பிரபலமான இடுகைகள்

சனி, 19 மார்ச், 2011

ஊழல் செய்யாத கலைஞர்


இது முழுக்க முழுக்க கற்பனையே. படிப்பவர்கள் அனைவரும் ஜாலியாக எடுத்து கொள்ளுங்கள் 

திடிர் என இனி  ஊழல் செய்வதில்லை என கலைஞர் கருணாநிதி முடிவெடுக்கிறார். மறு நாள் காலை அவசர அவசரமாக தன் இரண்டு மனைவிகள், ஸ்டாலின், அழகிரி, கனிமொழி மற்றும் பேரன்களை வீட்டுக்கு அழைக்கிறார்.

 வீட்டில் அனைவரும் தேர்தலுக்காக சிறப்பு கூட்டமோ என்று வியந்தபடி அமர்து இருக்கின்றனர்.

கருணாநிதி எடுத்த எடுப்பிலேயே இனி ஆட்சிக்கு வந்தால் ஊழல் செய்வதில்லை என்று தான் முடிவெடுத்து உள்ளதாக கூறினார். இதை கேட்டவுடன் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கருணாநிதி இனி தன குடும்பத்தினர் யாரும் ஊழல் செய்யகூடாது என்றும், செய்தால் தானே காட்டி கொடுப்பேன் என்றும் கூறினார். 

இதை கேட்டவுடன் அழகிரி தன் செல்பேசியை எடுத்து யாருக்கோ போன் செய்தார். ஸ்டாலினுகோ லேசாக நெஞ்சு வலிப்பது போல இருந்தது. 

ராஜாத்தியும் தயாளுவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். இவள் எதாவது தலைவரை குழப்பிருப்பலோ  ? என்று ஒருவரை ஒருவர் நினைத்தனர்.

அழகிரி செல்பேசியில் பேசியதை கவனித்த கருணாநிதி "இந்த நேரத்தில் கூட என்ன போன் ? செல்பேசியை வைத்துவிட்டு சொல்வதை கவனி" என்று கலைஞர் சொல்கிறார்.

 பேசிகொண்டிருக்கும் பொழுதே மருத்துவர் குழு ஒன்று கருணாநிதி இல்லத்தில் நுழைந்தது.

கருணாநிதிக்கு ஏதோ உடல் நலம் சரியில்லை என்று அழகிரி செல்பேசியில் தகவல் தெரிவித்ததாகவும் அதனால் தான் தாங்கள் வந்திருப்பதாகவும் மருத்துவர்கள் கூறினார். அதற்கு கருணாநிதி நான் இன்னும் பேசி முடிக்க வில்லை. மேலும் உடல் நிலையும் சரியாக தான் உள்ளது என்றார்.

ஆனால் அழகிரி மருத்துவர்களிடம் சென்று ரகசியமாக ஏதோ சொன்னார். உடனே ஒரு மருத்துவர் உங்கள் படபடப்பை குறைக்க ஒரு ஒரு ஊசி மட்டும் போடுகிறேன் என்றார்.

சரி என்று கருணாநிதியும் எற்று கொண்டார். ஊசி போட்டவுடன் கருணாநிதி மயக்கம் அடைந்தார்.
உடனே மருத்துவர்கள் அருகில் சென்று சில பரிசோதனைகளை செய்தனர்.

பின்னர் அழகிரியிடம் வந்து " நீங்கள் சந்தேகப்பட்டது சரி தான். உங்கள் அப்பாவிற்கு மனநோய் முற்றியுள்ளது " அது சரி எப்படி இதை நீங்கள் கண்டுபிடித்தீர்கள் என்று கேட்டார்கள்.

 தன் தந்தைக்கு ஊழல் தான் உயிர் மூச்சு.என்றும்,  ஊழல் செய்யமாட்டேன் என்று அவர் உளறிய உடனேயே சந்தேகம் வந்தது என்று அழகிரி கூறினார் .

ஸ்டாலின் இதை கேட்டு பெருமூச்சி விட்டார். என்னை விட தந்தையை நீ தான் மிக சரியாக புரிந்து வைத்துள்ளாய் என்று அழகிரியை பாராட்டினார் 

திடீர் என மன நோய் வந்தது ஏன் ? என்று பின்னர் ஆராய்ந்து பார்த்ததில் , முதல் நாள் மாலை ஜெயலலிதா, கருணாநிதிக்கு போன் செய்தார் என்று தெரியவந்தது.

சரி. தொலைபேசியில் மன நோய் வரும்படி ஜெயலலிதா என்ன சொன்னார் ?

கருணாநிதி நடந்ததை எல்லாம் மறந்துவிடுவோம். சமிபகாலமாக உங்கள் ஆற்றலை கண்டு நான் வியந்து வருகிறேன். நானும் தனியாக தான் இருக்கிறேன். நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா ? தமிழ் நாட்டு மக்கள் இளிச்சவாயர்கள். உங்கள் நான்காவது திருமணத்தையும் ஏற்றுகொள்வார்கள்.நாம் இணைந்தவுடன் நம் கட்சிகளையும் இணைத்து விடுவோம் என்றாராம் .

இதை கேட்டவுடன் அதிர்ச்சியில் மனநோய் வந்திவிட்டது  

போன் செய்து வைத்து விட்டு சசிகலாவும் ஜெயலலிதாவும் விழுந்து விழுந்து சிரித்ததாக உளவு துறை பிற்பாடு செய்தி சொன்னதும் தான், கருணாநிதியை பைத்தியமாக ஜெயலலிதா செய்த சதி இது என்று தெரிய வந்தது   

பின் குறிப்பு : கருணாநிதிக்கு மனநோய் என்பதை மாறன் சகோதரரர்கள் நம்பவில்லை. கருணாநிதி ஏதோ ஒரு காரணத்திற்காக நாடகம் ஆடி இருக்கிறார்கள் என்பது அவர்கள் எண்ணம் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக