பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 4 மார்ச், 2011

ரமண மகரிஷியும் குரங்குகளும்

ரமண மகரிஷி ஒரு முறை தன் ஆசிரமத்தை வலம் வந்த பொழுது ஒரு மரத்தில் நிறைய குரங்குகளை கண்டார். மரத்தின் மீது தாவி குதித்து விளையாடிய அந்த குரங்குகளை பார்த்த மகரிஷி அந்த குரங்குகளை பார்த்து சில நல்ல கருத்துகளையும், நல் ஒழுக்க விதிகளையும் போதிக்க ஆரம்பித்தார். குரங்குகள் தங்கள் வேலையே பார்த்த படி இருந்தன. 

அந்த வழியே வந்த ரமண மகரிஷியின் சீடர்கள், மகரிஷியின் அந்த  செயலை பார்த்து என்ன ஆயிற்று நம் மகரிஷிக்கு? குரங்குகளுடன் பேசி கொண்டு இருக்கிறாரே என்று நினைத்தனர். அவரிடமே சென்று மகரிஷியே ஏன் குரங்குகளுக்கு போய் போதனைசெய்கிறீர்கள் என்று கேட்டனர். அவை என்ன நீங்கள் சொல்லவதை கவனிக்கவா போகிறது, அப்படியே கவனித்தாலும் நல்ல ஒழுக்கத்தை கடைபிடிகவா போகின்றன என்று கூறினார் .
இதனை கேட்ட ரமண மகரிஷி உங்களிடமும் தான் நான் நல்ல ஒழுக்கத்தையும் நல்ல கருத்துகளையும் சொல்லிக்கொண்டு வருகிறேன். யாரும் கேட்ட மாதிரியும் தெரியவில்லை, பின்பற்றிய மாதிரியும் தெரியவில்லை. அதனால் தான் குரங்குகலாவது , சொல்வதை  கேட்குமா என்று பார்த்தேன் என்றார் .

ரமண மகரிஷியின் சிஷ்யர்கள் வெட்கி தலை குனிந்தனர்   

புத்தகத்தில் படித்தது 

        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக