பிரபலமான இடுகைகள்

புதன், 30 மார்ச், 2011

ஓடும் நதியை போல

புத்தக விமர்சனம்


 ஓடும் நதியை போல 

மதுரை வாசகர்கள் குழுவின் உறுப்பினராக இருக்கும் எனக்கு கடந்த 20௦.02.2011 அன்று Paulo Coelho எழுதிய Like the Flowing River என்ற புத்தகத்தை மதிப்பீடு செய்யும் வாய்ப்பு கிடைத்தது. நான் படித்ததில் மிகவும் பிடித்த புத்தக வரிசையில் இந்த புத்தகத்திற்கு என்றும் என் மனதில் இடம் இருக்கும்.

Paulo Coelho பிரேசில் நாட்டை சேர்ந்த  பிரபல எழுத்தாளர். The Alchemist என்ற புத்தகத்தின் மூலம் உலக புகழ் அடைந்தவர்.  வாழ்வின் லட்சியத்தை கனவாக உருவகபடுத்தி, அந்த கனவின் மீது நம்பிக்கை வைத்து அதை நோக்கி ஒரு ஆடு  மேய்ப்பவன் செல்வதை போன்ற கதை இது. 

Like the Flowing River என்ற இந்த புத்தகம் பல செய்திதாள்களிலும் பத்திரிகைகளிலும் Paulo Coelho எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. மொத்தம் 227 பக்கம் கொண்ட இந்த புத்தகத்தில், 102 சிறு கட்டுரைகள் இருகின்றது. ஒவ்வொரு கட்டுரையும் ஒன்றிலிருந்து மூன்று பக்கங்களில் அடங்கிவிடும். புத்தகத்தின் விலை ருபாய் 295 /  


புத்தக ஆசிரியர் தன சொந்த வாழ்கை அனுபவம் மற்றும் இந்து மதம், பௌத்தம் ,கிறுத்துவ மதம், இஸ்லாம் போன்ற மதங்களில் இருக்கும் ஆன்மீக கருத்துகளை அடிப்படியாக கொண்டு கட்டுரையை அமைத்திருக்கிறார். 
  
இந்த புத்தகத்தில் உள்ள சில கட்டுரைகளை பற்றி பாப்போம்    


  1. யுத்தத்திற்கு தயாரானேன் - சில சந்தேகங்களுடன் (Prepared to battle with few doubts )- ஒரு காலை பொழுதில் தன் விட்டு அழகான தோட்டத்தில் உள்ள களை செடிகளை ஒரு களை எடுக்கும் கருவி கொண்டு எடுத்துகொண்டிருந்தார். அப்பொழுது அவருக்கு ஒரு சிந்தனை தோன்றியது. இந்த உலகில் பிறந்த அனைத்து உயிர்களுக்கும் வாழ உரிமை உண்டு. அதனால் இந்த களை செடிக்கும் வாழும் உரிமை உண்டு. களை செடிகளின் விதை காற்று, தேனீ, பட்டாம்பூச்சி மற்றும் பிற பூச்சிகள், சில விலங்குகளின் உதவியோடு தொலைதூரம் எடுத்து செல்லப்பட்டு, பல இடங்களில் பரவி வளர்கின்றன. இயற்கை ஒரு இனம் அழியாமல் தொடர செய்திருக்கும் ஏற்பாடு இது. இதை கொல்ல நான் யார் ? மாற்று சிந்தனையாக இந்த களைகள் வளர்ந்தால், தான் கஷ்டப்பட்டு வளர்க்கும் அழகான செடிகளை அழித்துவிடும். இதனால் நல்ல பயனை தரும் செடிகளுக்கு பாதிப்பு உண்டாகும் என்றும் தோன்றியது. அவரின் மன குழப்பத்திற்கு தீர்வாக பகவத் கீதை உதவிக்கு வந்தது. கிருஷ்ணன் அர்ஜுனனிடம் " உன்னால் ஒரு உயிரை கொல்ல முடியும் என்று நினைக்கிறாயா ? உண்மையில் கொலை செய்வது நீ அல்ல. இந்த செயலை செய்ய உன்னை வழிபடுத்துவது நான் தான். யாராலும் யாரையும் கொல்ல முடியாது. Paulo Coelho தயக்கம் இல்லாமல் தன் செயலை தொடருகிறார்.
  2. நம்மை பென்சிலுடன் தொடர்புபடுத்தி எழுதிருக்கும் இன்னொரு கட்டுரை. ஒரு பென்சில் தன செயலை சரியாக செய்வதற்கு அதனை இயக்கும் கை உதவியாக இருக்கிறது. அது போல மனிதன் தன செயல்களை சரியாக செய்ய கடவுளின் கை உதவி புரிகிறது.பென்சிலால் எழுதும் பொழுது அதன் கூர் மழுங்கி சரியாக எழுத முடியாமல் போகும். அப்பொழுது அதனை கூர்மை படுத்தி மீண்டும் எழுதுவோம். அது போல நமக்கு ஏற்படும் துன்பங்களையும் கஷ்டங்களையும் நம்மை கூர்மை படுத்தி கொள்ள வந்தவையாக நினைத்து நம்மை பண்படுத்தி கொள்ள வேண்டும்.
  3. பென்சிலால் எழுதும் பொழுது தவறு ஏற்பட்டால் அழித்து விட்டு மீண்டும் தவறு ஏற்படாமல் எழுதுவோம். அது போல வாழ்கையில் தவறு செய்தால் திருத்திக்கொண்டு மீண்டும் தவறு செய்யாமல் வாழவேண்டும். பென்சிலின் வெளியே உள்ள மரத்தை விட உள்ளே இருக்கும் கரி குச்சி தான் முக்கியம். அது போல நம் உள்ளே இருக்கும் ஆற்றல் தான் வாழ்வதற்கு உதவி செய்யும். பென்சில் தான் எழுதியதற்கான அடையாளத்தை விட்டு செல்லும். நாமும் நாம் வாழ்ந்த  தடத்தை விட்டு செல்ல வேண்டும். 
  4. செங்கிஸ் கான் என்ற மங்கோலிய பேரரசர் ஒரு முறை வேட்டையாட சென்ற பொழுது நடந்த சம்பவத்தை Paulo Coelho குறிப்பிடுகிறார். அவர் வேட்டையாட செல்லும் பொழுது Falcon (கழுகை போன்ற ஒரு பறவை) என்ற பறவையை உடன் அழைத்து செல்வது வழக்கம். ஒரு முறை தன் குழுவுடன் வேட்டையாடசென்று எதுவும் கிடைக்காமல் திரும்பி தன் இருப்பிடத்திற்கு வந்தார். தூக்கம் வரவில்லை என்பதால் அவர் மட்டும் தன் Falcon பறவையுடன் மீண்டும் வேட்டைக்கு சென்றார். சென்ற இடத்தில அவருக்கு தாகம் எடுத்தது. அப்பொழுது ஒரு மலையில் இருந்த பாறை இடுக்கில் இருந்து சொட்டு சொட்டாக தண்ணீர் வருவதை பார்த்தார். தான் எப்பொழுதும் வைத்திருக்கும் சிறிய கோப்பையை எடுத்து அதில் மிக மிகபொறுமையாக தண்ணீரை சேகரித்தார். அதனை அவர் பருக சென்ற பொழுது Falcon பறவை வேகமாக பறந்து வந்து அந்த கோப்பையை தட்டி விட்டது. எரிச்சல் அடைந்த அவர் மீண்டும் கோப்பையை எடுத்து பொறுமையாக நீரை சேகரித்து பருக சென்றார். மீண்டும் பறந்து வந்த அந்த பறவை தண்ணீரை தட்டி விட்டது.    செங்கிஸ் கான் கடும் கோபம் அடைந்தார். இந்த முறை தன் வாளை உருவி ஒரு கையில் தயாராக வைத்திருந்து மறு கையில் கோப்பையில் மீண்டும் தண்ணீரை பிடித்து பருக சென்றார். இம்முறையும் Falcon பறவை கோப்பையை தட்டிவிட்டது. கோபம் கொண்ட அவர் தன் வாளால் அந்த பறவையை வெட்டி கொன்று விட்டார். பின்னர் கோப்பையை எடுத்து நீரை பிடிக்க பார்த்த பொழுது சொட்டு சொட்டாக வந்த நீரும் நின்று போய் இருந்தது. எனவே அவர் அந்த பாறையின் மேல் ஏறி பார்க்கலாம் என்று மேலே ஏறினார். அங்கு அவர் பார்த்த காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  அங்கு இருந்த ஒரு சிறிய சுனில் நீர் இருந்தது. ஆனால் அந்த நீரில் ஒரு மிக விசத்தன்மை வாய்ந்த ஒரு பாம்பு செத்து கிடந்தது. தன் உயிரை காப்பாற்ற நினைத்த Falcon பறவையை கொன்று விட்டோமே என்று அவர் மிகவும் வருத்தப்பட்டார். தன் நாடு திரும்பிய அவர் தங்கத்தால் ஒரு பாலகன் பறவையை செய்தார். அதன் இறகு ஒவ்வொன்றிலும் ஒரு கருத்தை பதிந்தார். "உங்கள் உண்மையான நண்பன் உங்களுக்கு கெடுதல் செய்தாலும் அவன் நண்பனே ஆவான்"    கடும் கோபத்தில் எடுக்கும் எந்த முடிவும், செய்யும் எந்த செயலும் அழிவை உண்டாக்கும்.      
  5. ஒரு சராசரி மனிதனின் தினசரி வாழ்கையை அவர் பதிவு செய்து இருப்பதை படித்தால் பெரும்பாலனவர்களுக்கு தங்களை கூறுவதை போல தோன்றும். 
  6. பிரான்ஸ் நாட்டின் செய்தி தாள் ஒன்றில் மனிதன் ஒருவன் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இறந்து கிடந்த செய்தி வெளியானது. அந்த மனிதன் இறந்து 20௦ வருடம் கழித்து தான் அவனின் பிணம் கண்டுஎடுக்கபட்டது. இருபது வருடங்களாக அவன் மனைவி கூடவா அவனை தேடவில்லை? என்று வியந்தார். பின்னர் இருபது வருடங்களாக யாரும் தேடாத மனிதனாக அவன் வாழ்க்கையை நினைத்து வேதனைப்பட்டார்.அனாதையாய் பிறப்பதற்கு விட அனாதையாய் சாவது கொடுமை. அத்தகைய வாழ்வை நாம் வாழ கூடாது என்பது இந்த செய்தி உணர்த்தும் குறிப்பு.
  7. இன்னொரு கட்டுரையில் தன் வாழ்நாளில் பணி ஓய்வு பெற்ற பிறகு பல வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் என்பதற்காகவே பொருள் ஈட்டிய ஒரு பெண்மணி, பக்கவாதம் வந்து ஒரு அறையில் முடங்க நேர்ந்த செய்தியை சொல்கிறார். அந்த பெண்மணி அந்த நிலையிலும் ஒரு வினோதமான உயிலை எழுதுகிறார். தான் இறந்த பிறகு தன்னுடைய அஸ்தி ௧௪௧ நாடுகளுக்கு எடுத்து செல்லப்பட்டு அங்குள்ள நீர்நிலைகளில் கரைக்கப்படவேண்டும் என்பதே அது. தன் தாயின் ஆசை படி அவர் மகன் அதனை செய்து முடித்த செய்தி ஆச்சிரியத்தை அளிக்கும். 
  8. வாழ்க்கையில் ஒரு குறிக்கோளை அடைவதை மலை ஏறுவதுடன் ஒப்பிட்டு Paulo Coelho எழுதிய கட்டுரையும் நன்றாக இருந்தது 
  9. இன்னொரு கட்டுரையில்நாம் வாழ்கையை நாம் தான் முடிவு செய்யவேண்டும் என்பதை உங்கள் தோட்டத்தை நீங்கள் தான் பயிர் செய்ய வேண்டும் என்றும் அப்படி இல்லாவிட்டால் என்னஆகும் என்றும் குறிபிடுகிறார். 
மென்மையாக மனதை தொடும் புத்தகம் இது. படித்து பயன்பெறுங்கள்   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக