பிரபலமான இடுகைகள்

வியாழன், 17 மார்ச், 2011

கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி


திருச்சியில் இருந்து மதுரை வரும் வழியில் இருக்கும் துவரங்குறிச்சி (மணப்பாறை தாலுக்கா)கிராமம் அப்படி ஒன்றும் புகழ் வாய்ந்ததல்ல . அனால் விவரம் அறிந்தவர்கள் அந்த கிராமத்தில் பேருந்து நின்றால் மணப்பாறை முறுக்கு வாங்குவார்கள். எப்பொழுது நான்கு வழி சாலை வந்ததினால், பெரும்பாலும் பேருந்துகள் துவரங்குறிச்சி கிராமத்தினுள் செல்வதில்லை.
துவரங்குறிச்சியை சுற்றி உள்ள கிராமங்களில் பச்சை மிளகாய் சாகுபடி  அதிகம். அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை கூட மிளகாய் சீசன் கலை கட்டும். மிளகாயை தவிர தக்காளி, வெண்டை, கத்திரி போன்ற பிற காய்கறிகளும் சாகுபடி செய்யப்படும். பெரும்பாலும் கிணற்று பாசனத்தை நம்பியே காய்கறி விவசாயம் இருந்தது.

மிளகாயை பொறுத்தவரை K-1 மற்றும் K-2 ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்து வந்தனர். அதில் ஓரளவு லாபமும் பெற்று வந்தனர் . இடைத்தரகர்கள் காய்கறிகளை வாங்கி ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு எடுத்து செல்வர் . 
ஆனால் 1990 களில் மிளகாய் சாகுபடியில் ஒரு மாற்றம் வந்தது.

பல தனியார் நிறுவனங்கள் ஹைப்ரிட் எனப்படும் ஒட்டு ரக மிளகாய் ரகங்களை அதிக விளம்பரபடுத்தி விவசாயிகளை கவர்ந்தனர் . பொதுவாக புதிய இரகங்களோ , உரங்கலோ, பூச்சி மருந்துகளோ வந்தால் அவற்றை விவசாய்கள் தயக்கத்துடன் தான் பயன்படுத்துவார்கள். சக விவசாயி அடையும் பயனை பார்த்தே முழுவதுமாக மாற்றம் அடைவர். எதில் கிராமத்தில் உர கடை வைத்திருக்கும் நபரின் பங்கும் அதிகம். விவசாய்கள் , அரசாங்க விவசாய அதிகாரிகளையோ , அல்லது விவசாய ஆராய்ச்சி நிலையதில்லிருந்து தரும் பரிந்துரைகளை நம்புவது இல்லை ( அவர்கள் சரியாக செயல்படுவதில்லை என்பது வேறு விஷயம் ). உரக்கடைகாரரை தன் ஏதோ வேளான் விஞ்ஞானி அளவிற்கு மரியாதை கொடுப்பர் .

இப்படி தான் மிளகாய் மட்டும் அல்ல பிற காய்கறிகளிலும் ஒட்டு இரகங்கள் கிராமத்திற்குள் நுழைந்தன. மிளகாயை பொறுத்த, புதிய ஒட்டு ரகங்களில் சில அமோகா விளைச்சலை தந்தன. ஒரு ஏக்கரில் (100௦௦ சென்ட்) வரும் விளைச்சல்  வெறும் பத்து சென்டிலேயே கிடைத்தது. மிளகாய் விதையின் விலை பத்து மடங்கு கூடுதல் என்பது , விவசாயிகளுக்கு பெரிய விசயமாக படவில்லை. இரண்டு வருடத்திலேயே அனைவரும் ஒட்டு ரகங்களுக்கு மாறினர்.

ஆனால் பிரச்னை பிறகு தான் ஆரம்பித்தது . முன் எப்பொழுதும் இல்லாத வகையில் மிளகாய் பயிரை விதவிதமான பூச்சிகளும் நோய்களும் தாக்க ஆரம்பித்தன. இரண்டு வாரத்திற்கு ஒரு முறை மிளகாய் பறித்ததால், அதற்கு தகுந்தபடி உர செலவும் அதிகரித்தது.

விவசாயிகள் புதுசு புதுசாக பூச்சிகளும் நோய்களும் தாக்க ஆரம்பித்ததினால், நோய் அல்லது பூச்சி பாதித்த செடியையே உர கடைக்கு எடுத்து வந்து ஆலோசனை கேட்டனர்.. 

நம் உரகடைகாரர்களும் ஏதோ மிளகாய் சாகுபடி பற்றி அனைத்தையும் கரைத்து குடித்ததை போல பேசுவர். அவர்களுக்கு அனுபவ அறிவு உள்ளது என்பது உண்மை. ஆனால் எந்த நேரத்தில் அவர்களது வியாபார மூளை தான் வேலை செய்யும்.                

ஒரு மிளகாய் செடியை அசுவினி என்ற பூச்சி தாக்கி உள்ளது என்று வைத்துகொள்வோம். எது சாறு உறிஞ்சும் பூச்சி வகையை சார்ந்தது. எதற்கு Moncrotophos என்ற பூச்சி கொல்லி மருந்தை பயன்படுத்தினால் போதும். ஆனால் உர கடைகாரர் தன் கடை உதவியாளரிடம் ஒரு பூச்சி மருந்து ( பெரும்பாலும் இது அதிக வீரியம் உள்ளதும், இரு பூச்சிகொல்லி மருந்துகளின் கலவையாகவும் இருக்கும்), ஒரு பூஞ்சான கொல்லி .(fungicide), ஒரு நுண்ணூட்ட சத்து மற்றும் தங்கள் தலையில் கட்டப்பட்ட விற்கமுடியாத ஏதோ ஒரு இயற்கை சார்ந்த பூச்சி கொல்லி போன்ற அனைத்தையும் எடுக்க சொல்வார். பின்னர் அதை எல்லாம் அடித்தல் தான் பல நாட்கள் மிளகாய் பயிர்                பூச்சி தாக்குதல் இல்லாமல் இருக்கும் என்று கூறுவார்.

இத்தனை மருந்தையும் கலந்து அடித்த பிறகு மிளகாய் செடிகள் பூச்சு நோய் தாக்குதலில் இருந்து அதிக பட்சம் இரு வாரங்கள் தப்பிக்கும். விவசாயிகளை பொறுத்த வரை போச்சி மருந்து அடித்து செல்லும் பொழுது. உடனேயே பூச்சிகள் செத்து விழுவதை பார்க்கவேண்டும். எந்த மனோஇயல்பையும் உர கடைகாரர் நன்கு உணர்திருபார்.

உர கடைக்காரர் கல்லா நிரம்பி வழிய ஆரம்பிக்கும். பூச்சி மருந்து, உரம், விதை விற்பனை நிறுவனங்களும் அதன் விற்பனை அதிகாரிகளும் மகிழ்ச்சியில் துள்ளுவர் .

ஆனால் விவசாயி ? தன் விவசாய செலவுகள் தன்னையும் அறியாமல் எங்கோ போய் நிற்கும் பொழுது தான், அதிக விளைச்சல் கிடைத்தாலும் , அதனால் தனக்கு பயன் இல்லை என்பதை உணர்வான். அதிகமாக விளையும் காரணத்தினால் விற்பனை விளையும் குறையும். அழுகும் தன்மை வாய்ந்தது என்பதால் வியாபாரி கேட்கும் விலைக்கே தரவேண்டிய சுழல் ஏற்படும்.
புத்திசாலிதனமான சில விவசாயிகள், அதிக மூட்டை இருப்பதால் தங்கள் இருவரோ அல்லது மூவரோ சேர்ந்து , ஒரு TATA 407 வண்டியை வாடகைக்கு அமர்த்தி ஒட்டஞ்சத்திரம் மார்கட்டிற்கு கொண்டு செல்வர். ஆனால் அங்கும் வியாபாரிகளால் எமாற்றபடுவது உண்டு.

அப்படி சென்றால் ,ஒட்டஞ்சத்திரம் ஊரில் உள்ள மது மட்டும் உணவு விடுதியில் பணத்தை செலவிடுவார். இவர்களை நம்பி அங்கு சுற்றி திரும்  விபச்சாரிகளிடம் பணத்தை இழப்பதும் உண்டு.

அதிக காய்கறிகள் விளைததினால் பலர் கடன் வாங்கி TATA 407 வாகனத்தை வாங்கினார்கள். துவரங்குறிச்சி மற்றும் அதன் சுத்து வட்டார கிராமங்களில்  வாழும் விவசாயிகளின் வாழ்கை, முன்னேறியதோ எல்லையோ, விவசாயிகள் சாகுபடி செய்யும் ஒரு பயிரின் இரகத்தை,வியாபார நோக்கத்தோடு சில நிறுவனங்கள் மாற்றியதால் உர கடைக்காரர் , விதை ,பூச்சு மருந்து , உரம் விற்பனை நிறுவனங்கள் , இடைதரகர்கள் , வாகன முதலாளிகள் முதலியவர்கள் பிழைத்தனர்.

நான் இங்கு பதிந்துள்ளது ஐந்து வருடங்களுக்கு முன்னால் களத்தில் கண்ட மாற்றங்கள். புதிய ஒட்டு இரகங்களின் விளைச்சலை நானும் ஆச்சிரியத்துடன்  பார்த்தேன். பின்னர் விவசாயிகள் கண் எதிரே எமாறுவதையும்,ஏமாந்து கொண்டிருபதையும் பார்த்தேன் .

1990 களுக்கு பிறகு உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் போன்ற கொள்கைகளை இந்திய அரசு கடைப்பிடித்து வருகின்றது . Monsanto , Syngenta போன்ற வெளிநாட்டு கம்பனிகள் நேரடியாக விதை மற்றும் பூச்சு மருந்து விற்பனையில் இந்தியாவில் இறங்கின.
இந்திய நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரம் வளர்ச்சி அடைதிருந்தாலும், தொழில் துறை மற்றும் சேவை துறை தான் வளர்ச்சி கண்டு வருகிறது. நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியில் விவசாயத்தின் பங்கு குறைந்துகொண்டு வருகிறது.. கிராமப்புற விவசாயிகளின் வாழிவிலும் பெரிதாக மாற்றம் இல்லை.
நீங்கள் நகரத்தில் இருந்தாலும் கடந்த பத்து ஆண்டுகளில் மிக நீளமான மிளகாய்களையும் , வெளிர் பச்சை முதல் கரும் பச்சை வரை பல நிறங்களிலும் வடிவங்களிலும், காரதன்மையில் வித்தியாசத்துடன் மிளகாய்கள் வருவதை உணர்திருந்தால், அதன் பின்னணி இது தான்.

கூடுதலாக நீங்கள் இப்பொழுது வாங்கும் மிளகாய் மட்டும் அல்ல பிற காய்கறிகளும் அதிக அளவு பூச்சி கொல்லி மருந்து தெளிக்கப்பட்டு வளருபவை என்பதை நினைவில் கொள்ளுங்கள் .



      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக