பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 4 மார்ச், 2011

அலுவலகத்தில் புலி

காட்டை விட்டு வந்த புலி ஒன்று, தெரியாமல் ஒரு பெரிய நிறுவனத்தின் அலுவலகத்தினுள் நுழைந்து விட்டது. அது அந்த அலுவலகத்தில் இருந்த TOILET இல் தஞ்சம் புகுந்தது. அதனை யாரும் கவனிக்கவில்லை. மறு நாள் அதற்கு பசி எடுத்தது. எனவே TOILET ற்கு வந்த" CEO " வை கடித்து சாப்பிட்டுவிட்டது.
அலுவலகத்தில் யாரும்  " CEO " வை தேடவில்லை. வழக்கம் போல விடுப்பில் சென்று இருப்பார் என்று எண்ணி அனைவரும் தங்கள் வேலையே பார்த்தனர்.
மறு நாள் புலி TOILET ற்கு வந்த "General Manager " ரை அடித்து சாப்பிட்டுவிட்டது.
ஜெனரல் மேனேஜர் ரை காணோம் என்று யாரும் பதட்டபடவில்லை. அவர் வந்தாரா வரவில்லையா என்று கூட யாருக்கும் தெரியவில்லை.
மறு நாள் புலி அலுவலகத்தில் "Peon "  னாக வேலை பார்க்கும் ஒருவரை தின்றுவிட்டது. தங்களுக்கு கோப்புகளை கொண்டு வரும் மற்றும் எடுத்து செல்லும் வேலை மற்றும் " tea" வாங்கி வரும் வேலையை பார்க்கும்   "Peon " ஐ காணோம் என்றவுடன் அலுவலகமே பதற்றம் அடைந்தது. வருகை பதிவில் அவர் அலுவலகம் வந்தது உறுதியானது. அலுவலகம் முழுவதும் தேடினர். கடைசியாக  TOILET இல்   தேடிய பொழுது அங்கு புலியை பார்த்தனர். அனைவரும் சேர்ந்து புலியை அடித்து கொன்றுவிட்டு   "Peon " ஐ புலி அடித்து கொன்றுவிட்டதை எண்ணி வருந்தினர்.
 ஒரு அலுவலகத்தில் அனைவர்க்கும் உதவுபவராக நாம் இருக்க வேண்டும். நம் இருப்பை அனைவரும் உணரும் படி சிறப்பாக பணி செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால் நீங்கள் நிறுவனத்தின் " CEO " வாக இருந்தாலும்     "General Manager " ராக  இருந்தாலும் உங்கள் இழப்பு யாருக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.

ஒரு புத்தகத்தில் படித்து 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக