பிரபலமான இடுகைகள்

வியாழன், 17 மார்ச், 2011

நீங்கள் யார் -2

இந்த  பதிவை படிக்கும் முன் கீழ்கண்ட பதிவை படிப்பது நலம்.


நீங்கள் யார் என்று நீங்களாகவே உங்களுக்கு ஏற்படுத்திகொள்ளும் அடையாளம் மிகவும் மேலோட்டமானது. எப்பொழுதும் பொருட்களுடன் தொடர்புபடுத்தியே உங்களை உங்கள் ஆணவம் சிந்திக்கசெய்கிறது. (நான், எனது, என்னுடையது என்ற எண்ணம் )
ஆணவத்திற்கு பொருள் மற்றும் கட்டமைப்பு ஆகிய இரு தன்மைகள் உண்டு.  உதாரணத்திற்கு உங்களுக்கு மிகவும் பிடித்தமான உடை ஒன்று உள்ளது என்று வைத்து கொள்ளுங்கள். அந்த உடை தான் உங்கள் ஆணவத்தின் பொருள். அதன் மீது உள்ள பிடித்தம் தான் கட்டமைப்பு. உங்களுக்கு பிடித்தது வேறு ஒருவருக்கு பிடிக்காமலும் இருக்கலாம். ஆனால் பொருட்கள் மாறலாம். அந்த கட்டமைப்பு மாறாது.
சரி நீங்கள் விரும்பும் பொருள் உங்களீடம் இருந்தால் மட்டும் நீங்கள் ( உங்கள் ஆணவம்) திருப்தி அடையுமா? அடையும். ஆனால் அந்த திருப்தி மிகவும் மேலோட்டமானது. நீண்ட நாட்கள் நிலைத்தும் நிற்காது. அந்த திருப்தி என்ற எண்ணத்தின் உள்ளே திருப்தி இல்லாமை என்ற நிலை தான் ஆழ் மனதில் உள்ளது.  இது பத்தாது இன்னும் வேணடும் இன்னும் வேண்டும் என்ற எண்ணம் ஆழ் மனதில் இருக்கிறது.
ஒரு பொருள் கிடைத்துவிட்டால் அந்த திருப்தி சில நாட்கள் மட்டும் இருக்கும். மனம் வேறு பொருட்களை நாட ஆரம்பிக்கும். இந்த இன்னும் வேணடும் என்ற ஆணவம் தான் பொருட்களின் மீது பற்று வைக்கும்ஆணவத்தை விட மிக மோசமானது. இந்த எண்ணம் என்றும் ஒருவனை மகிழ்ச்சியில்லாமல் வைக்கும்.
பல நேரங்களில் பல பொருட்கள் மீது ஆசை வரும். சில நேரங்களில் அந்த தேவை என்ன எதற்காக என்பது கூட தெளிவாக நமக்கு தெரியாது. ஆனால் ஏதோ வேணடும் என்ற எண்ணம் இருந்துகொண்டே இருக்கும். இந்த நிலையில் நம் கையில் இருக்கும் பொருட்களை நினைத்து திருப்திபடமாடோம். இல்லாத ஒன்றையே நினைத்து கொண்டிருப்போம்.

இதனால் மகிழ்ச்சி இழந்து, கோபம், பயம், பொறாமை, படபடப்பு, விரக்தி போன்ற எண்ணங்களால் வாழ்வை வீணடிப்போம்.

வாழ்வில் இருக்கும் உண்மையான சந்தோசத்தை உணராமலேயே திருப்தி இல்லாமல் வாழ்ந்து இயற்கை எய்துவோம். இறக்கும் தருணத்தில் தான் நாம் சேர்த்து வைத்த பொருள் நமதில்லை என்பதை உணருவோம். அதற்குள் வாழ்கை முடிந்திருக்கும்.

உங்களுக்கு பிடித்தமான வைர மோதிரம் இருக்கின்றது என்று வைத்து கொள்வோம் (அல்லது உங்களுக்கு மிகவும் பிடித்த பொருள் ஒன்றை நினைவுபடுத்தி கொள்ளுங்கள் ).

கீழ் கண்ட கேள்விகளை உங்களுக்குள் கேட்டு பாருங்கள்
  1. அந்த பொருள் என்றாவது ஒரு நாள் உங்களை விட்டு போய்விடும் என்பதை உணர்திர்ருகிரீர்கலா ?  
  2. அந்த பொருள் இன்னும் எத்தனை காலம் உங்களுடன் இருக்கவேண்டும் என்று நீங்கள் விரும்புகின்றீர்கள் ?
  3. அதற்குள் அந்த பொருள் தொலைந்துவிட்டால்/ வீணாகிவிட்டால்/கைவிட்டு போய்விட்டால் உங்களுக்கு எத்தகைய இழப்பு ஏற்படும் ?
  4. அந்த இழப்பு ஏற்பட்டால் நீங்கள் குறைந்தா போய்விடுவீர்கள் ?
எதில் கடைசி கேள்விக்கு விடை தேடினால் ஆம் . குறைந்து தான் போய்விட்டேன் என்று நினைக்கலாம். ஆனால் விடைகாணாமல் உங்களை உணர ஆரம்பித்தால் மனசு லேசாகிவிடும். உண்மையில் நீங்கள் இந்த விதத்திலும் குறைந்துபோக போவதில்லை

இன்னும் வேண்டும் என்ற ( Wanting )  என்ற எண்ணத்தினால் பலர் தவறான பாதைக்கு சென்று அதனால் அழிவை தேடிகொள்வதும் உண்டு.

சமிபத்திய உதாரணம் சாடிக் பாட்சா. சாதாரண பாத்திர வியாபாரியாக இருந்து, பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் இறங்கி, A.ராஜா என்ற அரசியல்வாதியின் நட்பால் பயம் இல்லாமல் பல தவறுகளை செய்து, கடைசியில் நிம்மதி இல்லாமல் தற்கொலை ? செய்து கொண்டார். நினைத்ததற்கு மேல் கிடைத்தும் மணா நிம்மதி இல்லை. மன உளைச்சல் தான் எற்பட்டது.

ஓஷோவின் கதை ஒன்று 

ஒருவன் கலை அழகுடன் அரண்மனையைவிடச் சிறப்பாக மாளிகை ஒன்றைக் கட்டியிருந்தான்.அதை அந்த நாட்டு மன்னர் விலைக்குக் கேட்டும் அவன் கொடுக்கவில்லை.ஒருநாள் அவன் வெளிய போய்விட்டுத் திரும்பும்போது வீடு பற்றி எரிந்து கொண்டிருந்தது.மன்னன் செய்த சதியோ என நினைத்து அவன் அழுது புலம்பினான்.அப்போது அவன் மகன் அங்கே ஓடி வந்தான்.அவன் சொன்னான்,''அப்பா,கவலைப் படாதீர்கள்.இந்த வீட்டை நான் நேற்று மன்னருக்கு மூன்று பங்கு விலைக்கு விற்றுவிட்டேன்.வரும் பணத்தைக் கொண்டு இதை விட அழகான வீடு ஒன்று கட்டிக்கொள்ளலாம்.''தந்தையின் கண்ணீர் சட்டெனக் காணாமல் போயிற்று.அவன் சிரிக்கத் தொடங்கினான்.அவன் எதிரே வீடு எரிந்து கொண்டிருந்தது.அவன் கண்களிலோ எதிர் காலக் கனவு!அப்போது அவன் இளைய மகன் ஓடி வந்தான்.அவன் சொன்னான்,''அப்பா,அண்ணன் சொன்னது உண்மைதான்.ஆனால் விற்றது பேச்சளவில்தான்.பத்திரம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.பணமும் வாங்கவில்லை.''தந்தை மறுபடியும் அழ ஆரம்பித்து விட்டான்.
இதுதான் பற்று...அடையாளம்.ஒருவன் உயிருடன் இருக்கும்போது எல்லாவற்றையும் தன்னுடன் அடையாள படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.எல்லாவற்றையும் பயன் படுத்திக் கொள்ளலாம்.ஆனால் பற்றில் விழுந்து விடக் கூடாது.உடைமை கொள்ள முயலக்கூடாது.
விலகி இருங்கள்!விழித்திருங்கள்!மௌனமாய்ப் பார்த்திருங்கள்!


.........................................................................................தொடரும் 

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக