது அவசியம்.

உலகின் எந்த மொழிகளில் தயாரானதாக இருப்பினும், உரையாடல்கள் ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். கடந்த ஐந்தாண்டுகளுக்குள் வெளியாகியிருப்பதோடு, படைப்பாளியின் தனிப்பட்ட சிந்தனையின் வெளிப்பாடாக இருப்பது மிக அவசியம். போட்டிக்கு அனுப்பப்படும் படங்கள் ஏதேனும் விருதுகளோ, பாராட்டுகளோ பெற்றிருக்கும் பட்சத்தில் அவை குறித்த விபரங்களையும் இணைத்தல் வேண்டும். இயக்குநர், தயாரிப்பாளர் அல்லது தயாரிப்பு நிறுவனங்கள் படைப்புகளை அனுப்பலாம். விசிடி, டிவிடி அல்லது வி.ஹெச்.எஸ் வடிவங்களில்தான் அனுப்ப வேண்டும். ஒருவர் எத்தனை படைப்புகள் வேண்டுமானாலும் அனுப்பலாம். தாங்கள் அனுப்பும் படங்கள், எக்காரணத்தை முன்னிட்டும் திரும்ப அனுப்ப இயலாது. படைப்புகள் 45 நிமிடங்களுக்கு மிகாமலிருப்பது சிறப்பு. ஒவ்வொரு படைப்பையும் தனித்தனி விண்ணப்பங்களோடுதான் அனுப்ப வேண்டும். விண்ணப்பம் மற்றும் போட்டி குறித்த விரிவான விளக்க அறிக்கைகள் http://www.dhan.org/dff என்ற இணைய தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது. தங்களது படங்கள் (இரண்டு பிரதிகள்) மற்றும் விண்ணப்பத்தையும் ஒருங்கிணைப்பாளர், 8ஆவது மேம்பாட்டுக் குறும்பட விழா (2012), தானம் அறக்கட்டளை, மேம்பாட்டிற்கான தொடர்பியல் மையம், 7இ, வால்மீகி தெரு, சோமசுந்தரம் காலனி, மதுரை - 16 என்ற முகவரிக்கு வருகின்ற ஜனவரி 22, 2013ஆம் நாளுக்குள் எங்களுக்குக் கிடைக்குமாறு அனுப்ப வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம். கூடுதல் விபரங்களுக்கு 0452 4353983 / 9443572724 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

முதல் கட்டமாகத் தேர்வு செய்யப்படும் ஒன்பது படங்கள் பொதுமக்கள் மத்தியிலும், கல்லூரிகளிலும் திரையிடப்படுவதுடன், இறுதியாக வெற்றி பெறும் முதல் மூன்று படைப்புகளுக்கு பரிசுத்தொகையும், சான்றிதழும் வழங்கப்படும். படங்களுக்கான தேர்வுகளில் குறும்பட மற்றும் திரைப்பட இயக்குநர்கள், பேராசிரியர்கள், இதழாளர்கள் என பல்துறை விற்பன்னர்கள் பங்கேற்கின்றனர்.

புதன், 3 அக்டோபர், 2012

நிதிப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கான யோசனைகள்


தினமணி தலையங்கதில் இருந்து: 
நிதிப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கான யோசனைகளைக் கூறுவதற்காக மத்திய அரசினால் நியமிக்கப்பட்ட விஜய் கேல்கர் கமிட்டி அளித்துள்ள பரிந்துரைகளில் முதன்மையானவை என்று சொல்லத்தக்கவை ஆறு. அவை:
1. டீசல் விலையைக் குறைத்து விற்பனை செய்வதற்காக எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் மானியத்தைக் குறைக்க வேண்டும். முதல் கட்டமாக 2013 மார்ச் மாதத்திற்குள்ளாக டீசலுக்கு தற்போது வழங்கப்படும் மானியத்தைப் பாதியாகக் குறைக்க வேண்டும். மீதியை 2014 மார்ச் மாதத்துக்குள் முற்றிலுமாக இல்லாமல் செய்துவிட வேண்டும். நிகழாண்டில் டீசல் விலையைக் குறைந்தது லிட்டருக்கு ரூ.4 உயர்த்த வேண்டும்.
2. மண்ணெண்ணெய் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்த வேண்டும். இதற்கு, தற்போது ஒதுக்கப்படும் மானியத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைத்துவிட வேண்டும்.
3. அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள், சமையல் எரிவாயு உருளைகளுக்கு அளிக்கப்படும் மானியத்தைப் படிப்படியாகக் குறைத்து, முற்றிலும் இல்லாமல் செய்துவிட வேண்டும். முதல்கட்டமாக 2012-13 நிதியாண்டில் 25% மானியத்தை குறைத்துக்கொள்ள வேண்டும்.
4. தற்போது உணவு மானியமாக ரூ.85,000 கோடி செலவாகிறது. நெல், கோதுமை போன்ற உணவு தானியங்களுக்கு ஆதார விலை அறிவிக்கும் அதே வேளையில், நியாயவிலை கடைகளுக்காக மத்திய அரசு வழங்கும் விலையையும் உயர்த்த வேண்டும். அதேபோன்று, வறுமைக் கோட்டுக்கு மேலே வாழ்பவர்களுக்கு வழங்கப்படும் உணவு தானியங்களுக்கான மானியத்தை ரத்து செய்து, சந்தை விலையில் பொருள்களை விற்பனை செய்ய வேண்டும்.
5. உரங்களுக்கு அளிக்கப்படும் மானியத்தைப் படிப்படியாக குறைத்து, யூரியா, நைட்ரேட் பாஸ்பேட் உரங்களை அதன் சந்தை மதிப்புக்கேற்ப அரசே ஆண்டுதோறும் விலை நிர்ணயம் செய்யலாம்.
6. மானியத் தொகையைப் பொருளாக வழங்காமல், பணத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டால், அமலாக்கக் குறைபாடுகள் இல்லாமல் செய்துவிட முடியும்.
இந்தப் பரிந்துரைகளை அமல்படுத்தினால் நிதிப் பற்றாக்குறை அளவைப் பெருமளவு குறைத்துவிட முடியும் என்று பட்டியலிடுகிறது கேல்கர் கமிட்டி. இதுதவிர, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்றுப் பணம் பெறும் வழிமுறை, பயன்படாத, பயன்படுத்தப்படாத அரசு நிலங்களை விற்பனை செய்து பணம் பெருக்கும் வழிமுறை என்று பலவிதமான யோசனைகளும் இக்கமிட்டியின் பரிந்துரைகளில் அடங்கும்.
மேலும் சில யோசனைகள்
1. மானியங்களை நிறுத்தி விட்டால் மக்கள் பலர் பசி பட்டினியால் தொஉயிர் விடுவர். இது மக்கள் தொகையை வெகுவாக குறைக்கும். இதனால் அரசாங்கத்திற்கு இன்னும் செலவு குறையும்
2.அரசு மருத்துவமனைகளை முற்றிலுமாக மூடிவிடலாம். இதனால் மேலும் உயிர் இழப்புகள் எற்ப்பட்டு மக்கள் தொகை மேலும் குறையும். 
3. அரசு கல்விக்கு செய்யும் செலவுகளையும் நிறுத்திவிடலாம். பள்ளிகூடங்களை அரமூடிவிடலாம். படித்தால் தானே வேளை கேட்பார்கள். கேள்வியும் கேட்பார்கள்?
4. பொதுஇடத்தில் அரைமணி நேரத்திற்கு மேல் நின்றாலோ/கூடிபேசினாலோ மணி நேரத்திற்கு ருபாய் பத்து முதல் நூறு வறை வரி விதிக்கலாம்
5. பொது மக்கள் தங்களுக்கு தேவையான மின்சாரத்தை தாங்களே உற்பத்தி செய்து கொள்ளவேண்டும். வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இது பொறுந்தாது.
6. அரசு அதிகாரிகள்/ அரசியல்வாதிகலுக்கு இனி சம்பளம் கிடையாது. ஆனால் அவர் அவர் திறமைக்கு எற்ப பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கி கொள்ளலாம்.லஞ்சம் வருமானத்ற்கு எற்ப
வருமான வரி செலுத்திவிட வேண்டும். 
7. ஒரு குழந்தைக்கு மேல் பெற்றால் அரசுக்கு முதல் வருடம் ருபாய் இருபதாயிரம் செலுத்த வேண்டும். வயது கூட கூட வருடம் பத்தாயிரம் கூடுதலாக செலுத்தவேண்டும். அப்படி செலுத்த தவறினால் அரசே கருணை கொலை செய்துவிடும்.
8. விவசாயிகள் சாகுபடி செய்யும் பயிருக்கு வரி கட்ட வேண்டும். பயிறுக்கு தகுந்தவாறு வரி விதிக்கபடும்.
9. விடுகளில் பயன்படுத்தபடும் தண்ணிருக்கு லிட்டருக்கு ருபாய்உ ப்த்து ம்ட்டும் வசூலிக்க வேண்டும். நீர் அத்தியாவசிய பொருள் என்பதால் கூடுதல் பணம் வசூல் செய்ய கூடாது
10. விவசாயத்திற்கு 100 லிட்டறுக்கு மேல் போகும் ஒரு ஒரு லிட்டருக்கும் ருபாய் இரண்டு மட்டும் வசூலிக்கலாம். விவசாயம் நாட்டின் முதுகெலும்பு என்பதால் இந்த சலுகையை அளிக்கலாம்.

மேலும் பல யோசனைகள் என்னிடம் உள்ளது. மன் மோகன்சிங், சிதம்பரம், மோண்டேக் சிங் அலுவாலியா ஆகியோர் நேரடியாக தொடர்பு கொண்டால் ஒரு கணிசமான தொகை வாங்கிக்கொண்டு ஆலோசனை தருவேன். இல்லையென்றால் உலக வங்கி, அமெரிக்கா மற்றும் சோனியா காந்தி அனுமதியுடன் என்னையே நிதி அமைச்சர் ஆக்கலாம். மக்கள் கேள்வி கேட்டால் என் மீது பழி போட்டு நீங்கள் தப்பிக்க இது மேலும் உதவும்.


இப்படிக்கு

மன் மோகன்சிங், சிதம்பரம், மோண்டேக் சிங் அலுவாலியா, ராகுல்,மோடி, கருணாநிதி, அத்வானி,அம்மா, மம்தா, நமீதா, குஷ்பு, கனிமொழி, ராமதாசு, விஜயகாந்த்,விஜய், அன்புமணி, விஜய், டி.ராஜேந்தர்,அரவிந்  கெஜிரிவால், பாபா ராம் தேவ், , போல அரசியலுக்கு வந்து சேவை செய்ய ஆசை படும் ஒரு இந்திய குடிமகன். 

செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

எனக்கு பிடித்த தமிழ் படங்கள் -1

எனக்கு பிடித்த தமிழ் படங்கள் -1

1. அழகி - தங்கர்பச்சன்
2. ஆடுகளம் -வெற்றி மாறன்
3. கேளடி கண்மணி - வசந்த்
4. பாஸ் என்ற பாஸ்கரன் -ராஜேஷ்
5. சுப்ரமணியபுரம் - சசிகுமார்
6. முதல் மரியாதை - பாரதிராஜா
7. முள்ளும் மலரும் - மகேந்திரன்
8. எங்கேயும் எப்பொழுதும்
9. காதல் - பாலாஜி சக்திவேல்
10. தில்லு முள்ளு - பால சந்தர்
       

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

நேர்மையாக வாழ முடியுமா?


நேர்மையாக வாழ முடியுமா?
பதவியை தந்து பார். மனிதனின் உண்மையான குணம் தெரியும் என்பார்கள். சர்வாதிகார மனபான்மையை பல நிர்வாக சுழலில் பார்க்க முடிகிறது. இதற்கு அறியாமை காரணமா இல்லை தலைகனம் காரணமா என்று பட்டிமன்றமே வைக்கலாம்.
தற்பொழுது உள்ள போட்டி நிறைந்த உலகில், பதவியும் பணமும் புகழையும் பெற எதை வேண்டுமென்றாலும் செய்யலாம் என்ற மனநிலை பலரிடம் உள்ளது. நேர்மை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் சுழல் உள்ளது. நேர்மையானவர்கள் கூட சில சமயத்தில் நேர்மை தவறி நடக்கும் படி நேர்கிறது. மகாபாரதத்தில் தர்மன் கூட கண்ணனின் அறிவுரைபடி அசுவதாமன் என்ற யானை இறந்த பிறகு, அசுவதாமன் என்ற தன் மகன் இறந்துவிட்டானா? என்று துரோணாசாரியார் கேட்ட பொழுது ஆம் என்று பொதுவாக, பதில் சொல்லி அவரை நிலைகுலயவைத்து அவர் தோல்வி பெற காரணமாக இருந்தான்.
எது தர்மம். தர்மம் என்பது நேர்மை, கடமை, நீதி, நன்மை போன்ற பல அர்த்தங்களை உடையது. யக்‌ஷனிடம் எது தர்மம் என்று யுதிஷ்ட்ரன் கூறும் பொழுது – காரணத்தை கொண்டு தர்மதை நிர்ணயம் செய்ய முடியாது. ஏன் என்றால் அந்த காரணமே அடிபடை இல்லாதது. புனித நூல்களும் தர்மத்திற்கு வெவ்வேறு அர்த்தங்களை சொல்கிறது. தர்மம் என்பது என்ன? என்று எந்த ஒரு ஞானி சொன்னதையும் இறுதியான கருத்தாக எடுத்துகொள்ள முடியாது. தர்மத்தின் உண்மை ஆழ்ந்த குகையோன்றில் புதைந்துள்ளது என்கிறார்.  
பிழைபதற்காக எதை வேண்டுமானாலும் செய்ய தனிமனிதன் மட்டும் அல்ல, பல நாடுகளும் கூட தன் வருமானதிற்காக எதையும் செய்ய தயாராக உள்ளன. தாய்லாந்து நாட்டில் சுற்றுலா பெருக, விபசாரம் ஒரு தொழிலாக அங்கீகரிக்க பட்டுள்ளது. சுவிசர்லாந்து நாட்டின் சட்டம், அந்த நாட்டு வங்கிகள், அதில் கணக்கு வைத்திருபவர் விபரத்தை ரகசியமாக பாதுகாக்க வழி செய்கிறது. சீனா அனைத்து பொருட்களுக்கும் போலிகளை தயாரித்து, பெரிய நிறுவனங்களையே ஆட்டம் கொள்ள செய்கிறது. நம் நாட்டில், பல மாநில அரசுகள் மது விற்பனை மூலம் வருமானம் ஈட்டுகிறது. பால் முதல் மீன் வரை கலப்படம் ( மீன்கள் கெடாமல் இருக்க ஃபொர்மால்டிகடு என்ற வேதிபொருள் (பிணங்களை பதபடுத்த பயன்படுத்தபடுவது, மயக்க மருந்தாக பயன்படுத்தபடுவது)
இது எல்லாம் எதை காட்டுகிறது? அடிப்படை சமுதாய நல்லொழுக்கமே மாறியுள்ளதை தான் காட்டுகிறது. தன் வலிமையை நிலைனாட்ட, வல்லரசுகள், வளரும் நாடுகளின் பொருளாதாரத்தை கடன் கொடுத்து, உலகமயமாக்கம், தனியார்மயமாக்கம் போன்ற கட்டுபாடுகளை விதித்து அந்த நாடுகளையே தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.
பதவியும் அதிகாரமும் நல்லதிற்கு பயன்படாமல் சுயநலதிற்காகவே பயன்படுத்தபடுகிறது. சமீபத்தில் சுயஉதவி குழு கூட்டமைப்பு ஒன்றில், நிர்வாகப்பொறுப்பை எற்றுள்ள ஒரு இளைங்கனின் செயலை பற்றி கேள்விபட நேர்ந்தது. அதுவும் தொண்டு நிறுவனம் என்ற வரையரைகுட்பட்ட சேவை மனபான்மை உள்ள நிறுவனம். இயல்பாகவே அவனிடம் சாதாரண விசயத்திற்கு கூட பொய் சொல்லும் குணம் அவனிடம் உள்ளதாக பலர் சொல்ல கெட்டு வருத்தபட்டேன். பணிபுரியும் இடத்தில் கருத்து வேறுபாட்டை வேண்டும் என்றே உருவாக்கி, பலரிடம் பிரிவினையை எற்படுத்தி, தான் என்ற அகந்தை மிக அதிகமாக செயல்படுத்தி தன் நிலை அறியாமல் ஆடும் அவன் மன நிலை அறிந்து மிகவும் வருத்தபட்டேன். அத்தகைய அவன் செயலை மேல் இடத்தின் கவனத்திற்கு எடுத்து சென்றாலும்  ’யாரும் உங்களை நம்ப மாட்டார்கள். அப்படியே நம்பினாலும் என் மீது நடவடிக்கை எடுக்கமாட்டார்கள். என் என்றால் என் தயவு அவர்களுக்கு தேவை” என்று வெளிபடையாகவே சவால் விடும் அளவிற்கு அவன் தலைகனம் உள்ளது. இத்தனைக்கும் அந்த கூட்டமைபின் சட்டபடி உண்மையான நிர்வாகிகள் அதன் தலைவிகளே (Board of Directors). செய்யாத பல விசயங்களை கொஞ்சமும் கூச்சமில்லாமல், பயமில்லாமல் செய்ததாக பொய் சொல்வதை பார்க்கும் பொழுதும், பொய் தான் உலகத்தில் செல்லுபடியாமோ என்று தோன்றுகிறது. இந்த இளைங்கன் இன்றைய உலகில் எது செல்லுபடியாகும் என்று தவறாக புரிந்துகொண்ட பல இளைங்கர்களின் மாதிரி. தர்மம் நேர்மை இவற்றின் மீது நம்பிக்கை இல்லாத சமூகத்தின் பிரதிபலிப்பு. இப்படி அவன் நடந்துகொள்வதர்கு யார் காரணம்? அவன் பெற்ற உலக அனுபவங்களே காரணமாக இருக்க முடியும். தவறான குடும்ப மற்றும் சமூக சுழல் ஒருவனை தவரான பாதைக்கு தள்ளி விடும். மேலும் அதன்படி நடந்து வெற்றியும் கிடைத்துவிட்டால், அத்தகயவன் நல்லவனாக மாறுவது சிரமம்.
தன் Difficulty of Being good புத்தகத்தில் குருசரன் தாஸ் ராமலிங்க ராஜு பற்றி சொல்லும் பொழுது, தன்னம்பிக்கை, புத்திசாலிதனம், உழைப்பு கொண்ட அவர் சத்யம் நிறுவனம், உலக அளவில் நல்ல பெயர் கொண்ட நிறுவனமாக செயல்படவைத்தார். பின்னாலில் ஐயாயிரம் கோடி ருபாய் அளவிற்கு பெரும் ஊழலை, ராமலிங்க ராஜு செய்ய வெரும் பேராசை மட்டும் காரணமாக இருக்காது என்கிறார். பணத்தை விட அது தந்த பெயரையும் புகழையும் எளிதில் விட யாருக்கும் மனம் இருக்காது. 89 வயதிலும் பதிவியை மகனுக்கு கூட விட்டுத்தர மனதிலாத மிக கேவலமான ஒரு அரசியல்வாதிக்கு இன்னமும் நம் நாட்டில் ஆதரவு இருக்கதான் செய்கிறது. 89 வயதிலும் பதவியை விட்டு தராமல் இருக்க எது காரணமாக இருகிறது ?. சாக்ரடிஸிடம் மன்னிப்பு கேட்டால் உயிர் பிச்சை தருவேன் என்று சொல்லபட்ட பொழுது, ”எனக்கு வயதாகிவிட்டது. எப்படியும் இன்னும் சில வருடத்தில் இறப்பேன். அதனால் என் கருத்தை மாற்றிகொள்ளமாட்டேன்” என்று சொன்ன அவர் எங்கே, இக்கால அரசியல்வாதி எங்கே.
நாடும் சமுதாயமும் எங்கே சென்று கொண்டிருக்கிறது? செல்லும் பாதை தவறு என்று புரிகிறது. திருத்தும் வழி தான் தெரியவில்லை. பிறரை திருத்த முடியவில்லை. நாமாவது நேர்மையாக இருக்கலாம் என்றால் அதற்கும் தடை வருகிறது. நேர்மையில்லாத சிலரின் நடவடிக்கைகள் நம் பாதையில் குறுக்கிடும் பொழுது, அதனை நேர்மையால் வெல்ல முடியாமல் போகலாம். பகவத்கீதை இதற்கு வழிகாட்டுகிறது. துரியோதனனர்கள் தலையெடுக்காமல் இருக்க, பாண்டவர்கள் சிறிது சுழ்ச்சி செய்தால் பரவாயில்லை என்பது கீதை உணர்த்தும் பாடம். தர்மம் வெல்லும்.. வெற்றி பெற மட்டும் அல்ல, நம்மை தற்காத்து கொள்ளவே நேர்மை தவறி நடக்க வேண்டிய கட்டாயத்திற்கு நம்மை காலசுழலை என்ன சொல்வது?
ஆனால் நேர்மையானவர்கள் சுயநலத்தின் காரணமாகவோ அல்லது பயத்தின் காரணமாகவோ அல்லது உலகை திருத்த முடியும் என்ற நம்பிக்கையை இழந்ததன் காரணமாகவோ அமைதியாக இருக்கும் காரணத்தினால், துரியோதனனர்கள் நாட்டில் அதிகம் ஆகிகொண்டே போகின்றனர். மீண்டும் கிருஷ்ண பரமாத்மா பிறக்க போவது இல்லை. பிறப்பாறா?
நேர்மையாக வாழ முடியுமா?

வியாழன், 26 ஜனவரி, 2012

இன்றைய காந்தி- ஜெயமோகன்

இன்றைய காந்தி

ஜெயமோகன் எழுதிய இன்றைய காந்தி புத்தகம் காந்தி யை பற்றிய விமர்சனகளுக்கு பதிலாக அமைந்துள்ளது. காந்தியை அவரது அத்தனைய  கிறுக்குதனங்களுடன் அப்படியே ஏற்றுகொள்கிறேன் என்று ஒரு இடத்தில ஜெயமோகன் சொல்லிருபது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது.

காந்திக்கு மகாத்மா என்ற பெயரை சூட்டியது கோண்டு என்ற மலைவாழ் மக்கள். பலரும் நினைப்பது போல ராபிந்தரநாத் தாகூர் அல்ல என்றும், காந்தி தான் மகாத்மா என்று அழைப்பதை விரும்பியதில்லை என்று ஜெயமோகன் குறிபிடுகிறார். காலில் விழும் கலாச்சாரத்தை அரசியலில் ஆரம்பித்துவைத்ததே காந்தி தான் என்ற குற்றசாட்டுக்கு பதில் அளிக்கையில் அவ்வாறு கூறுகிறார்.

காந்தியின் சாதியை குறிப்பிட்டு அவர் பனியா புத்தி உடையவர் என்ற கேள்விக்கு ஆம் அவர் பனியா புத்தி உடையவர் தான் என்று குறிபிடுகிறார். காந்தியின் வம்சம் சமண மதத்தை வழியாக கொண்டது. காந்தியின் 'புலன் ஒறுத்தல்' அதன் அடிப்படியிலேயே வந்தது. சமணர்கள் வியாபாரத்தில் சிறந்தவர்கள். நமது நாட்டுகோட்டை செட்டியார், வெள்ளாளர், சைவ முதலியார் போன்றவர்களும் சமணமததை ஒரு காலத்தில் பின்பற்றியவர்கள். பழங்காலத்தில் தொழிலை அடிப்படையாக கொண்டு சாதிகள் இயங்கதால், பல நெடுங்காலமாக ஒரு தொழிலை செய்து வந்தவர்களுக்கு அதற்குரிய அறிவும் திறமையும் இருப்பது இயற்கை தான். அந்த வகையில் காந்தி நிர்வாக திறமை மிக்கவராக , தலைமைத்துவ பண்பு உடையவராக இருந்தார். அனால் அவர் என்றும் தன சாதியை முதன்மைபடுத்தியது இல்லை என்கிறார் ஜெயமோகன்.    

காந்தியின் காமம் என்ற தலைப்பில் காந்தி காதலையும் காமத்தையும் அணுகிய விதம் ஒரு பிரேதத்தை அறுத்து பார்க்கும் சலனமற்ற முறையில் என்று ஜெயமோகன் சொல்கிறார். ஒரு முறை சபர்மதி ஆசிரமத்தில் காதல் வயப்பட்ட பெண்ணை பிராத்தனை கூடத்தில் அனைவர் முன்னிலையிலும் கேள்வி கேட்டு இரண்டு நாட்கள் உண்ணா விரதம் இருக்க செய்தார். அந்த பெண்ணின் மனம் பதிக்கப்படும் என்று அவர் எண்ணவில்லை ( அவள் காதலித்த ஆணுக்கு என்ன தண்டனை கொடுக்கபட்டது என்ற விவரம் நூலில் இல்லை). ஆனால் காந்தியே தன் 55  அவது வயதில் 47  வயது ஆனா சரளா தேவி என்ற பெண்மணியின் மேல் கொண்ட ஈர்பால் அவரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார். பின்னர் அனைவரது எதிர்ப்பால் குறிப்பாக அவரது மகன் இந்த முடிவால் கஸ்துரி பை மனவேதனை அடைந்துள்ளார் என்று பலமுறை எடுத்து குரிய பிறகு திருமணம் செய்யும் முடிவை கைவிடுகிறார். காந்தி பிறகு தாந்திரிக செயல்களில் ஈடுபட்டு நிர்வாணமாக பெண்களுடன் படுத்து உறங்கியதையும் பின்னர் தன் பேத்தியையே நிர்வாணமாக தன்னுடன் படுக்கவைத்து உறங்கியதையும், குறிப்பிடும் ஜெயமோகன் காந்தி இதற்கு கொடுத்த விளக்கத்தை ஆசிரமத்தில் உள்ள பலர் ஏற்கவில்லை என்கிறார். நம் இந்து சமயத்திலும் ஜென் புத்த மதத்திலும் இந்த தாந்த்ரிய முறைகள் கடைபிடிக்க பட்டதற்கு ஆதாரம் உள்ளதாக ஆசிரியர் கூறுகிறார்.( தற்காலத்தில் இதையே நித்தியானந்த செய்ததற்கு எவ்வளவு எதிர்ப்பு. காந்தி செய்தால் சரி. நித்தியானந்த செய்தால் தவறு. காந்தியின் மீது ஊடகங்களும் வரலாற்று பதிவுகளும் ஏற்படுத்தியுள்ள நம்பிக்கை அத்தகையது.)
காந்தியின் அகிம்சை மற்றும் சத்தியாக்ரகாம் ஹிட்லர் முன்னால் செளுபடியாகும என்ற கேள்விக்கு ஹிட்லர்ரின் பலம் ஜெர்மன் மக்கள் அவர் மீது வைத்த நம்பிக்கையால் ஏற்பட்டது என்றும், மக்கள் சக்த்தியே பின்னால் அவர் ராணுவ மற்றும் அதிகார பலம் ஏற்பட காரணமாக இருந்தது என்றும், காந்தியாலும் தன அஹிம்சை முறையால் மக்களின் நம்பிகையை வென்றெடுத்து வெற்றிபெற முடிந்திருக்கும் என்கிறார் ஜெயமோகன்
காந்தியின் மகன்கள் நால்வரில் ( ஹரிலால், மணிலால், ராமதாஸ் மற்றும் தேவதாஸ் ) ஆகிய நால்வரில் ஹரிலால் மட்டும் அனைத்து  கெட்ட குணங்களுடன் (குடி, சூது, விபச்சாரம், ஏமாற்றுதல் போன்ற காந்தி கு நேர்மாறான குணங்களுடன் இருந்தார் . மணிலால் தென்னாப்ரிக்கா அகிம்சா வழியில் விடுதலைக்கு போராட முக்கிய காரணமாக இருந்தார். நெல்சன் மண்டேலா காந்தியை அறிந்து கொண்டதே மணிலால் மூலமாக தான் என்று சொல்லிருகிரர். ராமதாஸ் காந்தி சேவாஷ்ரம் மூலம் தொண்டு செய்து வந்தார் என்றும் காந்தியுடன் கருத்து வேறுபாடு இருந்தாலும் நல்லவராக வாழ்தார். காந்தியின் பேரன்களும் நல்ல நிலையில் உள்ளனர். அறிவும் திறமையும் நல்ல பண்பும் கொண்டவர்களாக தான் பெரும்பாலவனர்கள் இருந்தனர் என்ற செய்தி, காந்தியின் வம்சா வழியினர் சாதனைகள் எதுவும் செய்ய வில்லை என்ற பொதுவான கருத்துக்கு எதிராக இருக்கிறது.

சே குவேரா புரட்சி வழியை தேர்ந்து எடுத்தாலும் அவரும் தநலம் இல்ல தலைவர் தானே. அவர் வழியும் கியூபா வில் வெற்றியை ஏற்படுத்தியுள்ளது. எனவே காந்திய அகிம்சா வழி மட்டும் தான் சிறந்தது என்று எப்படி கூற முடியம் என்ற கேள்விக்கு,  புரச்சியில் பெரும் வெற்றி ஒரு விபத்து போல எதிர்பாராமல் தான் நிகழும். அத்தகைய முறையில் வெற்றி பெற்றவர்கள் தங்கள் கருத்துகளை மக்கள் மீது திணிக்க முயல்வர். அது சரியான வெற்றி கிடையாது. சே தநலம் இல்லாதவர், தன்னமிக்கை, தைரியம் விடாமுயற்சி உள்ளவர். அனால் அவருக்கு அரசியல் அறிவு போதுமான அளவு இல்லை என்கிறார் ஜெயமோகன். காந்தியின் வழியே நிரந்தரமானது நன்மை தர கூடியது.
காந்தியின் மீதான பிற குறைகளாக சொல்லபடுவது
1. முதலாம் உலக போரின் பொது ஆங்கிலேயர்க்கு ஆதரவான நிலை எடுத்தது
2. கிலாபத் இயக்கத்திற்கு ஆதரவு தந்தது
3.இரண்டாம் உலக போரின் போது ஆங்கிலேயர்க்கு எதிரான நிலைபாடை எடுத்தது
3. சுபாஷ் சந்திர போஸ் காங்கிரஸ் தலைவராக விடாமல் தடுத்தது
4.  இரட்டை வாக்குரிமையை தலித் களுக்கு கிடைக்காமல் அம்பேத்கருக்கு எதிராக செயல்பட்டு பூனா ஒப்பந்தத்தை செயல்படுத்தியது
5.. சுதந்திரத்துக்கு பிறகு பாகிஸ்தானுக்கு தர வேண்டிய பணத்தை தர சொல்லி உண்ணாவிரதம் இருந்தது
 
இவை அனைத்திலும் காந்தியின் நிலைப்பாடு சரியே என்ற வாதத்தை ஜெயமோகன் எடுத்து வைக்கிறார்.
காந்தி- அம்பேத்கார் உறவை பற்றி சொல்லும் பொது இருவருமே பொதுநலம் மிக்கவர்கள், தங்கள் மக்களின் மேம்பாட்டிற்காக குரல் கொடுத்தவர்கள், ஒருவர் செய்ய தவறியதை மட்ட்றவர் செய்து இடைவெளியை நிரப்பியவர்கள், ஒருவரிடம் இருந்து மற்றவர் நல்ல விசயங்களை எடுத்துகொண்டவர்கள், தங்கள் முரண்களில் இருந்து நல்லது விளைவிக்க செய்தவர்கள். ஆங்கிலேயர்கள் காந்திக்கு எதிரான சக்தியாக அம்பேத்கரை பயன்படுத்தினர். அம்பேத்கர் ஆனிலேயே ஆதரவு நிலை கொண்டவர் என்று அருண் ஷோரி தன் Worshipping  false  Gods  என்ற புத்தகத்தில் ஆதரங்களுடன் பட்டியல் இடுகிறார். காஞ்சன் இல்லையா Why I am Not  a Hindu ? என்ற புத்தகத்தில் காந்தி ஆங்கிலேயருக்கு ஆதரவாக தலித் களுக்கு எதிராக செயல்பட்டதாக சொல்கிறார். ஆனால் இருவருமே மக்கள் நலனை முன்னிருத்தியே தங்கள் போராட்டத்தை செய்தனர் என்று ஜெயமோகன் குறிபிடுகிறார்               

தனக்கு தானே ஏறக்குறைய தினமும் எனிமா  கொடுத்து கொள்வது, தன மலத்தை தானே பரிசோதனை செய்வது, ஆடு பால் அருந்துவது போன்ற இயற்கை வைத்திய முறைகளில் காந்திக்கு இருந்த ஆர்வத்தை பற்றியும் நூலில் குரிபிடபட்டஉளது

காந்தியை பற்றிய சிறப்பான பல செய்திகளுக்காகவும் காந்தியை புரிந்து கொள்வதற்காகவும் இந்த புத்தகத்தை வாசிக்கலாம்.

ஜெயமோகன் சில இடங்களில் காந்தியை நியாய படுத்துவதாக தோன்றினாலும் அவரது இந்த முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது.

காந்தி மகாத்மா அல்ல ஒரு சராசரி மனிதன் தான் என்பது நூலை வாசித்தபிறகு எனக்கு தோன்றிய கருத்து.     

வியாழன், 5 ஜனவரி, 2012

ஏழாம் அறிவு



தமிழர்களை தமிழன் என்ற உணர்வை அரசியல் கட்சிகள் பயன்படுத்தி கொண்டு இருக்கின்றனர். ஒரு திரைப்படத்தின் வியாபாரத்திற்காக மிக கேவலமான முறையில் தமிழர்களை பயன்படுத்தியது ஏழாம் அறிவு படத்திற்காக தான் இருக்கும். போதிதர்மர் ஒரு தமிழர் என்பதை வியாபார பொருளாக மாற்றினர். கஜினி படம் ஏற்படுத்திய எதிர்பார்ப்பின் அடிப்படையிலேயே நான் அந்த படத்தை பார்த்தேன். போதிதர்மரை விடுங்கள் Genetics  பற்றிய எந்த அடிப்படை அறிவும் இல்லாமல் எடுக்கப்பட்ட படம் ஏழாம் அறிவு. புத்திசாலிதனமான ஒரு காட்சி கூட இல்லாத படம். படத்தின் திரைகதையை எப்படி எடுத்து செல்வது என்று குழம்பி வெறும் சூரியாவின் நடிப்பு மற்றும் பிரமாண்டத்தை நம்பி எடுக்கப்பட்ட படம். படத்தில் சரக்கு இல்லை என்பது முருகதாஸ் அண்ட் கோ விற்கு நன்றாகவே தெரியும். எனவே தான் தமிழ் உணர்வு வியாபாரத்திற்காக புத்திசாலிதனமாக பயன்படுத்த பட்டுள்ளது.

சைக்கிள் ஓட்ட தெரிந்தவனின் குழந்தை பழகாமல் தானும் சைக்கிள் ஓட்ட முடியாது. இந்த சின்ன லாஜிக் கூட இல்லாமல் Genetic  engineering  மூலம் தற்காப்பு கலையையும் மூலிகை மருத்துவ அறிவையும் ஒருவனுக்கு கிடைக்க செய்ய முடியும் என்பது முட்டாள்தனமானது. சரி சினிமா என்றாலே எதார்த்தத்தை எதிர்பார்க்க முடியாது என்றாலும் கஜினி யின் தரத்திற்கு இந்த படம் வரவே முடியாது. நோக்கு வர்மா காட்சிகள் சலிப்பை தான் தந்தது. வலிந்து திணிக்கப்பட்ட தமிழன் வசனங்கள் படத்துடன் ஒட்டவில்லை.
\
எந்திரன் படம் சுஜாதாவின் பக்கபலத்துடன் உருவாக்க பட்டது அதன் பலம். திரை உலகிற்கு சுஜாதாவை ஈடு செய்ய ஒருவர் வரும் வரை அறிவியல் சார்ந்த படங்களை திரையுலகம் தவிர்ப்பது நல்லது.

ஏழாம் அறிவு அடிப்படை அறிவில்லாமல் எடுத்த படம். குப்பை. ஆனந்த விகடனில் அதற்கு அளிக்கப்பட்ட மதிப்பெண் ஒரு தலைபட்சமானது 

வெள்ளி, 2 டிசம்பர், 2011

வட்டார போக்குவரத்து கழகத்தின் (RTO) ஆன் லை...ன் சர்வீஸ்








நாட்டின் மிக பெரிய லஞ்ச ஊழல் நடமாடும் வட்டார போக்குவரத்து கழகத்தின் (RTO) ஆன் லை...ன் சர்வீஸ் 80% இன்று காலை முதல் செயல்ப்படும். மீதமுள்ள ஆன்லைன் சேவைகளூம் டிசம்பர் 3ஆம் தேதி முதல் செய்யபடும். ஒவ்வொரு RTO அலுவுலகத்திலும் இப்பொழுது என்ன நம்பர் சீர்யல் ஓடுகிறது TN - 13 - XX - XXXX , என்ன வி ஐ பி நம்பர் இருக்கிறது, லைசன்ஸ் ஆன்லைன் அப்ளிகேஷன், உங்களின் டிரைவிங் லைசன்ஸ் தற்போதைய நிலமை, ஒவ்வொரு வாகனத்திற்க்கும் ரோடு டாக்ஸ் ஆன்லைனில் செலுத்துதல், கன்டக்டர் உரிமம் புதுபித்தல், புது வாகன் ரிஜிஸ்ட்ரேஷன் அப்ளிகேஷன், ஒட்டுனர் உரிமம் ரோடு டெஸ்ட் ஆன்லைன் அப்பயின்ட்மென்ட், மற்றூம் லோன் ஹைபோதிகேஷன் ஆர் சி புக்கில் இருந்து எடுக்க எந்த ஆர் டி ஓ ஆபிசுக்கு நீங்கள் செல்ல வேண்டும் மற்றூம் வண்டி ரிஜிஸ்ட்ரேஷன் டீட்டேயில்ஸ் எல்லாம் இனிமே நம் கையில், இனிமே புரொக்கர் வேண்டவே வேண்டாம், இந்த சேவை தான் நாம் எதிர்பார்த்த சேவை........... நாளை அல்ல்து நாளை மறு நாள் செய்திகளில் வரலாம் ஆனால் நீங்கள் இன்றே கலக்குங்கள்.

1.ஓட்டுனர் பழகுனர் உரிமம் மனு முன்பதிவு - Learners License Online Application - 
http://tnsta.gov.in/transport/appointment.do?_tq=890d1045ac27d24cb2b1732731085482

2.தொடக்க வாகன பதிவு எண் - Today What Number Series in your RTO - 
http://tnsta.gov.in/transport/rtoStartNoListAct.do

3.வாகன வரி விகிதங்கள் - Tax Rates Details - Vehicle Wise - 
http://www.tn.gov.in/sta/taxtables.html

4.நிர்வாக எல்லை அறிய - Know your RTO by Postcode - 
http://tnsta.gov.in/transport/know_RtoLoad.do

புதன், 22 ஜூன், 2011

நாற்றம் அடிக்கும் மலர்



மலர்கள் என்றால் அவற்றின் அழகு மற்றும் நறுமணம் தான் நினைவிற்கு வரும். பெண்களை மலர்களோடு ஒப்பிட்டு சங்க கால இலக்கியம் முதல் இக்கால சினிமா வரை பல பாடல்கள் இயற்றபட்டுளன. ஆனால் சில பெண்கள் மலர்களை போல நறுமணத்தை பரப்பாமல், இந்த சமூகத்தையே நாற்றமடிக்க செய்கிறார்கள் (கனிமொழி உங்களுக்கு நினைவில் வந்தால் அதற்கு நான் பொறுப்பில்லை). ஆனால் அழுகிய மாமிசத்தின் நாற்றத்தை கொண்ட மிக பெரிய பூ ஒன்று இயற்கையிலேயே இருக்கிறது. இந்தோனேசியாவின் சுமத்திர தீவை தாயகமாக கொண்ட Amorphophallus titanum என்ற செடியின் மலர் தான் அது . இந்த செடி " பிண செடி " என்றும் அழைக்கபடுகிறது . Araceae குடும்பத்தை செடி இது. நாம் அழகிற்காக வீட்டில் வளர்க்கும் Anthurium , Dieffenbachia and பிலோதேன்றோன்ஸ் போன்ற செடிகள் இந்த வகையை சார்ந்தது. அது சரி. ஏன் இந்த பிண செடி நாற்றத்தை வெளிபடுத்துகிறது ? சில வகை வண்டுகள் (carrion beetles), ஈக்கள் ( Flesh flies and sweat bees) ஆகியவற்றை தன்பால் ஈர்த்து, மகரந்த சேர்கை மூலம் இனபெருக்கம் செய்வதர்காக தான் இந்த நாற்றத்தை வெளிபடுத்துகிறது. இதற்காக அதிக சக்தியை செலவிட்டு பூவின் காம்பு பகுதியில் உள்ள சல்பர்ரை (Sulfur) அடிப்படையாக கொண்ட ஒரு வேதி பொருளை சூடு படுத்துகிறது. நன்கு வளர்ந்த பூங்கொத்து 7-12 அடி உயரமும் 3-4 அடி அகலமும் உடையதாக இருக்கும். இந்த பூ மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும். அழுகிய நாற்றம் பூ மலர்ந்த முதல் 8 மணி நேரம் மட்டுமே இருக்கும்.