பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

வதந்தி

தத்துவ மேதை சாக்ரடீஸ் அவர்களின் சீடர் ஒருவர் சாக்ரடீசிடம் "உங்கள் நண்பரை பற்றிய தகவல் ஒன்றை தெரிவிக்கவேண்டும் என்று ஓடோடி வந்தேன் என்றார். உடனே சாக்ரடீஸ் " நீ சொல்வதற்கு முன் நான் கேட்கும் கேள்விகளுக்கு  பதில் சொல்" என்றார்.

நீ சொல்லபோகும் தகவல் உண்மையானது தான் என்பது உனக்கு உறுதியாக தெரியுமா? என்று கேட்டார்.

அதற்கு சீடன் அது எந்த அளவிற்கு உண்மை என்று எனக்கு தெரியாது. கேள்விபட்டது தான் என்றார்.

உணமையானது தான் என்று உனக்கே உறுதியாக படாத தகவலை என்னிடம் ஏன் நீ சொல்லவேண்டும் ? என்று கேட்டுவிட்டு சரி பரவாயில்லை. என் நண்பனை பற்றி உயர்வானதாக நல்லதாக ஏதேனும் சொல்ல விரும்புகிறாயா? என்று கேட்டார்.

சீடன் நான் கேள்விபட்டது நல்ல செய்தி இல்லை என்றார்     

உண்மையா என்று தெரியாத, ஒருவர் பேருக்கு கேடு விளைவிக்கும் செய்தியை நான் கேட்பதால் என்ன பயன். நீ சொல்ல போகும் செய்தியினால் ஏதேனும் பயன் உண்டா என்றார் ?

அப்படி பயன் ஏதும் இல்லை என்றார் சீடர் 

செய்தி உண்மை இல்லை. அது நல்ல விசயமும் இல்லை. அதை நான் கேட்பதால் பயனும் இல்லை. பிறகு ஏன் அதை என்னிடம் நீ சொல்ல வேண்டும் ? என்றார்

சீடன் வெட்கி தலை குனிந்தான் 

பெரும்பாலும் வதந்தி இப்படி தான் பரவுகிறது. நமக்கு அடுத்த விட்டு கழிப்பறையை எட்டி பார்ப்பது தான் சந்தோஷம்.

ஆனால் நமக்கு நன்றாக தெரிந்த தீயசெயல்களை பற்றி பேசாமலும் கண்டுகொள்ளாமலும் இருந்தால் தீய்மை வெல்லும். தவறு நடக்கிறது என்றால் அது உறுதியாக தெரியும் என்றால் அதனை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க கூடாது. அதை தடுக்க நம்மால் ஆனா முயற்சிகளை செய்து கொண்டே இருக்கவேண்டும். வதந்தியை பரப்புவது எவ்வளவு குற்றமோ அதை போல தவறை கண்டுகொள்ளாமல் இருபதும் குற்றம்.

இந்த உலகம் துன்பமயமாக ஆவது கெட்டவர்களால் அல்ல. அதனை வேடிக்கை மட்டும் பார்த்துகொண்டிருக்கும் நல்லவர்களால் - நெப்போலியன்  

எனவே தவறை என்று உறுதியாக தெரிந்தால் தைரியமாக தட்டி கேளுங்கள். இதனால் உங்களுக்கு தைபட்ட முறையில் பாதிப்பு உண்டாகும் என்று தெரிந்தாலும் " நமக்கு ஏன் வம்பு என்று இருக்க வேண்டாம்" ஆனால் பெரும்பாலானோர் இப்படி தான் இருக்கிறார்கள். ஆனால் உறுதியாக தெரியாத விசயத்தை பற்றி பேசுவார்கள். 

   
   

புதன், 20 ஏப்ரல், 2011

நல்ல உதாரணமாக இருங்கள்

Butch O'Hare என்பவர் அமெரிக்க நாட்டு போர் விமானி.  இரண்டாம் உலக போர் நடந்தசமயம் அவர் எதிரி நாட்டின் (ஜப்பான் ) மீது தாக்குதல் தொடுக்க சென்ற விமானபடை அணிவகுப்புடன் புறப்பட்டு சென்றார். புறபட்ட பின் தான் தெரிந்தது, அவர் விமானத்தில் எரிபொருள் நிரப்புபவர்கள், எரிபொருளை நிரப்பாமல் மறந்து விட்டனர் என்று. எனவே தன தலைமை விமான படை அதிகாரிக்கு தகவல் கொடுத்தார். தலைமை அதிகாரி உடனே நீ புறப்பட்டு வந்த கப்பலுக்கே திரும்பி  செல். எரிபொருள் இல்லாமல் நீண்ட நேரம் போர் செய்ய இயலாது என்றார். Butch O'Hare வும் திரும்பி சென்றார். திரும்பி செல்லும் வழியில் அமெரிக்க கப்பலை தாக ஜப்பானிய போர் விமானங்கள் படை திரட்டி வருவதை கவனித்தார். அந்த படைகளின் மீது எதிர் தாக்குதல் தொடுக்க எந்த விமானமும் கப்பலில் இல்லை. Butch O'Hare தன்னந்தனியாக போராடுவது என்று முடிவெடுத்தார். அந்த போர் விமானங்கள் மீது தாக்குதலை தொடுத்தார். தன் உயிரை பற்றி கவலைபடாமல் போரிட்டு பல விமானங்களை சேத படுத்தினர். வழியிலேயே தாக்குதலை எதிர்பாக்காத ஜப்பானிய விமானகள் பல சேதம் அடைந்தன. Butch O'Hare வின் விமானமும் பெரும் சேதம் அடைந்தது. ஆனால் தாக்குதலை கண்டு ஜப்பானிய விமானங்கள் பின் வாங்கி சென்றன. நடந்த போர் நிகழ்வுகளை எல்லாம் அமெரிக்க விமானத்தில் இருந்த காமெராக்கள் புகைப்படமாக  பதிவு செய்திருந்தது.  Butch O'Hare வும் மிகவும் சிரமப்பட்டு விமானத்தை கப்பலில் தரை இறக்கினர். பின்னர் நடந்ததை சொன்னார். ஆனால் அவர் சொன்னதை விட விமானம் எடுத்த புகைப்படங்கள் எத்தகைய சாகசத்தை அவர் நிகழ்த்தி இருக்கிறார் என்று எடுத்து சொன்னது. அதனால் அவர் பேரும் புகழும் அடைந்தார். O'Hare விமான நிலையத்திற்கு இதன் காரணமாகவே இந்த பெயர் சூட்டப்பட்டது. 

இதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னாள் Al Capone என்ற சட்ட விரோத செயல்களை செய்யும் ஒருவருக்கு Easy Eddie என்பவர் வழக்கறிங்கராக இருந்தார். Easy Eddie தன் திறமையால் Al Capone னை பல வழக்குகளில் இருந்து விடுவித்தார். அதனால் Al Capone அவருக்கு பண் மடங்கு அதிக ஊதியத்தையும், இடம் வீடு போன்ற சொத்துக்களையும் வழங்கினார். Easy Eddie கு ஒரு மகன் இருந்தார். தன் மகன் மீது அதிக பாசத்தை வைத்திருந்த Easy Eddie தன் மகனுக்கு நல்ல படிப்பு, அருமையான கார், உடைகள், பணம் ஆகியவை கிடைக்குமாறு பார்த்துக்கொண்டார். மேலும் தன்னை போல இல்லாமல் மிகவும் நல்லவனாக தன் மகன் வாழவேண்டும் என்று நினைத்தார். பல நல்ல விசயங்களை போதித்தார். இருந்தாலும் தான் நல்லவனாக இல்லை என்பது அவரை உறுத்தியது. எனவே Al Capone னுக்கு எதிராக சாட்சி சொல்வது, அவர் செய்த குற்றங்களுக்கு தண்டனை வாங்கி தருவது என்று முடிவெடுத்தார். அது போலவே செய்தார். இதனால் கோபம் அடைந்த Al Capone , Easy Eddie யை ஆள் வைத்து சுட்டு கொன்றார்.

இந்த இருக்கு கதைகளும் சம்மந்தம் இல்லாதது போல தோன்றும். ஆனால் சம்மந்தம் உண்டு. இந்த Easy Eddie யின் மகன் தான்   Butch O'Hare 


செவ்வாய், 19 ஏப்ரல், 2011

ஏமாற்றாதே ஏமாறாதே.


ஏமாற்றாதே ஏமாறாதே. இந்த உலகில் ஏமாற்றாமல் வாழமுடியும். ஆனால் ஏமாறாமல் வாழமுடியுமா என்று சந்தேகம் வலுக்கிறது. ஏமாற்றுதல் சின்ன விசயத்தில் இருந்து கூட ஆரம்பிக்கிறது. பக்கத்துக்கு வீட்டு பெண்மணி சீட்டு பிடிக்கிறார்கள்- நானும் அதில் சேரட்டுமா என்று என் மனைவி கேட்டபொழுது நான் வேண்டாம் என்றேன். அதற்கு பதில் Recurring Deposit அல்லது பரஸ்பர பங்கு திட்டத்தில் (Mutual Fund)- மாதம் தோரும் முதலீடு செய்யலாம் என்றேன். என்னிடம் கருத்து கேட்ட என் மனைவி எனக்கு தெரியாமல் சீட்டுக்கு பணம் செலுத்தி வருவது நேற்று தான் தெரியவந்தது. 

நான் ஒரு உர நிறுவனத்தில் வேலை பார்த்த பொழுது, உர கடைகாரர் ஒருவர் தான் கடை வைத்திருக்கும் கிராமத்தில் அனைவரின் நம்பிக்கையையும் பெற்றவர். அவர் சீட்டு படிக்க ஆரம்பித்த பொழுது அனைவரும் சேர்ந்தனர்.  மேலும் உர கம்பனிகளுக்கு அவர் கொடுக்கும் காசோலை என்றும் பணம் இல்லை என்று திரும்பியது இல்லை. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு மேலாக வைத்திருந்த நம்பிக்கையை ஒரு நாள் அவர் தவிடு போடி ஆக்கினார். 
கடையில் கொஞ்சம் கொஞ்சமாக சரக்கை ( உரமூடைகள், பூச்சி மருந்துகள் ) குறைத்த அவர், ஒரு நாள் அதிகாலை யாருக்கும் சொல்லாமல் ஊரை விட்டு குடுபத்துடன் ஓடி விட்டார். எங்கு சென்றார் என்று யார்க்கும் தெரியவில்லை. உர கம்பனிகளுக்கு அவர் தந்த பல லட்சங்களுக்கான பின் தேதியிட்ட காசோலைகள் அனைத்தும் பணம் இல்லாமல் திரும்பின. கிராமத்து மக்களிடம் சீட்டு பிடித்த பணம் பல லட்சம். அனைத்தும் சேர்த்து ஒரு கோடி ரூபாயை தாண்டியது. பின்னர் தான் தெரிந்தது ஊரில் அவருக்கு சொந்த வீடோ நிலமோ இல்லை. வெளியூரில் இருந்து பிழைக்க வந்து, பல வருடங்களாக திட்டமிட்டு பல லட்சங்களை ஏமாற்றி சுருட்டி கொண்டு ஓடிவிட்டார். இது நடந்து பத்து வருடத்திற்கு மேல் ஆகியும் அவர் எங்கு இருக்கிறார் என்று கூட கண்டுபிடிக்க முடியவில்லை.  

வேலை பார்க்கும் இடத்தில் அடுத்தவரை போட்டு கொடுத்து தான் நல்ல பெயர் எடுத்து முன்னேறுபவர்களை நாம் நிறையவே பார்க்கலாம். புகழ்ச்சிக்கு அடிமையாகதவர்கள் வெகு சிலரே. இதனை பயன்படுத்திக்கொண்டு, தன் திறமையை மட்டும் நம்பாமல் அடுத்தவர்களுக்கு குழி பறித்து வாழ்கையில் முன்னேறுவார்கள். இதுவும் ஒரு வகையான ஏமாற்றும் செயலே. நிறுவனம் ஒரு தவறான நபரை நம்பி, நல்ல ஊழியரை (அவர் தன் திறமையால் நிறுவனத்திற்கு பல வகைகளில் உதவி இருந்தாலும்) இழக்கும் நிலை ஏற்படலாம். உழைத்தும் பலன் இல்லையே என்று அவர் தன் உழைப்பை குறைக்கலாம். மேலும் போட்டு கொடுத்தால் தான் முன்னேற முடியும் என்பதை உணர்ந்து தானும் போட்டு கொடுக்கும் செயலை செயலாம். இதன் நீண்ட கால விளைவாக நிறுவனம் தான் நல்ல ஊழியர்களை இழந்து பாதிக்கப்படும். மேலும் இத்தகைய தவறான எண்ணம் உடையவர்கள் பெரிய பொறுப்பிற்கு வந்தால் நிறுவனம் தவறான பாதையில் செல்லும். நிதி ரீதியான தவறுகள் நடக்கவும் வாய்ப்புகள் அதிகம்.

அரசியலை பற்றி கேட்கவே வேண்டாம். பணம் மற்றும் பதவி மட்டும் தான் அவர்கள் குறி. அதற்காக கொள்கைகளை ( அப்படி ஒன்று நிஜமாகவே இருக்காது ) காற்றில் பறக்கவிடுவார். வெட்கம் மானம் ரோஷம் போன்ற குணங்கள் எல்லாம் அறவே இருக்காது. வஞ்சகம், சூழ்ச்சி, பொய், புரட்டு, பழி பாவத்திற்கு அஞ்சாமை, கொலை செய்ய கூட தயங்காமை போன்றவைகளே அரசியல்வாதிகளுக்கு இருக்க வேண்டிய பண்புகள். சுருக்கமாக சொன்னால் நற்பண்புகள் என்று சொல்லப்படும் எதுவும் இல்லாமலும், தீய பண்புகள் அனைத்தும் கொண்டவருமே அரசியல்வாதி ஆக தகுதி படைத்தவர்கள். விபச்சாரியிடம் நண்பனுடன் சென்று, அவளை அனுபவித்துவிட்டு பிறகு பணம் தராமல் நண்பனை மாட்டிவிட்ட ஒருவனை முதலமைச்சாராக கொண்ட மாநிலம் இது. பல வகைகளில் இவர்களால் நாம் ஏமாற்ற பட்டு கொண்டிருக்கும் பொழுது ஏமாறாமல் நடப்பது சாத்தியமா ?

ஒரு மாநிலம் இன்னொரு மாநிலத்தை எமாற்றிகொண்டிருக்கிறது. ஒரு நாடு இன்னொரு நாட்டை எமாற்றிகொண்டிருக்கிறது. ஒரு இனம் இன்னொரு இன்னதை ஏமாற்றுகிறது. திறமையாக எமாற்றுகிரவனே திறமையான வியாபாரி. சாதாரண பூ விற்கும் கிழவியிடம் இருந்து நகை விற்கும் பெரிய நகை கடை முதல் ஏமாற்றுதலே முதன்மை. நிறம் மாறது என்று தெரிந்தும் விளம்பர கவர்ச்சியில் மயங்கி வெண்மையாக்கும் க்ரீம்களை வாங்கி தடவி கொள்கிறோம்.Active Salt அடைங்கியது என்று சாதாரண உப்பை கொண்ட பற்பசை விளம்பரத்தை கண்டு ஏமாறுகிறோம்.     

நாம் படிக்கும் வரலாறே எழுதியவர்களின் விருப்பத்தின் அடிப்படையிலும் ஆட்சியில் இருந்தவர்களின் விருப்பத்தில் அடிப்படையிலும் எழுதப்பட்டதே ஆகும். வரலாற்றின் உண்மை தன்மை நிகழ்காலத்தில் வாழும் நமக்கு தெரியாது. நம் வாழ்கையை நாம் எழுதினாலே பல விஷயங்கள் மறைக்கப்படும். பிறர் எழுதினாலும் அவர் அறிந்துகொண்ட தெரிந்துகொண்ட சில விஷயங்களின் அடிப்படையில் தான் எழுதமுடியுமே தவிர, உண்மையை எழுத முடியாது. காந்தி, அன்னை தெரேசா முதல் பொதுவாழ்க்கையில் ஈடுபட்ட பலரது கறுப்பு பக்கங்கள் மறைக்கப்பட்டு தான் வருகிறது. இதில் யாரும் விதிவிலக்கல்ல. 

நினைப்பது ஒன்று, சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என்று ஒரு விதமான Hypo -Critic சமூகத்தில் தான் நாம் வாழ்ந்து வருகிறோம். பல குடும்பத்தில் வேறு வழியில்லாமல் தான் கணவன் மனைவி இருவரும் சமூகத்திற்கு பயந்து சேர்ந்து வாழ்கின்றனர். ஒருவரை ஒருவர் ஏமாற்றிக்கொண்டுதான் வாழ்கின்றனர். வாழ்கையில் விட்டுகொடுத்தல் தான் வேண்டும் என்றாலும் அன்பை தொலைத்துவிட்டு போலியாக வாழ்வதால் என்ன பயன் ?

காதலில் விழும் பருவ வயது குழந்தைகள் பெற்றோரை ஏமாற்றி வருவதும், உண்மையான(?) அன்பை செலுத்திய பெற்றோரை ஒரே நொடியில் தூக்கிபோட்டு செல்வதும் நடக்கிறது. கொஞ்சம் தெளிவானவர்கள் காதல் என்ற பெயரில் தன உடல் இட்சைகளை தீர்த்துக்கொண்டு காதலித்த பெண்ணையோ பையனையோ கழற்றிவிடுவதும் உண்டு.
உலகமே பொய் என்ற அச்சாணியில் தன் சுழல்கிறதோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. எமாற்றதெரியாதவரை வாழ தெரியாதவராக பார்க்கும் சமூதாய சுழல் ஏற்பட்டுள்ளது.

மிக பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் தொலைதொடர்பு துறையை ஏமாற்றி வெளிநாட்டு தொலைபேசி அழைப்புகளை உள்நாட்டு தொலைபேசி அழைப்புகளாக காண்பித்து பல கோடி ருபாய் வரி எய்ப்பு செய்ததும், சுரங்க தொழிலில் 80௦ % தாதுக்கள் சட்டவிரோதமாக கடத்தபடுவதாக வரும் செய்திகளும், பங்கு சந்தை ஊழல், இராமலிங்க ராஜு செய்த சத்யம் நிறுவன ஊழல் காமன் வெல்த் விளையாட்டு போட்டியில் நிகழ்ந்த ஊழல், கிரிகெட் சூதாட்டம், IPL கிரிகெட் போட்டியில் நடந்த ஊழல், அரசியல் வாதிகள் செய்த பல்வேறு ஊழல்கள், முதல் அரசு அலுவலக கடை நிலை பணியாளர் மற்றும்  காவல் துறையினர்  பெரும் கையூட்டு வரை நம் தேசமே வெட்கி தலைகுனியும் அளவிற்கு ஏமாற்றுதல் நடந்துகொண்டிருக்கிறது.

இதை அனைத்தையும் கண்டு கொள்ளாமல் பிறந்தோம், இருந்தோம் , செத்தோம் என்று வாழ்பவர்கள் நேர்மையாக இருந்தாலும் நேர்மையானவர்கள் அல்ல. இப்படி கண்டு கொள்ளமால் நமக்கு என்ன என்று வாழ்வதால் தான் உலகம் மேலும் மேலும் கெடுகிறது.

ஏழை மக்களுக்கு தொண்டாற்றுவதாக சொல்லிகொள்ளும் அரசு சாரா நிறுவங்கள் சில வெளிநாட்டில் இருந்து பெரும் பணத்தை கண்ணுக்கு காட்டிவிட்டு சுருட்டி கொள்வதுடன் மட்டும் நில்லாமல், முடிதா அளவு யாருக்காக வேலை பார்கிறோமோ அவர்களையே ஏமாற்றுவதும் நடக்கிறது. ஐந்து கோடி ருபாய் வரவு செலவு நடக்கும் ஒரு மகளிர் சுய உதவி குழு கூட்டமைப்பில். ஏழை பெண்களுக்கு இரண்டு சென்ட் / மூன்று சென்ட் நிலம் வாங்கி தருவதாக ( அதற்கு கடனும் தருவதாக ) கூறி அவர்களை ஏமாற்றி பன் மடங்கு அதிக விலைக்கு நிலத்தை விற்று, தன் பெயரிலும் தன் உறவினர்  பெயரிலும் நான்கே வருடங்களில் நாற்பது லட்ச ருபாய் மதிப்புள்ள நிலத்தை சொந்தமாகிகொண்ட ஒரு கேடு கட்ட பிறவியை சட்டபூர்வமாக எதுவும் செய்யமுடியவில்லை. கூட்டமைப்பின் பணத்தில் நிலம் வாங்க கடன் கொடுத்து தனக்கு கமிசனாக ( ரியல் எஸ்டேட் புரோக்கர் வைப்பதைவிட) பண் மடங்கு கமிசன் வைத்து பணம் சுருடியவன் அவன்.

நடக்கும் எமாற்றுதல்களை பட்டியல் இட்டு கொண்டே போகலாம். நேர்மையாக இருந்த ஒரே காரணத்தால் அரசு அலுவலராக இருந்த என் தந்தை தான் ஓய்வு பெரும் சமயத்தில் அரசியல்வாதிகளால் பெரும் துன்பத்திற்கு ஆளானார். நேர்மையாக செயல்பட்ட காரணத்தால் நானும் எனக்கு கிடைக்கவேண்டிய பணி உயர்வை இழந்தேன். ஆனாலும் விரக்க்திக்கு பதில் சமூகத்தின் மீதான, ஏமாற்றி பிழைப்பை நடத்தும் கீழ்த்தரமான மனிதர்களை நினைத்தால் கோபம் அதிகம் வருகிறது.

மதுரை கலக்டர் சகாயம் நேர்மையானவர். அவர் செயலுக்கு பல தடங்கல் வந்தாலும் தன் தனித்தன்மையை இது வரை விட்டுகொடுத்ததிலை. இதற்கு முன் கலக்டராக இருந்த உதயச்சந்திரன் அவர்களும் கீழ்த்தரமான அரசியலுக்கு அடிபடியவில்லை என்ற காரணத்தினாலேயே விரைவில் மாற்றம் செய்யப்பட்டார். பணம் அதிகாரம் பழி பாவத்திற்கு அஞ்சாமை போன்ற செயல்களால் நாட்டையே சுடுகாடாகும் சிலரை என்ன செய்வது. சட்டத்தையே வளைக்கும் இவர்களுக்கு யார் தான் தண்டனை கொடுப்பார்கள் ?
ஒரு சமுதாய எழுச்சி உருவாக வேண்டும். குறைவானவர்களாக உள்ள நல்லவர்கள் இந்த எழுச்சியை உண்டாக்கினால், நல்லவர்கள் அதிகம் ஆவர் கெட்டவர்கள் குறைவர். உங்களால்  முடிந்தவரை அநீதியை எதிர்த்து குரல் கொடுங்கள் . இதனால் தனிப்பட்ட முறையில் நீங்கள் பாதிக்கபட்டாலும், நேர்மை உயர நாடு செழிக்க உங்களால் ஆனதை செய்த மன திருப்தியுடன் வாழலாம். மன திருப்தியுடன் இறக்கலாம்  

திங்கள், 18 ஏப்ரல், 2011

கடவுளுக்கு எழுதிய கடிதம்

ஒரு தபால் நிலையத்திற்கு பெறுனர்: கடவுள் என்று முகவரியிட்டு ஒரு கடிதம் வந்தது. ஆச்சிரியம் அடைந்த தபால் நிலைய ஊழியர் அந்த கடிதத்தில் என்ன தான் எழுதபட்டுள்ளது என்பதை அறிய அந்த கடிதத்தை பிரித்து படித்தார். அந்த கடிதத்தில் " நான் மாதம் ருபாய் 300௦௦/ பென்ஷன் வாங்கி காலத்தை தள்ளும் மூதாட்டி. இந்த மாத பென்ஷன் னை வாங்கி எடுத்துவரும் பொழுது பேருந்தில் அந்த பணம் திருடுபோய் விட்டது. இந்த பணம் இல்லையென்றால் நான் இந்த மாதம் முழுவதும் செலவுக்கு பணம் இல்லாமல் கஷ்டப்பட வேண்டீருக்கும். மேலும் பட்டினி கிடக்கவும் நேரிடும். எனவே அந்த பணம் என்னக்கு திரும்ப கிடைக்க நீ தான் உதவ வேண்டும் என மிக உருக்கமாக அந்த மூதாட்டி எழுதி இருந்தாள்.   

கடிதத்தை படித்து பரிதாபப்பட்ட தபால் நிலைய ஊழியர் தன நண்பர்களிடம் அந்த கடிதத்தை காட்டி அந்த மூதாட்டிக்கு உதவ அவர்களிடம் பணம் திரட்டும் வேலையில் ஈடுபட்டார். ருபாய் 270௦/ பணம் திரட்டபட்டது. கடவுளின் பெயரிலேயே அந்த பணம் மூதாட்டிக்கு அனுப்பப்பட்டது.

இரண்டு வாரம் கழித்து மூதாட்டியிடம் இருந்து கடவுளுக்கு மற்றும் ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் " பணம் கொடுத்து உதவிய கடவுளுக்கு நன்றி. இதனால் என் கஷ்டம் தீர்ந்தது. ஆனால் நீ அனுப்பிய பணம் முழுவதுமாய் என்னை வந்து சேரவில்லை. ருபாய் 270௦/ மட்டும் வந்தது. இந்த கேடு கேட்ட தபால் நிலைய ஊழியர்கள் தான் பணத்தை கையாடல் செய்திருக்க வேண்டும் என்று எழுதி இருந்தது "    



மகா கஞ்சன்

ஒரு ஊரில் மகா கஞ்சன் ஒருவன் இருந்தான். அவன் தன் உயிர் உடலை விட்டு பிரியும் தருணத்தில், தன் மனைவியை அழைத்தான். தான் இறந்தபிறகு உடலை புதைக்கும் பொழுது, தான் சம்பாதித்து வைத்த அனைத்து பணத்தையும் ஒரு கவரில் போட்டு தன் உடலுடன் புதைக்க வேண்டும் என்று கூறினான். அவன் மனைவியும் அப்படியே செய்வதாக உறுதி அளித்தாள்.

கஞ்சனும் இறந்தான். அவன் மனைவியும் சொன்னது போலவே அவன் உடலுடன் ஒரு கவரையும் புதைத்தாள். அவளது தோழி உன் கணவன் கேட்டுக்கொண்டது போல் அனைத்து பணத்தையும் நீ புதைக்கவில்லை போல தெரிகிறது. கவர் மிகவும் சிறிதாக இருக்கிறதே என்றாள்.
அதற்கு கஞ்சனின் மனைவி " நான் என்றைக்கும் வாக்கு தவறமாட்டேன். என் கணவரின் பணம் முழுவதையும் வங்கியில் என் பெயரில் உள்ள சேமிப்பு கணக்கில் போட்டு, என் கணவர் பெயருக்கு முழுதொகைக்கும் ஆனா காசோலை எழுதி அவன் உடலுடன் புதைத்துள்ளேன் என்றாள் 

சனி, 16 ஏப்ரல், 2011

பாண்டிச்சேரி தேர்தல் கூத்துக்கள்

பாண்டிச்சேரி தேர்தல் கூத்துக்கள்  

கூத்து-1

காங்கிரஸ் கட்சியை சார்ந்த நாராயணசாமி என்பவர், தன் கட்சி மக்களுக்கு என்ன செய்திருக்கிறது என்று கூறும் பொழுது " புள்ளையை தவிர அனைத்தையும் தந்திருக்கிறோம் என்று கூறியுள்ளார் ". இதை கேட்டு கோபமான பெண்மணி ஒருவர் " நீ ஒன்னும் எங்கள்ளுக்கு புள்ளை தரவேணா - நான் வேணும்னா என் வீட்டுக்காரை உன் வீட்டுக்கு அனுப்புறேன் என்று கூறியுள்ளார் "
நான் இத்துடன் ஏன் உரையை முடித்துகொள்கிறேன் என்று நாராயணசாமி உடனேயே இடத்தை காலி செய்தார் 

( மக்கள் இலவசத்துக்கு ஆசைப்பட்டு "என்ன தருவே ?" என்று கேட்கும் நிலைமை வந்துவிட்டது. இலவசத்திற்கு ஆசைபடும் மக்கள் இதைவிட கேவல படவேண்டிய நிலைமை பிற்காலத்தில் ஏற்படும் என்பதை நினைவில் வைத்துகொள்ளுங்கள் )

கூத்து -2

பாண்டிச்சேரி லாஸ்பேட்டை தொகுதியில் நந்தா சரவணன் என்பவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட தொகுதியில் நீண்ட காலமாக தன்னை அறிமுக படித்திகொண்டு, சின்ன சின்ன வேலைகளை சுயவிளபரங்களை செய்து கொண்டுஇருந்தார். ஆனால் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த சிவகொழுந்து என்பவருக்கு, திடீர் அரசியல் ஆசை வந்தது. காங்கிரஸ் தலைமையிடம் ஒரு பெரும் தொகையை கொடுத்து லாஸ்பேட்டை தொகுதியில் நிற்க சீட் வாங்கிவிட்டார். ஆனால் தொகுதியில் அறிமுகமே இல்லை. தன்னை தொகுதியில் அறிமுகபடுத்திகொள்ள தேர்தல் தேதி அறிவிக்கும் முன் 1000௦௦௦ ஏழை பெண்களுக்கு புடவை வழங்க திட்டமிட்டு பயனாளிகளுக்கு முன்கூட்டியே டோக்கன் வழங்கப்பட்டது. ஒரு குறிப்பிட்ட தேதியில் ஒரு திருமணமண்டபத்தில் வந்து புடவையை பெற்றுகொள்ளுமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டது.
தனக்கு சீட்டு கிடைக்காத கோபத்தில் இருந்த நந்தா சரவணன் இந்த நிகழ்வை கெடுக்க நூதனமாக ஒரு திட்டம் போட்டார். சிவகொழுந்து அடித்து கொடுத்த டோக்கனை போலவே அச்சு அசலாக 10000௦௦௦௦ டோக்கன் அடித்து, ஊர் முழுவதும் சிவகொழுந்து கொடுத்ததை போல கொடுத்து, திருமணமண்டபத்தில் வந்து புடவை பெற்று கொள்ளுமாறு மக்களிடம் சொல்லிவிட்டார்.
குறிப்பிட்ட தேதியில் திருமணமண்டபதில் கூடிய கூட்டத்தை பார்த்து மிரண்டுவிட்டனர் சிவகொழுந்தின் ஆதரவாளர்கள். பிறகு அங்கு என்ன நடந்திருக்கும் என்று கூறவும் வேண்டுமோ ?

கூத்து- 3

பாண்டிச்சேரியில் நகை கடன் மற்றும் கந்து வட்டி, ரன் வட்டி, மீட்டர் வட்டி போன்றவற்றில் கொடிகட்டி பறக்கும் சகோதரர்களிடம் தேர்தல் செலவுகளுக்காக நான்கு அரசியல்வாதிகள் சில பல லட்சங்களை கடன்பெற்று இருந்தனர். இதில் ஒரு சகோதரர் இவர்களுக்கு கடன் கொடுபதற்கு பதில் நாமே தேர்தலில் நின்று  விடலாமே என்று சொல்லிருக்கிறார். அதற்கு மூத்த சகோதரார் " இவர்கள் சம்பாதித்து நமக்கு தானே பல மடங்கு வட்டியுடன் தர போகிறார்கள். நாம் ஏன் அந்த ஆசை படவேண்டும் என்று கூறிருக்கிறார்" ஒவ்வுருவருக்கும் ஒரு பீலிங். ஒவ்வுருவருக்கும் ஒரு ஆசை.

கூத்து-4

ச்சே இந்த தேர்தல சாக்கா வச்சு  ஒரு லட்ச ரூபா சம்பாதிக்கலாம் என்று இருந்தேன். எழுபத்தி ஐயாயிரம் ருபாய் தான் கிடைத்தது என்று ஒரு இளைஞன்
புலம்பிகொண்டு இருந்தான். இரு சுயஉதவி குழு வைத்திருக்கும் அவன் தாய்க்கு ஒரு குழுவிற்கு இருபதாயிரம் ருபாய் என்று நார்பதயிரமும், இவன் நடத்தும் கிரிகெட் குழுவிற்கு இருபதாயிரமும், பின்னர் தினசரி தேர்தல் செலவிற்காக கொடுத்த பணத்தில் அமுக்கியது பதினைந்து ஆயிரமும் ஆகா மொத்தம்   எழுபத்தி ஐயாயிரம் ருபாய் தான் கிடைத்தது என்று கணக்கும் சொன்னான்.

வருஷத்துக்கு ஒரு தடவ தேர்தல் வந்தால் போதும். வேட்பாளர்கள் எல்லாம் பிச்சைகாரர்கள் ஆகவும் நாம் எல்லாம் பணக்காரர்கள் ஆகவும் ஆகிவிடலாம் என்று அவன் சொன்னதை கேட்டு அழுவாத சிரிப்பதா என்று தெரியவில்லை       

மக்கள் வரிபணத்தில் ஊதியம் வாங்கும் அரசாங்க அலுவலர்கள்

இந்த வருடம் தேர்தல் கமிசன் நடவடிக்கையை பாராட்டி தான் நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். தேர்தலும் அமைதியாகவே நடை பெற்றது. ஆனால் தேர்தல் பணிக்கு சென்ற சில ஆசிரியர்களின் நடவடிக்கை  எனக்கு வியப்பை தந்தது. 

என் மனைவி ஆசிரியராக பணி புரிகிறார். ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் ருபாய் 4000௦௦௦/  தொகுப்பு ஊதிய சம்பளத்தில் பணிநியமனம் செய்யப்பட்ட அவருக்கு, கருணாநிதியின் ஆட்சி காலத்தில் அவர் வந்த உடனேயே பணி நிரந்தரம் செய்யப்பட்டது. ஜெயலலிதா தொலைநோக்கு பார்வையோடு, அரசு பணியாலர்களின் நல்லதை பற்றி மட்டும் நினைக்காமல் ஒட்டு மொத்த தமிழ்நாட்டின் நலத்தை பற்றி சிந்தித்தார். தன்னை பற்றி மற்றும் நினைபவர்களுக்கு ஜெயலலிதாவின் செயல்பாடு பிடிக்காது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் நாம் பள்ளிக்கு காலதாமதமாக வர முடியாது. அரசாங்க சலுகைகள் ஊதிய உயர்வுகள் கிடைக்காது என்பது ஆசிரியர்கள் மட்டும் அல்லாமல் பல அரசு ஊழியர்களின் கருத்து. என் மனைவிக்கும் இதே கருத்து உண்டு.

என் மனைவிக்கு முதல்முதலாக தேர்தல் பணிக்கு செல்லும் வாய்ப்பு இந்த தேர்தலில் கிடைத்தது. இதனால் தன சக அசிரியர்களிடம் இந்த பணி குறித்து அவர்கள் அனுபவங்களை கேட்டார். அவர்களில் பலர் தேர்தல் பணி குறித்து கவலைப்பட தேவை இல்லை என்றும், பணி நேரத்தில் பிரியாணி மற்றும் பிற கவனிப்புகள் அரசியல் கட்சியினரால் தாராளமாக செய்யப்படும் என்று கருத்து கூறினார். முதல் நாள் இரவு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்கு சாவடி இருக்கும் ஊரில் தங்கவேண்டும் என்ற விதிமுறை இருந்தாலும், தங்க வசதி இல்லை என்றால் வீட்ட்க்கு சென்று விட்டு அதிகாலை வாக்கு சாவடிக்கு வரலாம் என்றும் கூறினர்.

இந்த எண்ணத்தில் தான் பலர் தேர்தல் பண்ணிக்கு சென்றனர். ஆனால் அவர்கள் நினைப்பில் தேர்தல் கமிசன் மண்ணை வாரி போட்டது. முதல் நாள் இரவு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஊரில் தங்காமல், வீட்டுக்கு சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டது (அது போலவே வாடிப்பட்டி தாலுகா வில் வீட்டுக்கு சென்றவர்கள் சிலருக்கு தேர்தல் கமிசன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது ) . மேலும் அரசியல் கட்சிகளை சார்ந்தவர்கள் யாரும் (பூத் agents )  முதல் நாள் வாக்கு சாவடிக்கு வரகூடாது என உத்தரவு இடப்பட்டது. இதனால் ஆசிரியர்கள் பலர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஊரில் தங்கவேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் அரசியில் கட்சிகள் மூலம் அவர்கள் எதிர்பார்த்த பிரியாணி உள்ளிட்ட கவனிப்பும் நடைபெறவில்லை. சில ஊர்களில் மட்டும் சாதாரண சாப்பாடு மற்றும் சிற்றுண்டி கிடைத்தது.

இதனால் வெறுப்படைந்த ஆசிரியர் ஒருவரின் புலம்பல் இது. தான் தங்க வைக்க பட்ட பள்ளியில் சரியான வசதிகள் இல்லை என்றும், பள்ளி மிகவும் குப்பையாக இருந்தது என்றும், கழிப்பறை சரியாகவே இல்லை என்றும் குறை கூறியுள்ளார். இவ்வாறு ஆசிரியர்களை  கொடுமைபடுத்திய தேர்தல் கமிசன் பற்றி ஆசிரியர்கள் அனைவரும் தின மலர் நாளிதழுக்கு எழுதி போடவேண்டும் என்று கூறியுள்ளார். இதை கேட்ட என் மனைவி என்னிடம் இந்த தகவலை கூறும் பொழுது " ஒரு நாள் ஏற்படும் ஒரு சின்ன பிரச்சனையை கூட தன் சக ஆசிரியரால் பொறுத்து கொள்ள முடியவில்லை என்றார்".

பள்ளியில் கழிப்பறை சரியில்லாமல் இருப்பதற்கும், பள்ளி சுத்தமாக இல்லாததற்கும் யார் காரணம்? பல பள்ளிகளில் கழிப்பறை வசதி ஆசிரியர்களுக்கு கூட இல்லை என்பது தான் வெட்ககேடான உண்மை. பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் நிலைமையை, குறிப்பாக பெண் குழந்தைகளின் நிலைமை இன்னும் மோசம். கழிப்பறை வசதியை ஏற்படுத்தி தரவோ அதனை பாரமரிக்கவோ பள்ளிகல்வி துறையும், அரசாங்கமும் தவறிவிட்டது என்பது தான் உண்மை. சுகாதாரத்தை பற்றி போதிக்க கூடிய பள்ளியின் நிலைமை இது என்றால் பின்னர் எப்படி சுகாதார பழக்கம் குழந்தைகளுக்கு வரும்?

என் மனைவி வேலை பார்க்கும் பள்ளியில் கழிப்பறை கதவு சரியில்லை என்பதால் ஊரில் இருக்கும் சமூக விரோதிகள் அதனை தவறாக பயன்படுத்தி, ஆசிரியர்கள் அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அங்கு இருந்த ஆரம்ப பள்ளிக்கும் உயர் நிலை பள்ளிக்கும் ஒரே கழிப்பறை தான். ஆரம்ப பள்ளியின் தலைமை ஆசிரியர், கழிப்பறை கதவை சரி செய்ய ஆரம்ப பள்ளி மற்றும் உயர் நிலை பள்ளி ஆசிரியர்களிடம் தலைக்கு ருபாய் நூறு கேட்டார். ஆனால் இதற்கு உயர் நிலை பள்ளி ஆசிரியர்கள் ஒத்து வரவில்லை. எனவே மீதம் உள்ள தொகையை ஆரம்ப பள்ளி ஆசிரியர்களே செலவு செய்து கழிப்பறை கதவை செய்து அதற்க்கு ஒரு பூட்டும் போட்டனர். தாங்கள் மட்டுமே அந்த கழிப்பறையை பயன்படுத்திக்கொண்டு உயர்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு கழிப்பறையை திறந்து விட மறுத்தனர். என்ன ஒரு தர்ம சிந்தனை ! இப்படி பட்ட ஆசிரியர்களால் குழந்தைகளுக்கு என்ன ஒழுக்கத்தை கற்று தர முடியும்? இவர்களுக்கு தான் அரசாங்கம் ஊதியத்தை வாரி வழங்குகிறது.

கிராமங்களில் ஆசிரியர் பணி பணி செய்யும் பலர் வட்டி தொழிலில் ஈடுபட்டு பணம் சம்பாதிப்பதும் நடக்கிறது. ஒரு ஆரம்ப பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒரு உணவகத்தை கிராமத்தில் நடத்திவருகிறார். சாப்பாடு பரிமாறுவது முதல் அனைத்து வேலையும் அவரே செய்வார். பற்றா குறைக்கு விவசாய வேலையையும் பார்த்துகொள்வர். இவர் எப்படி தன் ஆசிரியர் பணியை சிறப்பாக   செய்யமுடியும்?
ஒரு மலை கிராமத்தில் தனக்கு பத்தில் வெறும் ருபாய் ௧௫௦௦/ தந்து பினாமி ஆசிரியரை வைத்து பாடம் நடத்தபடுவதை நானே நேரில் கண்டுஇருக்கிறேன். செய்தித்தாளிலும் இதை பற்றி படித்திருக்கிறேன்.

இவர்களை விட மிக குறைந்த ஊதியம் வாங்கும் தனியார் பள்ளியின் ஆசிரியர்கள் இது போல செயல் பட முடியுமா? அவர்களுக்கு உள்ள கட்டுபாடுகள் எத்தனை எத்தனை. தங்களுக்கு உரிய தற்செயல் விடுப்பை கூட நிர்வாகம் அனுமதிக்காத காரணத்தினால் எடுக்க முடியாமல் தவிக்கும் ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளில் இருக்கிறார்கள்.

ஆசிரியர்கள் மட்டும் அல்ல மக்கள் வரிபணத்தில் தான், சம்பளம் வாங்கி தங்கள் வாழ்கையை நடத்துகிறோம் என்ற உணர்வே இல்லாமல் கடமையை செய்ய தவறுகிற, கடமையை செய்ய கையூட்டு பெறுகிற அரசாங்க       அலுவலர்களை நினைத்தால் இதயத்தில் வலி ஏற்படுகிறது

                  

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

அன்பே தீர்வு





படித்ததில் பிடித்தது 
  
Thanks to http://enganeshan.blogspot.com/2010/11/blog-post_29.html


பல வருடங்களுக்கு முன் அமெரிக்காவில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஒருவர் மாணவர் குழு ஒன்றை ஏற்படுத்தி அந்தக் குழுவிடம் வித்தியாசமான ஒரு ஆராய்ச்சிப் பணியை ஒப்படைத்திருந்தார். ”பின் தங்கிய குடிசைப் பகுதி ஒன்றிற்குச் செல்லுங்கள். 12 வயது முதல் 16 வயது வரை உள்ள 200 சிறுவர்களைத் தேர்ந்தெடுங்கள். அவர்களைப் பற்றிய முழு விவரங்களைச் சேகரியுங்கள். பின் அவர்களுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்று உங்கள் அனுமானத்தைச் சொல்லுங்கள்” என்று அவர்களிடம் சொன்னார்.

அந்த மாணவர்கள் குழு மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள குடிசைப் பகுதியைத் தேர்ந்தெடுத்து அங்கு சென்றது. அந்த மாணவர்கள் அங்குள்ள 12 முதல் 16 வயதுடைய ஒவ்வொரு இளம் வயதினரிடமும் நீண்ட நேரம் பேசினார்கள், கேள்விகள் கேட்டார்கள். தாங்கள் பேச்சின் மூலம் அறிந்து கொண்டதையும், பேசாமலேயே கவனித்து அறிந்து கொண்டதையும் வைத்து அந்த ஆராய்ச்சி மாணவர்கள் ஒரு முடிவுக்கு வந்தார்கள். “இந்த சிறுவர்களில் 90 சதவீதம் பேர் எதிர்காலத்தில் சிறிது சமயமாவது சிறைச்சாலையில் கழிப்பார்கள்”.

அந்த முடிவுக்கு அவர்கள் வரக் காரணமாக இருந்தது அந்த சிறுவர்களின் மனப் போக்கில் அவர்கள் சில தீய பண்புகள், தீய ஆர்வங்கள், சமூகப் பொறுப்பற்ற தன்மை போன்றவற்றைக் கண்டது தான்.

அந்த மாணவர் குழு சமர்ப்பித்த தகவல்களையும், அந்த தகவல்களை அடிப்படையாக வைத்து அவர்கள் வந்த முடிவையும் பத்திரமாகப் பாதுகாத்த அந்த பேராசிரியர் பல வருடங்கள் கழித்து அந்த குடிசைப் பகுதியில் உள்ள சிறுவர்கள் பெரியவர்களாக ஆன பின்னர் மீண்டும் வேறொரு மாணவர் குழுவை அதே பகுதிக்கு அனுப்பினார். “இந்த 200 பேரும் தற்போது எப்படி இருக்கிறார்கள், அதில் எத்தனை பேர் முந்தைய குழு எண்ணியது போல் சிறைக்குச் சென்றிருக்கிறார்கள் என்ப்பதை அறிந்து வாருங்கள்”

அந்த வேலை இரண்டாவதாகப் போன குழுவிற்கு சுலபமானதாக இருக்கவில்லை. அந்த 200 பேரில் சிலர் இடம் பெயர்ந்திருந்தார்கள். சிலர் இறந்திருந்தார்கள். இடம் பெயர்ந்தவர்களில் சிலரது தற்போதைய விலாசம் கிடைக்கவில்லை. ஆனாலும் இரண்டாவது மாணவர் குழுவின் விடாமுயற்சியால் 200 பேரில் 180 பேரை தொடர்பு கொள்ள முடிந்தது. அவர்களில் நான்கு பேர் மட்டுமே சிறைக்குச் சென்றிருந்தார்கள்.

பேராசிரியருக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்ட மாணவர் குழுவிற்கும் அந்தத் தகவல் பெருத்த ஆச்சரியத்தை அளித்தது. முதல் குழுவின் கருத்து எந்தத் தகவல்களின் அடிப்படையில் எழுந்ததோ அந்தத் தகவல்களை மீண்டும் ஒரு முறை சரி பார்த்தனர். அன்றைய அனுமானம் இன்றைக்கும் அறிவு சார்ந்ததாகவே இருந்தது. குற்றம் புரியத் தேவையான மனநிலைகளிலும், சூழ்நிலைகளிலும் தான் அன்று அந்த சிறுவர்கள் வாழ்ந்து வந்தார்கள். அப்படியானால் இப்படி இந்த 176 பேரும் சிறைக்குச் செல்லாமல் இருக்கக் காரணம் என்ன என்ற மிகப் பெரிய கேள்வி எழுந்தது.

மீண்டும் சென்று சிறைக்குச் செல்லாமல் நல்ல முறையில் வாழ்ந்து கொண்டிருந்த அந்த 176 நபர்களிடமும் அவர்கள் பேட்டி எடுத்தார்கள். அவர்கள் போகவிருந்த அழிவுப்பாதையில் இருந்து அவர்களைக் காத்தது என்ன என்ற கேள்வியைப் பிரதானமாக வைத்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் ஒரு பதிலையே சொன்னார்கள். “எங்கள் பள்ளிக்கு ஒரு புதிய ஆசிரியை வந்தார்....”

உடனே பெரும்பாலானோர் சொன்ன அந்த ஆசிரியையைத் தேடி ஆராய்ச்சியாளர்கள் சென்றனர். இத்தனை பேர் வாழ்க்கையை மாற்றி அமைத்த அந்த ஆசிரியை எந்த வழிமுறையைப் பின்பற்றினார் என்பதை அறிய அவர்களுக்கு ஆவலாக இருந்தது.

அந்த ஆசிரியை தற்போது ஆசிரியைப் பணியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார். அவரிடம் அவர்கள் சரமாரியாகக் கேள்வி கேட்டார்கள். ”உங்களுடைய அந்தப் பள்ளி மாணவர்களில் பெரும்பாலானோர் உங்களை இன்றும் நினைவு வைத்திருக்கிறார்கள். அதன் காரணம் என்ன?” “அவர்கள் உங்களுடைய தாக்கத்தால் நிறையவே மாறி இருக்கிறார்கள். நீங்கள் அவர்களுக்கு கல்வி புகட்டிய முறை என்ன?”

அந்த முதிய ஆசிரியைக்கு குறிப்பிடும்படியாக எதையும் சொல்லத் தெரியவில்லை. ஒரு நீண்ட பதிலை எதிர்பார்த்துச் சென்றவர்களுக்கு ஒரே ஏமாற்றம். அந்த ஆசிரியை தன் பழைய நாட்களின் நினைவுகளில் மூழ்கினார். வந்தவர்களுக்குச் சொல்வது போலவும், தனக்குள்ளேயே பேசிக்கொள்வது போலவும் அவர் மிகவும் கனிவுடன் சொன்னார். “அந்தக் குழந்தைகளை நான் நிறையவே நேசித்தேன்.......”

பெரிய பெரிய சித்தாந்தங்களையும், வித்தியாசமான கல்வி நுணுக்கங்களையும் எதிர்பார்த்து வந்தவர்கள் அந்த தகவலில் மெய்சிலிர்த்துப் போனார்கள்.

எல்லா சீர்திருத்தங்களுக்கும் அன்பே மூலாதாரம். அன்பினால் மட்டுமே முழுமையான, உண்மையான மாற்றங்களைக் கொண்டு வருவது சாத்தியம். சட்டங்களாலும், கண்டிப்புகளாலும், தண்டனைகளாலும் எந்த மிகப்பெரிய மாற்றத்தையும் உலகில் கொண்டு வரமுடிந்ததில்லை. இது வரலாறு நமக்கு உணர்த்தும் பாடம்.

உளமார, உண்மையாக அந்த ஆசிரியை அந்த சிறுவர்களை நேசித்தார். குற்றங்கள் மலிந்த சூழலில் வளர்ந்த அந்த சிறுவர்களின் வரண்ட இதயங்களில் அந்த ஆசிரியையின் மாசற்ற அன்பு ஈரத்தை ஏற்படுத்தி நற்குணங்களை விதைத்திருக்க வேண்டும். அதை அவரே உணர்ந்திருக்கா விட்டாலும் அந்த அற்புதம் அந்த சிறுவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்திருக்கிறது. அவர்களது வாழ்க்கையினை நல்ல பாதைக்கு திருப்பி விட்டிருக்கிறது. இந்த நிகழ்வு சிந்தனைக்குரியது.

இது வீட்டிலும், ஊரிலும், சமூகத்திலும், நாட்டிலும் அனைவராலும் உணரப்பட வேண்டிய ஒன்று. குறை கூறுவதிலும், விமரிசனம் செய்வதிலும் பெருமை இல்லை. சட்டங்களைக் கடுமையாக்குவதிலும், கண்டிப்பை அமலாக்குவதிலும் வலிமை இல்லை. அன்போடு அணுகுவதிலேயே பெருமையும் வலிமையும் இருக்கின்றது.

மாற்றம் எங்கு வரவேண்டும் என்று நினைத்தாலும் அங்கு அன்பு செலுத்துவதில் இருந்து ஆரம்பியுங்கள். அந்த அன்பு சுயநலம் இல்லாததாக இருக்கும் பட்சத்தில், அந்த அன்பு குறுகியதாக இல்லாத பட்சத்தில் அற்புதங்கள் நிகழ்த்த வல்லது. சமூகத்தில் இன்று புரையோடிருக்கும் சண்டை, சச்சரவு, கொலை, கொள்ளை, தீவிரவாதம், சகிப்பற்ற தன்மை, அநீதி முதலான அத்தனை நோய்களுக்கும் அன்பே மருந்து. இந்த பிரச்னைகளுக்கு அன்பே தீர்வு.

பணம் மற்றும் பதவி படுத்தும் பாடு


பணத்திற்காக உன் ஆன்மாவை இழக்க கூடாது
பணத்திற்காக உன் உறவுகளை இழக்ககூடாது 
பணத்திற்காக உன் சுயமரியாதையை இழக்ககூடாது 
பணத்திற்காக உன் உடல்நலத்தை இழக்ககூடாது
பணத்திற்காக உன் அறிவை இழக்ககூடாது 
பணத்திற்காக உன் மகிழ்ச்சியை இழக்ககூடாது  

பணம் ஒரு தவிர்க்கமுடியாத சக்தியாய் உருவாகிவிட்டது. சம்பளம் வாங்குபவர்களுக்கு மாத கடையில் பாக்கெட்டில் ஒரு நூறு ருபாய் பணம் கூட இல்லாமல் இருந்தால், அது நமக்கு பெரிய வேதனையை தருகிறது.   சம்பள நாளை எதிர்நோக்கியே மீதம் உள்ள நாட்களை தவிப்புடன் கழிப்பவர்கள் பலர். தின கூலி வேலை செய்பவர்களுக்கு மாதம் அல்லது வாரம் இவ்வளவு சம்பாதிக்கலாம் என்பதை உறுதி கூற முடியாது. விவசாய கூலிகள் அதிலும் குறிப்பாக விவசாய கூலியாக வேலை பார்க்கும் பெண்களின் நிலைமை இதைவிட மோசம். நிலத்தடி நீர் பற்றாகுறை, பருவம் தவறி பெய்யும் மழை. ஆற்று பாசனமும் கைவிட்ட நிலையில் விவசாயம் செய்வது மிககடினாமாகி விட்டது. முப்போகம் விளைந்த இடங்களில் இப்பொழுது ஒரு போகம் தான். காடாறு மாதம் வீடு ஆறு மாதம் என்பதுபோல் வருடத்தில் நான்கு அல்லது ஐந்து மாதங்களில் தான் சரியான கூலி வேலை கிடைக்கும் நூறு நாள் வேலை திட்டம் (NREGA ) விவசாயம் இல்லாத நேரத்தில் விவசாய கூலிகளுக்கு பணி உறுதி அளித்தாலும், சரியான திட்டமிடுதலை பஞ்சாயத்து அமைப்புகள் செய்ய தவறும் காரணத்தால் மற்றும் தவறான நடைமுறைகளினால் வேலை செய்யாமலையே கூலி என்ற நிலையை தான் ஏற்படுத்திஉள்ளது. தவிர விவசாய வேலை அதிகம் இருக்கும் மாதங்களிலேயே பெரும்பாலும் NREGA செயல்படுத்தபடுகிறது. இதனால் அதிக உழைப்பு தேவைப்படும் விவசாய கூலி வேலைக்கு செல்லாமல், நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் பணியை செய்யவே கிராம மக்கள் விரும்புகிறார்கள். ஒரே நேரத்தில் இரு வேலைகள் இருப்பதால் இதில் அதிக பணி நாட்கள் வேலை செய்யும் வாய்ப்பும் மாக்களுக்கு கிடைக்காமல் போகிறது. நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் பணிகளையும் மேம்போக்காக செய்யும் காரணத்தினால் பணம் விரயம் தான் நடக்கிறது. கண்மாய்கள் சரியாக தூர் வார படுவதில்லை. மர கன்றுகள் நடபட்டாலும், பின்னர் அவை சரிவர பராமரிக்கபடுவதிலை  இந்த திட்டத்தின் கீழ் செலவு செலவு செய்யபடும் பணதினால் கிராமத்திற்கும் பலன் இல்லை, விவசாயத்திற்கும் பலன் இல்லை. மக்களை சோம்பேறி ஆக்குவது தான் நடக்கிறது. பணம் விழலுக்கு இழைத்த நீர் போல ஆவது மட்டும் அல்லாமல், ஒரு சமுதாய சீர்கேடும் நடக்கிறது. திட்டத்தை என்னவோ நல்ல நோக்கத்தோடு தான் அரசாங்கம் செயல்படுத்துகிறது. ஆனால் அதனை நடைமுறை படுத்துவதில் தான் இத்தனை சீர்கேடும் நடக்கிறது. பல நல்ல திட்டங்களின் கதி இது தான்.


உண்ண உணவு, குடிக்க சுகாதாரமான நீர், இருக்க வீடு, உடுக்க உடை போன்ற அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்யாமல் வாழும் ஏழைகள் பலர். நகர் புற பெண்கள் குடும்பத்திற்காக படும் கஷ்டத்தை விட கிரமாபுற பெண்கள் குடும்பத்திற்காக படும் கஷ்டம் சொல்லிமாளது. சொல்லபோனால் பணம் ஈட்டுவது முதல் குடும்ப பாரம் முழுவதையும் தலையில் தாங்கும் பெண்கள் கிராமபுறத்தில் அதிகம்.  பல குடும்பங்களில் ஆண்கள் சம்பாதித்தாலும் அதில் பெரும் பகுதியை தண்ணி அடிப்பதில் செலவு பண்ணுவதை 70௦ % குடும்பங்களில் காணமுடியும். ஒரு பொறுப்புள்ள குடும்பதலைவிகளாக பெண்கள் செய்யல்படுவது உண்மை. குடும்ப தலைவன் என்ற அதிகாரம் மட்டும் வேண்டும். ஆனால் குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பை ஏற்கமாட்டேன் என்பது தான் பெரும்பாலான கிராமப்புற ஆண்களின் குணம். நகர்ப்புறங்களிலும் இது இருந்தாலும் , கிராமங்களில் இந்த போக்கு அதிகம்.   தங்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவே ஏழைகள் பெரும் பாடுபடவேண்டி இருக்கிறது. 


இத்தகைய சூழலில் அவர்களின் இயலாமையையும் ஆசைகளையும் பயன்படுத்தி, தங்கள் வியாபாரதிற்காகவும் அரசியல் லாபத்திற்காகவும் சுயநல நோக்கோடு  பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது.  இதனால் தங்கள் தகுதியை மேல் ஆசைபட்டு கடன் சூழலில் சிக்கும் நிலை உருவாகி உள்ளது. அடிப்படை தேவையான கழிப்பறை வசதி கூட பல வீடுகளில் இல்லை. அதற்க்கு இடமும் இல்லாத எழைகளுக்கு , பொது கழிப்பிட வசதியும் அனைத்து கிராமங்களிலும் எற்படுத்திதரவில்லை. அப்படியே இருந்தாலும் அவை சரிவர பராமரிக்க படுவதில்லை( பராமரிக்க நிதி ஒதிக்கீடு செய்யபட்டால் தானே )  


ஆனால் இலவச தொலைக்காட்சி, மிக்சி, க்ரிண்டேர் என்று கவர்சிகரமான வாக்குறுதிகள் அளிக்கபடுகின்றன. ஒரு கிராமம் முன்னேற எது தேவை ? ஒரு சமுதாயம் முன்னேரே எது தேவை ? தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்படும் மானாட மயிலாட, குத்து பாட்டு, கலாசார சீர்கேட்டை உண்டாகும் சீரியல் மற்றும் சினிமா வா ? அல்லது அடிப்படை சுகாதார வசதியா ? ஒரு சுயஉதவி குழுவில் உறுப்பினராக இருக்கும் 50௦ வயது பெண்மணி, குழுவில் ருபாய் 5000௦௦௦ கடன் கேட்டார். நான் எதற்கு கடன் என்று கேட்டதற்கு, தனக்கு இலவச தொலைக்காட்சி பெட்டி கிடைத்திருபதாகவும், ஆனால் வீட்டில் மின் இணைப்பு இல்லை என்றும், மின் இணைப்பு பெருவதார்காக கடன் வேண்டும் என்று கேட்டார். தன் பேரன்கள் தொலைக்காட்சி பார்க்க மின் இணைப்பு தருவதாகவும் சொன்னார். தன் பேரன்கள் படிப்பதற்காக வீட்டிற்கு மின் இணைப்பு தர நினைக்காதவர், தொலைக்காட்சி பார்க்க மின் இணைப்பு தர நினைத்தார். அடித்தட்டு மக்களை சினிமா மோகத்திலும் அறியாமையிலும் திளைதிருக்க வைத்து அதனேயே தன் ஒட்டு வங்கியாக மாற்றும் சாமர்த்தியம் இந்த அரசியல்வாதிகளுக்கு உண்டு. ஒட்டு மட்டும் அல்ல, தான் நடத்தும் தொலைகாட்சிகளுக்கும் வருமானம் பார்க்கும் செயல். மேலும் அதே ஊடகங்கள் மூலம் பல பொய்களை பரப்பி ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிக்கும் திறன் இவர்களை விட்டால் யாருக்கு வரும்.


அடித்தட்டு மக்கள் தங்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மிக கஷ்ட்டப்பட்டு உழைத்து பணம் ஈட்டுகின்றனர். ஆனால் இவர்களை (அரசியல்வாதிகள்)  சுரண்டி தன் குடும்பத்தினர் பல தலைமுறைகளுக்கு சுகபோகமாக வாழ, தன் ஆன்மாவை இழந்து, சுயமரியாதையை இழந்து பணம் ஈட்டுகின்றனர். அத்தியாவசியமான தேவைகளை தாண்டி ஆடம்பர தேவைகளை பூர்த்தி செய்து கொண்ட பிறகும், பணத்தின் மீதான வெறி இவர்களுக்கு அடங்குவதில்லை.


தனக்கும் தன் குடும்பத்திற்கும் சொத்து சேர்க்க பயன்படுத்தின மூளையை, அதில் 10௦ % தை யாவது சமுதாய நலன் மற்றும் மக்கள் நலனுக்காக பயன்படுத்தியிருந்தால் நாடு நன்றாக இருந்திருக்கும். மக்களுக்கு மீன் பிடிக்க கற்று தராமல், மீனை மசாலா தடவி வறுத்து வாயில் ஊட்டிவிடும் வேலையை இந்த அரசு செய்ததாக ஆனந்த விகடன் பத்திரிகை தன் தலையங்கத்தில் எழுதியது. மக்களை பிச்சைகார்களாக, ஏழைகளாக, அறியாமையில் உழல்பவர்கலாக வைத்திரிந்தால் தானே இவர்கள் பிழைப்பு நடத்தமுடியும். 


பணத்தாசை, பதவியாசை, இதற்காக மானம் மரியாதை கொள்கை இவற்றை விற்றுவிடும் தைரியம், சகுனித்தனம், தன்னையும் தன் குடும்பத்தையும் தவிரா பிறரை பற்றி சிறிதும் கவலைபடாத இரக்கமற்ற குணம் ஆகியவற்றை கொண்ட எந்த ஆறறிவு பெற்ற மிருகமும் அரசியலில் மட்டும் அல்ல மற்ற துறைகளிலும்  பிரகாசிக்கலாம் என்பது தான் இன்றைய சூழல். ஆனால் இவர்கள் வாழ்வதினால் உலகிற்கு என்ன பயன்.  கெடுதலே அன்றி பயன் ஏதும் இல்லை 
       

திங்கள், 11 ஏப்ரல், 2011

முதல் அமைச்சர் விஜயகாந்த் -1

இந்த தேர்தலில் ஜெயித்து, ஜெயலலிதா காலில் விழுந்து  ஒரு பேச்சுக்கு விஜயகாந்த் தமிழக முதல் அமைச்சர் ஆகிவிட்டார் என்று வைத்து கொள்வோம். என்ன நடக்கும் ?


அதி காலை 10௦ மணி ( விஜயகாந்திற்கு அது தான் அதி காலை). போதை தெளிந்து எழுந்து மீண்டும் அரை (half )மயக்கத்தில் அமர்ந்து இருக்கிறார்.

விஜயகாந்த் P.A : சார் உங்களை பார்க்க மதுரை கலக்டர் வந்துருக்கார்  

விஜயகாந்த் : அங்.... வர சொல்லுங்க 

மதுரை கலக்டர் : வணக்கம் 

விஜயகாந்த் : சேலம் கலக்டர் ஆ வாங்க வாங்க 

மதுரை கலக்டர் : சார் நான் மதுரை கலக்டர் 

விஜயகாந்த் : நான் பேசும் பொழுது எதிர்த்தா பேசுறே ? ஒரு உதை விட்டேனா தெரியும். P.A. உடனே இவனுக்கு சேலத்துக்கு ட்ரான்ஸ்பர் ஆர்டர் ரெடி பண்ணு.

மதுரை கலக்டர் : நான் வந்த விஷயம் என்ன என்றால் ....

விஜயகாந்த் : சரி சரி ரொம்ப இழுக்காதே வந்த விசயத்தை சொல்லு...

மதுரை கலக்டர் : தேர்தல் நேரத்துல நான் ரொம்ப கெடு பிடியா நடந்துகிட்டதற்கு அழகிரி இப்ப ரொம்ப தொல்லை பண்றார். அடி ஆட்கள விட்டு என் ரூமுக்கு முன்னாடி 2 பாத்ரூம் போய்  வைக்குறார். காலைல கலக்டர் ஆபீஸ் ல அதை சுத்தம் பண்ணிட்டு தான் வேலைய ஆரம்பிக்க வேண்டிருக்கு.

விஜயகாந்த் : என்னையா ... இதை எல்லாம் ஒரு கம்ப்ளைன்ட் ன்னு CM கிட்ட  சொல்ல வந்துட்ட. காலைல வந்துருக்கும். போய் இருப்பானுங்க. பதிலுக்கு நீ வேனும்ன அவன் விட்டுக்கு போயேன்.

மதுரை கலக்டர் : என்ன சார் இப்படி பொறுப்பில்லாம பதில் சொல்றீங்க ? மதுரை போலீஸ் என்னடானா கலக்டர் கம்ப்ளைன்ட் கொடுத்தாலும், அந்த பேப்பர சுருட்டி காது கொடைறாங்க. காவல் துறையை கட்டுபடுத்தும் நீங்களும் பொறுப்பு இல்லாமல் இருக்கீங்க 

விஜயகாந்த் :  என்னடா நீ . சினிமாவுல நான் போலீஸ் வேஷம் போட்டத பார்த்து ரொம்ப எமாந்துட்ட போல. சரி சரி ரொம்ப கெஞ்சுற. CM ம ஒரு தடவ நேர பார்த்துட்டு சொல்லிடு போ 

மதுரை கலக்டர் : (ஜெர்காகி மெதுவான குரலில் ) நீங்க தானே சார் CM

விஜயகாந்த் : ஏன்டா உனக்கு ஒரு தடவ சொன்ன புரியாத ? எதிர்த்து பேசிக்கிட்டே இருக்க. நான் CM இல்ல டம்மி. மம்மி போய் பாரு 

மதுரை கலக்டர் : யாரு சார் நம்ம ஜெயலலிதா அம்மாவையா ?

விஜயகாந்த் : ஐயோ அடிச்ச போதையெல்லாம் போச்சே. இப்படி விவரம் எல்லாம இருக்கியே உன்னையெல்லாம் யார் கலக்டர் ஆக்குனது. மம்மி இன்ன   பிரேமலதா டா. அவ காதுல மட்டும் விழுந்துது ...... உன் சீட்டு கிழிஞ்சிடும். சரி சரி. அந்த Fridge இல் இருந்து VAT -69 எடுத்து கொடுத்துட்டு போ. நானும் அவ கிட்ட உன் பிரச்சனையை சொல்லறேன்.
பின் குறிப்பு 
விஜயகாந்த் P.A யாருன்னு கேட்கலையே. நம்ம வடிவேலு தான். விஜயகாந்த் CM ஆனதை  கேள்விபட்டதும் ஓடி வந்து விஜயகாந்த் காலில் விழுந்து, சில பல உதைகள் வாங்கி ( எவ்வளவு அடிச்சாலும் தாங்குறருயா )- சம்பளமே வாங்காமல் PA வேலை பார்த்துகொண்டிருக்கிறார்   


----------------------------------------------------------------------------------------------------------




கருணாநிதி வளர்த்துள்ள விஷ செடி

திருவாரூரில் இருந்து திருட்டு ரயில் ஏறி, இன்று மனைவி, துணைவி, மகன்கள், மகள்கள், தாய்மாமன் மகன்கள், பேரன்கள் பேத்திகள் என்று தன் குடும்பத்தினர் அனைவரையும் அதிகராமையமாக்கி, தமிழ்நாட்டை கொள்ளைஅடித்து வரும் கருணாநிதி மீண்டும் மக்களை ஏமாற்ற தயாராகி உள்ளார்.

முதல் அமைச்சர் ஆக வேண்டும் என்பது என் ஆசை இல்லை. உங்களுக்கு வேலைக்காரனாக இருந்து பணிபுரியவே ஆசை.

முதல் அமைச்சர் என்பதை விட திருவாரூர் M.L.A என்று சொல்லிகொள்வதில் தான் எனக்கு பெருமை என்று கூறிகொள்கிறார்( கூறி கொல்கிறார்)

தமிழ்நாட்டு பிரச்சனைக்காக போராடாதவர், தன் பேரன்களுக்கும் மகனுக்கும் அமைச்சர் பதவி வேண்டி இந்த தள்ளாத வயதிலும் தவம் இருந்தார்.

சீட்டு பிரச்சனையில் மதிய அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்வோம் என்று காங்கிரஸ் ற்கு மிரட்டல் விடுத்தார்.

ரியல் எஸ்டேட் தொழிலில் நிலங்களை மிரட்டி வாங்குவது, சினிமா உலகத்தையே தன் கட்டுபாடுக்குள் வைத்திருப்பது, மதுரையில் அழகிரி ராஜ்ஜியம், கல்லூரிகளையும் மிரட்டி பங்குகளை வாங்குவது போன்ற அதிகார துஷ்பிரயோகங்கள் மூலமும், விஞ்ஞான ஊழல்கள் மூலமும் பல தலைமுறைக்கு சொத்து சேர்த்த பிறகும் என்னும் ஆசை குறையாமல் வளையவரும் முதியவர் கருணாதிக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்தால் என்னாகும் ?

இலவசங்கள் மூலம் நம்மை ஏற்கனவே அடிமை ஆக்கியுள்ளார். தமிழக மக்கள் அனைவரையும் கொத்தடிமை ஆக்க முயற்சிகள் நடக்கும். சட்டம் மற்றும் நீதியை ஏற்கனவே அதிகாரா துஸ்பிரயோகம், ரௌடி ஸம் மற்றும் கட்டபஞ்சாயட்டு மூலம் அவர்கள் கட்டுபாட்டில் தான் வைத்துலார்கள். இது மேலும் அதிகமாகும்.

சாதாரண குடிமக்கள் ஆகிய நாம் வேலைக்கு சென்றோமா, குடும்பத்தை பார்த்தோமா, பிள்ளைகளை நல்ல பள்ளியில் படிக்கவைத்து நம்மை  விட நல்ல நிலைமைக்கு அவர்களை ஆக்குவோமா, கடைசி காலத்தில் சேமித்த பணத்தில் வாழ்கையை ஒட்டுவோமா என்று தான் நினைகிர்றோம். ஊழல்களை பற்றியும், கொலை கொள்ளை பற்றியும் பேசி திரிகிறோம். ஆனால் அதற்கு எதிராக ஒரு சின்ன எதிர்ப்பை கூட காட்டுவதில்லை. இவை எல்லாம் அதிகமாவதற்கு நாம் தான் காரணம் என்பதை உணருவதில்லை.

இலவசங்கள், NREGA மூலம் கூலி வேலையை செய்யாமலேயே ( அல்லது பெயருக்கு வேலை செய்தவர்களுக்கு ) சம்பளம். ஊருக்கு ஊர் மதுபான கடை, ஓட்டுக்கு பணம்  இவைகள் மூலம் மக்களை சோம்பேறிகளாக்கி, அவர்களை சிந்திக்க விடாமல் சிற்றின்பங்களில் திளைக்கவைத்து, ஊழலில் அவர்களையும் பங்குதார்கள் ஆக்கி ஒரு மோசமான சமுதாய சூழலையே ஏற்படுத்தி இருக்கிறார்கள். நேர்மையாக வாழ்பவர்கள், இலவசங்களை எதிர்பார்காதவர்கள் ஏமாளிகளாக சித்தரிக்கப்படும் சுழல் தான் இருக்கிறது. இப்படி தான் வாழ வேண்டும் என்பதற்கு பதில் எப்படி வேண்டும் என்றாலும் வாழலாம் பணம் சம்மதிக்கலாம் என்ற சிலரது சிந்தனையை பாலும் தேனும் ஊட்டி வளர்த்து, பலரது சிந்தனையாக சமூக சிந்தனையாக மாற்றியது தான்     தி .மு.கா வின் சாதனை.

ஒரு கேவலமான பாதையை நோக்கி தான் மற்றும் தன் குடும்பம் சென்றது மட்டும் அல்லாமல் தமிழகத்தையே தவறான பாதையில் திருப்பியது தான்  தான் இவர்களது சாதனை.

மக்களை தவறான பாதையை பின்பற்ற வைப்பது எளிது. குறுக்கு வழியில் பணம், உழைக்காமல் பணம், சோம்பி இருப்பதே சுகம், போதையில் மனம் என்று அடித்தட்டு மக்கள் மாறிவிட்டார்கள். இன்றைய சமுதாயத்தை நினைத்தாலே மனதில் பயம் ஆட்கொள்கிறது. நம் குழந்தைகள் நல்லவர்களாக இருந்தால் நசுக்கி பிழிந்து எறிய பட்டுவிடுவார்களோ என்ற பயம்.

நல்ல மாற்றத்தை யாரால் கொண்டு வர முடியும் ? நூறு இளைங்கர்களை தாருங்கள். இந்த நாட்டையே மாற்றி காட்டுகிறேன் என்று சொன்னார் விவேகானந்தர். அந்த நூறு நல்ல இளைங்கர்களை கண்டுபிடிபதேயே மிக சிரமமான காரியமாக கருணாநிதி மாற்றிவிட்டார். 

நகரத்தில் பிறந்தாலும் கிராமத்தில் வேலை பார்க்க வேண்டும் என்று சிறு வயதிலேயே விரும்பியவன் நான். இன்று கிராமங்களில் மக்களின் மனதை வெகுவாக கெடுத்த புண்ணியம் கருணாநிதிக்கும், அவர் வளர்ந்த சினிமா உலகத்திற்கும், வளர்த்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும், திறந்த மதுபான கடைகளுக்கும் கொடுத்த இலவசங்களுக்கும், போய் சேரும். 

தான் வளர பிறர் குடியை கெடுத்தவர்களை பற்றி கேள்விபட்டிருக்கிறோம். தானும் தன் குடும்பமும் வளர ஒரு சமூதாய சீர்கேட்டையே உருவாக்கியவர் கருணாநிதி. அவர் வளர்த்துள்ள விஷ செடியை அகற்றவே வெகு நாட்கள் ஆகும். இவரை தேர்ந்து எடுத்தால் இந்த விஷ செடிக்கு உரம் போட்டு நீர் பாய்ச்சி வளர்ப்பார்.



வெள்ளி, 8 ஏப்ரல், 2011

கலைஞர் குடும்பம் எப்படி எல்லாம் சம்பாதிக்கிறது



கலைஞர் குடும்பம் எப்படி எல்லாம் சம்பாதிக்கிறது என்பதற்கு என்னும் ஒரு உதாரணம் ( இட்லி வடையில் படித்தது )


திரு வி.சந்தானம் இந்த பேரை பலர் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். இதோ அவரை பற்றிய ஒரு செய்தி....

கலைஞர் டிவி க்கு தமிழக அரசு பணம் கொடுக்கப்படும் விகிதம் - 10 விநாடிக்கு ரூ.9700/- சன் டிவி க்கு – ரூ.23,474-

தமிழக அரசு சம்பந்தப்பட்ட பல விளம்பரங்கள் கலைஞர் தொலைக்காட்சியில் வருவதைக் காண்கிறோம். சில விளம்பரங்கள்
3-4 நிமிடங்கள் அளவிற்கு கூடப் போகின்றன. இவை எல்லாம் சமூக நலன் கருதி வெளியிடப்படும் இலவச அரசு விளம்பரங்கள் என்றே பலரும் எண்ணி வந்தனர்.

அண்மைக் காலங்களில் அடிக்கடி வெளியிடப்படும் குடிசை வீடுகளை கான்க்ரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்தின் விளம்பரங்களில் கலைஞரும், ஸ்டாலினும் பல நிமிடங்களுக்கு தொடர்ந்து காட்சி அளிக்கிறார்கள். அவர்களுக்கு புகழ்மாலைகள் சூட்டப்படுகின்றன.

அரசு செலவில் இப்படி முதல்வரும், துணைமுதல்வரும் தற்புகழ்ச்சி செய்து கொள்வதே அருவருப்பாக இருக்கிறது. இத்தகைய விளம்பரங்களை திமுக தன் கட்சி செலவில் தயாரித்து வெளியிட்டால் யாரும் கேட்கப்போவதில்லை.

அரசு செலவில் இத்தகைய விளம்பரங்கள் தயாரிக்கப்படுவதே அருவருப்பாக இருக்கிற நேரத்தில், இவை தொலைக்காட்சி நிறுவனத்திற்கு தமிழக அரசால் காசு வேறு கொடுத்து ஒளிபரப்பப்படுகின்றன என்கிற செய்தி அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.

இது குறித்து செய்தி ஒன்று –

சென்னை குரோம்பேட்டையில் உள்ள மக்கள் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் வி.சந்தானம், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் டிசம்பர் 30-ம் தேதி இ.எம்.ஆர்.ஐ.தலைமைச் செயல் இயக்குநரிடம் இருந்து பெற்ற கேள்வி- பதில்களின் விவரம் இன்று வெளியாகி இருக்கிறது.

கேள்வி:— 108 ஆம்புலன்ஸ் சேவை சம்பந்தமான விளம்பரங்கள் சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகின்றன. இது இலவச விளம்பரமா? அல்லது கட்டண விளம்பரமா? கட்டணமென்றால் ஒரு முறை விளம்பரத்துக்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்?

பதில்:— 108 ஆம்புலன்ஸ் சம்பந்தமான விளம்பரம் இலவச விளம்பரம் அல்ல. கட்டண விளம்பரம்தான்.

ஒரு முறை பத்து விநாடிகள் விளம்பரத்துக்கு சன் டிவியில் ரூ.23,474-ம், கலைஞர் டிவியில் ரூ.9,700-ம் செலுத்த வேண்டும் !!!

சன் தொலைக்காட்சியின் உரிமையாளர்கள் - முதல்வரின் பேரன், அவர் மனைவி மற்றும் அவரது குடும்பத்து உறுப்பினர்கள்.

கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர்களில் - முதல்வரின் மகளும், சில அமைச்சர்கள் குடும்பத்தினரும் அடங்குவர்.

அரசாங்க விளம்பரங்கள் எந்த அடிப்படையில் இந்த தொலைக்காட்சிகளுக்கு கொடுக்கக்ப்படுகின்றன ?

சன் தொலைக்காட்சி அதிகம் பேரால் பார்க்கப்படுவதால் விளம்பரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாகச் சொல்லலாம். சரி - கலைஞர் தொலைக்காட்சியை எவ்வளவு பேர் பார்க்கிறார்கள் ? அதற்கு எப்படி அரசு விளம்பரத்தைக் கொடுத்தார்கள் ?

இதில் விநோதம் என்னவென்றால் - அரசு தொலைக்காட்சியான பொதிகையில் இத்தகைய அரசு விளம்பரங்கள் வெளியாவதே இல்லை ! (அங்கு காசு கொடுத்தால் அது தன் குடும்பத்திற்கு எப்படி போகும் ?)

அரசாங்க பணத்தில் முதல்வர் குடும்பத்து தொலைக்காட்சிகளுக்கு விளம்பரம் கொடுப்பது அதிகார துஷ்பிரயோகம் இல்லையா ?

மிகுந்த சிரமத்திற்கிடையே இத்தகைய தகவல்களை வெளிக்கொண்டு வந்த திரு வி.சந்தானம் அவர்களைப் பாராட்டுவதும், இவற்றை அதிக அளவில் பொது மக்கள் கவனத்திற்கு கொண்டு போவதும் நம் கடமை.

எரிகிற வீட்டில் பிடுங்கின வரை லாபம் என்கிற போக்கில் செயல்படுவது சரியா? 



thanks to http://idlyvadai.blogspot.com/2011/04/blog-post_07.html

அரசியல் ஜோக்ஸ்-2

அரசியல் ஜோக்ஸ்-2

ஸ்டாலின் : எல்லா இலவசங்களையும் இந்த தேர்தல்லே அள்ளிவீசிட்டா அடுத்த தேர்தல்லுகு என்ன பண்றது ?

கருணாநிதி : கவலைபடாதே. இப்ப மக்களை விலைக்கு வாங்குறோம்  அடுத்ததேர்தலுக்கு ஜெயலலிதாவிற்கு 5 லட்சம் கோடி கொடுத்து அ.தி.மு.க வையே விலைக்கு வாங்கிவிடலாம்.

----------------------------------------------------------------------------------------------------------

என் உயிர்க்கு ஆபத்து என்றால் கலெக்டர் மற்றும் தேர்தல் ஆணையம் தான் பொறுப்பு- அழகிரி 

அவங்க சொல்லவேண்டியதை இவர் சொல்றாரு. அஞ்ஜாநெஞ்சனுக்கு வந்த சோதனையை பாருங்க 
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

 2050௦ ஆம் ஆண்டு :   உதயநிதி ஸ்டாலின் முதல்வர் . அவருக்கு மனைவிகள் 5. துணைவிகள் 10௦. தமிழை அமெரிக்காவின் தாய் மொழி ஆக்கும் போராட்டம். இலவச மனைவி வழங்கும் திட்டம் அவரை மீண்டும் முதல்வராக்கும் என்று நம்பபடுகிறது .

உலக கோடிஸ்வரர்கள் பட்டியலில் 2100 ஆம் ஆண்டு வரை யாரும் இவரை நெருங்க முடியாது என்று Forbes பத்திரிகை தகவல். (Forbes பத்திரிகையும் எவர்கள் குடும்ப சொத்து என்பது கூடுதல் தகவல் )
---------------------------------------------------------------------------------------------------------       

அரசியல் ஜோக்ஸ்

அரசியல் ஜோக்ஸ் 

அண்ணன் விஜயகாந்த் அம்மா வோட ஏன் ஒரே மேடையில் பேசவில்லை ?

போதையில அம்மாவையே அடி பின்னி எடுத்துட்டா அப்பறம் களேபரம் ஆகிடும்ல அதான்.
----------------------------------------------------------------------------------------------

அண்ணன் விஜயகாந்த் வேட்பாளரை ஏன் எட்டி உதைத்தார் ?

ச்சே ச்சே அவர் உதைக்கவில்லை. வேட்பாளர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க நினைத்தார் . அவர் எதற்கு கீழ குனிஞ்சு சிரமபடவேண்டும்,என்று  விஜயகாந்தே காலை எடுத்து அவர் தலையில் வைத்தார் அவ்வளவு தான் 

-----------------------------------------------------------------------------------------------------


சனி, 2 ஏப்ரல், 2011

மகளிர் சுய உதவி குழுக்களின் உண்மை நிலை - தி. மு.க வின் பொய் தகவல்கள்

மகளிர் சுய உதவி குழுக்களும் அதனை பற்றி ஊடகங்களில் வரும் செய்திகளை படிக்கும் பொழுது. ஊடகங்கள் சுய உதவி குழுக்களின் உண்மை நிலையை உணராமல் செய்தி எழுவது கவலையை தருகிறது. பெரும்பாலும் அரசும், அரசு சார நிறுவனங்களும், வங்கிகளும் சுய உதவி குழு சம்பந்தமான செய்திகளை ஊடகங்களுக்கு தரும். அவரவர்கள் அவர்களுக்கு சாதகமான தகவல்களுடன் செய்தி வருமாறு பார்த்துகொள்வார்கள். மகளிர் சுய உதவி குழுக்களின் உண்மையான நிலை என்ன ? அது பற்றி பாப்போம் 

மகளிர் திட்டம் என்பது சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக ஏழை  பெண்களை முன்னேற்ற வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு பெண்கள் மேன்பாட்டு கழகம் செயல்படுத்தும் திட்டம் ஆகும். இது பெண்களை 12 முதல் 20௦ நபர் வரை கொண்ட குழுவாக அரசு சார நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகள் மூலம் அமைத்து செயல்படுத்தப்படும் திட்டம் ஆகும். இது முதன் முதலில் தர்மபுரி மாவட்டத்தில் 1989 ஆம் ஆண்டு     
  G.O.Ms.No.764, Social Welfare & NMP Dept. dt.1.9.1989  வழியாக விவசாய வளர்ச்சிக்காக உலக நிதி (IFAD ) - Internationl Fund for Agricultural Development என்ற அமைப்பின் நிதி உதவியுடன் சிறிய அளவில் செயல்படுத்தப்பட்டது. இதன் வெற்றியை தொடர்ந்து சேலம் , தென் ஆற்காடு, மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்திலும் செயல்படுத்தப்பட்டது. IFAD திட்டத்தின் வெற்றியை பார்த்து மாநில அரசே தன் சொந்த நிதியுடன் 1997-1998 ஆண்டு வெளியிட்ட அரசாணை ( G.O.Ms.No.292 Social Welfare & NMP Dept. dt. 4.12.1996 ) மூலம் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத்திலும் செயல்படுத்தப்பட்டது. 31 .03 .2009 தகவல் படி 59 இலட்சம் மகளிர் இந்த திட்டத்தில் இணைந்துள்ளனர். இந்த திட்டத்தில் இணையாமல் உள்ள மகளிர் குழுக்களும் உண்டு.

மகளிர் சுய உதவி குழுக்களை அமைக்க அரசு சார நிறுவங்களை மகளிர் திட்டம் பயன் படுத்திகொண்டது. இந்த நிறுவங்களில் மகளிர் திட்டங்களின் சலுகைகளை பெரும் அங்கீகரிக்க பட்ட நிறுவனங்கள் Madhi -NGOs  என்றும் பிற அரசு சாரா நிறுவனங்கள் Non -mathi NGOs என்றும் அழைக்கபடுகின்றன. Mathi NGO களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். சுய உதவி குழுக்களை அமைப்பது, அவைகளுக்கு பயிற்சி தருவது , கடன் வசதி செய்து தருவது மற்றும் அவைகளின் செயல்பாட்டை கண்காணிப்பது இந்த அரசு சார நிறுவனங்களின் கடமை. இவ்வாறு அமைக்க பட்ட குழுக்கள் பிற்பாடு கூட்டமைபுகளாக பஞ்சாயத்து, வட்டாரம் மற்றும் மாநில அளவில் அமைக்கபடுகின்றன. கூட்டமைப்புகள் வந்த பிறகு சுய உதவி குழுக்களை அமைத்த நிறுவங்களின் உதவி திட்டத்திற்கு தேவைபடாது. அவைகள் முழுமையான மக்கள் நிறுவனமாக செயல்படும்.

மகளிர் சுய உதவிகுழுக்கள் நன்றாக செயல்பட பல்வேறு பயிற்சிகள் குழுக்களுக்கும் அதன் தலைவிகளுக்கும் அளிக்கபடுகிறது. குழுக்கள் அமைத்து ஆறு மாதம் ஆன பிறகு Credit Rating ( தர மதிப்பீடு ) செய்யபடுகிறது. இந்த தர ஆய்வுவின் பொது  கடன் பெறுவதற்கான தகுதி அந்த குழுவிற்கு இருக்கின்றதா என்பது பார்க்கப்படும். மகளிர் திட்டத்தின் உதவி திட்ட மேலாளர், மாவட்ட கிராமப்புற வளர்ச்சி நிறுவனதிலிருந்து ஒரு நபர் (DRDA), ஒரு வங்கி பணியாளர் மற்றும் அரசு சார நிறுவனத்தின் பிரதிநிதி ஆகியோர் இருப்பர். பஞ்சாயத்து கூட்டமைப்புகள்(PLF ) இருக்கும் இடத்தில் அடங பிரதிநிதி ஒருவரும் கலந்துகொள்வார். குழிவில் 12 நபர்களுக்கு மேல் கண்டிப்பாக இருக்க வேண்டும். இது தவிர உறுப்பினர்களின் தொடர் சேமிப்பு, கூழு கூட்டம் முறையாக நடந்தது, அறிக்கை மற்றும் பிற கணக்கு புத்தகங்கள் பராமரிப்பு, உள் கடன் சென்றது, கடன் திருப்பி செலுத்தும் விதம் போன்றவை தரஆய்வின் பொது சரி பார்க்கப்படும்,  இதன் பிறகு வங்கி கடன் வசதிக்கு தகுதி வாய்ந்த குழுக்கள் பரிந்துரைக்க படும்.
ஒரு வருடத்திற்கு பிறகு அந்த குழு தொழில் கடன் (SGSY/TAHDCO மானியத்துடன்) பெற தகுதி பெரும்.  

முதல் Credit Ratingil தகுதி பெற்ற குழுக்களுக்கு சுழல் நிதி வசதியும் கிடைக்கும் ( Rs60000 கடனை சுழற்சி முறையில் பயன்படுத்தி கொள்ளலாம், இதில் Rs10000 மானியம்). நகர் புறத்தில் உள்ள மகளிர் குழுக்களுக்கு முன்பு சுழல் நிதி மானியம் இல்லாமல் இருந்தது. 2006 .2007 அரசாணை  
G.O.Ms.No. 177 Rural Development & Panchayat Raj (CGS-II) dated 5.12.2006, மூலம் அந்த வசதியும் செய்து தரப்பட்டது.
மகளிர் சுயஉதவி குழுக்களுக்காக அரசு செய்திருக்கும் விஷயங்களை பார்த்தோம்.

இனி அவை உண்மையில் எவ்வாறு செயல்படுகின்றன, இந்த திட்டம் ஏழை மக்கள், சுய உதவி குழுக்களின் தலிவிகள்  அரசு சார நிறுவனங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகம், வங்கிகள், மற்றும் வார்டு கவுன்சிலர் முதல் பிற அரசியல் வாதிகள் வரை எவ்வாறு தவறாக பயன்படுத்தபடுகிறது என்பதை பாப்போம்.

1. மகளிர் சுய உதவி குழுக்களும் அரசு சார தொண்டு நிறுவனங்களும்

ஒரு கிராமத்திற்கு/ஊருக்கு சென்று அங்குள்ள மக்களை சந்தித்து குழு உருவாக்க அரசு சார நிறுவங்கள் முயற்சிகள் செய்யும். இதில் வருமானம் பார்க்கும் வாய்ப்பு இருப்பதால் புற்றீசல் போல கடந்த 10௦ ஆண்டுகளில் ( ஐந்து ஆண்டுகளில் மிகவும் அதிகம் ) பல தொண்டு நிறுவனங்கள் உருவாகின.

ஒரு தொண்டு நிறுவனத்தை பதிவு செய்வது எளிது என்பதால் பத்து இருபது குழு வைத்திருந்தால் கூட தொண்டு நிறுவனம் என்று சொல்லிக்கொண்டு ஊரில் பலர் உலவ தொடங்கினர்.

மகளிர் திட்டத்தின் நோக்கத்தை எல்லாம் அவர்கள் மக்களிடம் சொல்ல மாட்டார்கள். குழுவாக சேருங்கள். சேமிப்பு செய்யுங்கள். ஆறே மாதத்தில் Rs60000 மானிய கடன் வாங்கி தருகிறோம். ஒரு வருடத்தில் ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் மானியத்துடன் தொழில் கடன் வாங்கி தருகிறோம் என்று மகளிரிடம் ஆசை காட்டுவார்கள். கடன் வாங்கி தரும் பொழுது தங்களுக்கு  என்ன செய்ய வேண்டும் என்பதையும் அவர்கள் சொல்லிவிடுவார்கள்.

பொதுவாக அரசு சார நிறுவனங்களின் பிரதிநிதிகள் செய்வது என்னவென்றால் Rs10000 மானியத்துடன் சுழல் நிதி வேண்டும் என்றால் Credit   rating செய்யும் சமயத்தில் RS3000 / தர வேண்டும் என்று கேட்பர். அதில் Rs1000 உதவி திட்ட அலுவலர், Rs1000 வட்டார வளர்ச்சி அலுவலர் ( BDO or A-BDO ) மற்றும் Rs1000 / தங்களுக்கு என்று நேரடியாக கூறியே கேட்பார். ஒருவரின் திறமையை பொருத்து இது கூடும் குறையும். அரசு சார நிறுவங்கள் மற்றும் மகளிர் குழுக்களிடம் பணம் வாங்கிகொண்டு வங்கி இணைப்பு தரும் வங்கி மேளார்களும் உண்டு.

தற்பொழுது நிலைமை என்னவென்றால், தங்களுக்குள் போட்டி இருக்கும் காரணத்தால், ஒரு கிராமத்தில் பத்து ௦ குழ இருந்தால். ஒரு குழுவிற்கு இருவர் அல்லது மூவர் என்று எடுத்து அதனை புதிய குழுவாக பதிவது மிக பெரிய மோசடியாக நடக்கிறது. முன்பு ஒரு குழு மூலம் சுழல் நிதி பெற்ற உறுப்பினரே, வேறு ஒரு குழு வேறு ஒரு NGO மூலம் மீண்டும் சுழல் நிதி பெறுவார். நான்கு ஐந்து குழுக்களில் உறுபினராக இருக்கும் பெண்களும் உண்டு.

தொண்டு நிறுவனம் செய்யும் இந்த தவறை மகளிர் திட்டம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகம் கண்டுகொள்வதில்லை. ஆனால் வங்கியில் எப்படி கடன் கிடைக்கும்? ஒரு தொண்டு நிறுவனம் பெரும்பாலும் ஒரு வங்கியின் நன்மதிப்பை பெற்று இருக்கும். இவ்வாறு ஏற்கனவே சுழல் நிதி பெற்ற உறுபினர்களே மீண்டும் மீண்டும் சுழல் நிதி பெறுவது ஒரு வழக்கமாகவே ஆகிவிட்டது.

மகளிர் சுய உதவி குழு தவிர சில தனியார் குறு நிதி நிறுவங்களும் பெண்களை குழுவாக அமைத்து தங்கள் சொந்த பணதையோ அல்லது வங்கியில் மொத்தமாக கடன் பெற்று அதை அதிக வட்டிக்கு கடன் கொடுப்பதும் அதிகரித்து வருகிற0து. ஆந்திர மாநிலத்தில்Micro Finance Institutions எனப்படும் இத்தகைய நிறுவனங்களுக்கும் ஆந்திர அரசாங்கம் செயல்படுத்தும் வெளுகு (Velugu )- என்ற மகளிர் திட்ட குழுக்களுக்கும் பெரிய போராட்டமே நடக்கிறது. ஆந்திராவின் ஹெலிகாப்ட்டர் விபத்தில் பலியான முன்னால் முதலமைச்சர் திரு. ராஜசேகர ரெட்டி அவர்கள், மகளிர் சுய உதவி குழுக்களை சரியாக பயன்படுத்தினால் அதனை மிக பெரிய ஒட்டு வங்கியாக மாற்றலாம் என்பதை தெரிந்து கொண்டு இந்த திட்டத்தை பல வகைகளில் முறைபடுத்தினார். இக்குழுக்களுக்கு 4 % வட்டியில் கடன் தரும் திட்டத்தையும் செய்தார். ஏழை மக்கள் சுய உதவி குழு மூலம் மட்டும் கடன் வாங்காமல் பல MFI மூலமும் கடன் வாங்கியதால் கடன் சுமை எகிறியது. MFI கடன் வசூலிக்கும் முறை  கிட்டத்தட்ட கந்து வட்டிகாரகள் செயல்பாடுகள் போலவே இருக்கும். அதிக கடன் சுமை காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலையும் ஏற்பட்டது. இதற்கு MFI கள் தான் காரணம் என்று ஒரு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. இது சட்டசபையில் பெரிய அமளியை ஏற்படுத்தியது. இதன் வெளிப்பாடாக ஆந்திராவில் MFI யை முறைபடுத்தும் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதில் கடுமையாக விதிமுறைகள் இருந்தன. இதையே சாக்காக கொண்டு MFI போன்ற குறு நிதி நிறுவனங்கள் மூலம் வாங்கிய கடனை திருப்பி கட்டாதீர்கள் என்று கிராமங்களில் சுயநல நோக்கோடு சில அரசியல்வாதிகள் செய்தி பரப்பினர். இதனால் MFI நிறுவனங்களின் பிரதிநிதிகளை அடித்து விரட்டுவதும் அதிக அளவில் நடந்தது. MFI நிறுவனங்கள் இதனால் பெரும் பாதிப்பு அடைந்தன. அரசியல்வாதிகள் பொதுமக்களுக்கு நன்மை செய்வதற்காக இதை செய்யவில்லை.  ஏழை பெண்களை தங்கள் ஒட்டு வங்கியாக்கும் செயலே இது.

தமிழ்நாட்டிலும் குறு நிதி நிறுவனங்கள் பல செயல்பட்டுவருகின்றது. ஏழை மக்களுக்கு சுயஉதவி குழுக்கள் மூலமும் MFI க்கள் மூலமும் கடன் கிடைப்பது எளிதாகி உள்ளது. இந்த கடன் எதற்காக பயன்படுத்தபடுகிறது, இந்த கடனால் அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய முடியுமா அல்லது தகுதிக்கு மீறி கடன் வாங்கி மீள துயரில் ஆழ்ந்துவிட போகிறார்களா என்பதற்கு ஆந்திராவில் நடந்ததே சாட்சி.

தமிழ்நாட்டில் மகளிர் சுய உதவி குழுவை வைத்து பல ஏமாற்று வேலைகளை அரசு செய்துகொண்டு வருகிறது. குறிப்பாக தி.மு.க ஆட்சியில் மகளிர் சுயஉதவி குழுவிற்கு சுழல் நிதி வழங்கும் விழா ஒரு ஏமாற்று விழாவாகவே பெரும்பாலும் நடத்தப்பட்டது.  1000௦௦௦ குழுக்களுக்கு சுழல் நிதி அளிக்க ஸ்டாலின் வருகிறார் என்று அறிவிப்பு வெளியாகும். உண்மையில் 100 குழக்கள் கூட அந்த கால கட்டத்தில் சுழல் நிதி பெற்று இருக்காது.

ஆனால் 1000௦௦௦ குழுக்களின் தலைவிகள் கையில் கடன் புத்தகம் வழங்க வேண்டும். அந்த மாவட்டத்தை சேர்ந்த மகளிர் திட்ட அலுவலர்கள் இரவு பகல் பாராமல் ஆள் சேர்க்க உழைப்பர். வட்டார வளர்ச்சி அலுவலகமும் சுறு சுறுப்பாக இயங்கும் . அந்த மாவட்டத்தில் இயங்கும் அனைத்து அரசு சார தொண்டு நிறுவனங்களுக்கும் தகவல் பறக்கும். 1000௦௦௦ குழுக்கள் வேண்டுமே ? எதற்கு ஒரு ஆண்டு இரண்டு ஆண்டுக்கு முன்பே கடன் பெற்ற குழுக்களின் கடன் அட்டை  சேகரிக்கப்படும். வங்கியின்  உதவியோடு போலி கடன் அட்டைகள் தயாரிக்கபடுவதும் உண்டு. மகளிர் சுய உதவி குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் தலைவிகளை விழா நடத்தும் இடத்திற்கு அழைத்து செல்ல வசதி, உணவு வசதி ஆகியவை செய்து தரப்படும்.

செய்தித்தாள்களில் 1000௦௦௦ மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ஸ்டாலின் இன்று சுழல் நிதி வழங்கினார் என்று செய்தி வரும். இதை பார்த்து அழுவாத சிரிப்பதா என்று தோன்றும். சில சமயம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் குழுக்களுக்கு சுழல் நிதி கொடுத்து ( குழு ஆரம்பித்து ஆறு மாதத்தில் கொடுக்கவேண்டியது ) அந்த வருட திட்டத்தின் படி கடன் கொடுத்ததாக கணக்கில் காட்டப்படும். உண்மையான பயிற்சி கொடுக்காமலே பயிற்சி கொடுத்ததாக கணக்கு காடும் நிறுவங்களும் உண்டு.

இதில் பெண்கள் எவ்வாறு சமூக பொருளாதார ரீதியாக முன்னேரே முடியும் ? ஆனால் விதிவிலக்குகளும் உண்டு. இந்த திட்டத்தை சரியாக பயன்படுத்தி தனியாகவோ கூட்டாகவோ தொழில் செய்து முன்னேறிய பெண்கள் பல உண்டு . ஆனால் குறுக்கு புத்தி கொண்ட சில பெண்கள் இவ்வாறு  சுய உதவி குழுவில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தமாட்டார்கள்.  வங்கியிலும் பெரிதாக நடவடிக்கை எடுக்க முடியாது. சில சமயம் இந்த பணத்தை அரசு சார நிறுவனமோ இல்லை அதன் பிரதிநிதியோ சுறையாடிவிடுவது உண்டு.

MFI மற்றும் மகளிர் சுய உதவி குழுவின் மூலம் வங்கியிலிருந்து நேரடி கடன் இரண்டையும் வாங்கிய உறுப்பினர் கடன் கட்ட முடியாத சுழல் வரும் பொழுது வங்கியில் பெற்ற கடனை தான் கட்ட மாட்டார்.

நிறைய பொது துறை வங்கிகள் சுயஉதவி குழு களுக்கு கடன் தர யோசிக்கும் நிலை உருவாகிஉள்ளது. எனக்கு தெரிந்து மதுரையில் உள்ள கனரா வங்கியின் கிராமப்புற கிளை ஒன்றில் சுயஉதவி குழுவிற்கு கடன் கொடுத்து  வாராகடனாக  நிற்கும் தொகை அதிகம். அதிலும் ஒரு குறிப்பிட்ட தொண்டு நிறுவனத்தின் மூலம் வங்கி இணைப்பு செய்யப்பட்ட குழுக்களில் வாரா கடனாக இருக்கும் தொகை ஒரு கோடியை தாண்டும்.

அலங்காநல்லூர் ஒன்றியத்தில் நடந்த சம்பவம் ஒன்று. நகர பஞ்சாயதில் சுயஉதவி குழுக்களின் உறுப்பினர் ஒருவருக்கு ருபாய் ஆயிரம் மானியம் ஒதுக்கீடு செய்யபட்டிருந்தது. இதனை வாய்பாக கருதிய வார்டு கவுன்சிலர்கள், தங்கள் கிராமத்தில் ஒரு தொண்டு நிறுவனம் உருவாகிய குழுக்களை தாங்களாவே அணுகி, நான் மானியம் பெற்று தருகிறேன் என்று கூறினர்.  அனால் குழு பெரும் மானிய பணத்தில் பாதியை எனக்கு தரவேண்டும் என்று ஒப்பந்தம் போட்டனர். ஒரு குழுவிற்கு Rs12000 திலேருந்து Rs14000 திலேருந்து வரை மானியம் என்றால் கவுன்சிலற்கு Rs6000 முதல் Rs7000 /  கமிசன். ஒவ்வொரு கவுன்சிலரும் Rs30000 முதல் Rs40000 வரை லாபம் பார்த்தனர்.  ௦௦௦

இப்பொழுது தேர்தல் அறிக்கையில் மகளிர் குழுகளுக்கு ஐந்து லட்சம் கடன் பத்து லட்சம் கடன் மற்றும் ஒரு லட்சம் முதல் இரண்டரை லட்சம் மானியம் என்று அறிவித்து பொது துறை வங்கிகளின் வயற்றில் புளியை கரைத்துள்ளனர்.

இவ்வாறு மக்களுக்கு கடன் கொடுப்பதில் உளவியல் பின்னணி ஒன்றும் உண்டு. கடன் வாங்கிய ஏழை மக்கள் கடன் கொடுத்தவனுக்கு அடிமை. ஏதோ தாங்கள் தான் கடன் கொடுப்பதாக அரசியல்வாதிகள் செய்யும் மாயத்தால், அவர்கள் தவறு செய்தாலும் தட்டி கேட்க பொதுமக்கள் தயங்குவர். போதாகுறைக்கு இலவசங்கள் ஓட்டுக்கு பணம் கொடுத்து ஊழலில் பங்குதார்கலாக மக்களை ஆக்குகின்றனர்.

இதில் உலக அரசியலும் உண்டு. உலக வங்கி, IFAD போன்ற நிறுவனங்கள்  தான் இந்தியாவில் செயல்படுத்தபடும் அரசு திட்டங்களுக்கு நிதி உதவியும் கடனும் அளிகின்றன. நம் நாட்டு அடிப்படை பொருளாதார கொள்கைகளை    
 மேலை நாடுகள் தான் முடிவு செய்கின்றன (விரிவான தகவலுக்கு ப்ளாக் பார்க்கவும் ). இத்தகைய சுழலில் தவறான பொருளாதார கொள்கையால் பொது மக்கள் பாதிக்கப்பட்டு,  அவர்கள் கொந்தளித்தால் என்ன ஆவது ? அவர்கள் கொந்தளிகாமல்  இருக்க என்ன செய்வது ? அவர்களை திருப்தி படுத்த ஒரு திட்டம் தேவை. அதே சமயம் அந்த திட்டத்தினாலும் நமக்கு பயன் கிடைக்க வேண்டும் என்று உலக நாடுகள் யோசித்ததினால் முஹம்மது யூனுஸ் கண்டுபிடித்த இந்த திட்டத்தை பிரபலபடுத்தி வளரும் நாடுகள் அனைத்தையும் கடைபிடிக்க வைத்தனர். இதில் செலவு செய்யும் பண்ணும் பெரும்பாலும் விழலுக்கு இறைத்த நீராக தான் போகிறது.


வெள்ளி, 1 ஏப்ரல், 2011

லவ் வா பண்ற லவ்வு


எழுத்தாளர்கள், ஓவியர்கள் , கவிஞர்கள் ஆகியோருக்கு கற்பனை திறன் அதிகம் உண்டு. அவர்களுக்கு மட்டும் அல்ல அனைவருக்கும் இந்த கற்பனை திறன் பலன் அளிக்கும். வியாபாரத்தில் கூட கற்பனை திறன் அவசியம். வித்தியாசமாக யோசித்து அதுவரை 100௦௦ ml , 200௦௦ ml , 500௦௦ ml பாட்டில்களில் வந்த ஷாம்பூவை ,ஒரு ருபாய் ஷாம்பூ பாக்கெட்டை இல் விற்கலாம் என்ற சிந்தனை ரெங்கராஜன் என்பவருக்கு வந்தது. சைக்கிளில் கடை கடையாக சென்று கிராமப்புறத்தில் விற்கமுயற்சித்து பின்னர் அந்த சிந்தனை பெரியா வெற்றியை தந்தது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு நிகராக வளர்ந்து நிற்கும் நிறுவனமாக அவரது Cavin - Kare நிறுவனம் வெற்றிநடை போட்டுவருகிறது. பல புதிய கண்டுபிடிப்புகளும் வித்தியாசமான சிந்தனையின் பலனே. மாவு அரைக்கும் கல் உரலில் குழவியை கையால் சுற்றி மாவு அரிப்பது வழக்கம்.மாவு அரைக்கும் கிரைண்டரில் குழிக்கு பதில் அடியில் உள்ள பத்திரம் சுழலும். ஆற்றி யோசித்ததே இதற்கு காரணம்.இத்தகைய கற்பனை திறன் Lateral Thinking எனப்படும். கற்பனை திறனில் Creative thinking மற்றும் Logical thinking என்றவையும் அடங்கும். எதையும் காரண காரியங்களோடு பொறுத்தி ஆராய்வதே Logical thinking 

வெற்றி அடைபவர்கள்  வித்தியாசமான செயல்களை செய்வதில்லை. செய்யும் செயலையே வித்தியாசமாக செய்வார்கள் என்று ஷிவ் கேரா கூறுகிறார். 

என் ஆறு வயது குழந்தையின் கற்பனை திறனை பார்க்கும் பொழுது வியப்பும் பயமும் ஒன்றாக வருகிறது. அவளுக்கு தினமும் நான் ஒரு கதை தூங்க போகும் முன் சொல்லவேண்டும். சரக்கு தீர்ந்துவிட்டால் பெரும்பாலும் கற்பனை கதையை சொல்லுவேன். சில சமயம் அவள் " அப்பா ஒரு யானை, ஒரு சிங்கம் மற்றும் ஒரு மயில் வரும் மாதிரி ஒரு கடை சொல்லு என்றோ ஒரு Fan ஒரு Kattil ஒரு TV வரும் மாதிரி (அவைகள் பேசவேண்டும் ) என்றோ கூறுவாள். நானும் கஷ்ட்ப்பட்டு ஒரு கடை சொல்லுவேன்.                 

சில சமயம் நான் நீ பதில்லுக்கு ஒரு கதை சொல்லவேண்டும் என்பேன்.  ஒரு முறை அப்பா நான் உன்னை பற்றி ஒரு கதை சொல்கிறேன் என்றாள். சரி என்றேன் . ஒரு முறை ரமேஷ் (நான்), கணேஷ் (என் தம்பி) இருவரும் தங்கள் அப்பாவுடன் ஒரு துணி கடைக்கு சென்றனர். அங்கு ரமேஷ் ஒரு T-Shirt வாங்கினான். கணேஷுக்கும் அந்த T-ஷர்ட் பிடித்துவிட்டது. எனக்கு தான் அந்த T-ஷர்ட் வேண்டும் என்று கேட்டான். இருவரும் கடையிலேயே சண்டை போட்டுகொண்டனர். உடனே அவங்க அப்பா " இங்கே சண்டை போடவேண்டாம். வீட்டுக்கு போய் யாருக்கு அந்த T-shirt என்று முடிவு செய்வோம் என்றார். வீட்டுக்கு வந்தவுடன் அந்த T-shirt யை அவங்க அப்பா " இந்த த-ஷர்ட் உங்க இரண்டு பேருக்கும் கிடையாது. எனக்கு தான் என்று கூறிவிட்டு அவரே அணிந்துகொண்டார். ரமேஷும் கணேஷும் திரு திருவென முழித்தனர் என்று மழலை மொழியில் கதையை கூறி முடித்தாள். நகைசுவையுடன் கூடிய அவளின் கற்பனை திறனை என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை.  
   
நமது ஊடகங்களும் சமூகமும் எப்படி குழந்தைகளை பாதிக்கின்றது என்பதற்கு அவள் சொன்ன மற்றொரு கதை உதாரணம். ஒரு ஊருலமெரினா அப்படின்னு ஒரு பொண்ணு இருந்தா. அவங்க அம்மா அவளை மெரினா ரோசி அப்படின்னு தான் அவளை கூப்பிடுவாங்க. ஏனா அவ பிங்க் கலர்ல இருப்பா. ஒரு நாள் மெரினா ரோட்டில் நடந்து வந்துகிட்டு இருந்த போது எதிரே ரமேஷ் வந்தான். அவன் மெரினா கிட்ட போய் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்து " I Love You" என்றான். மெரினாவுக்கு பயங்கரமா கோபம் வந்துச்சி. அவ ரமேஷை "Hand bag " ஆள் அடித்து உன்னை எனக்கு பிடிக்கவில்லை. போய் விடு என்றாள்.
மறுநாள் மெரினா நடந்து வந்த போது மீண்டும் ரமேஷ் அவளிடம் போய் ஒரு "Bouquet "  கொடுத்து " I Love You" என்றான்.  மெரினா அந்த Bouquet வை காலில் போட்டு மிதித்தாள். அப்பறம் உனை எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டு சிரித்து கொண்டே சென்றாள்.

ரமேஷ் அழுதுகொண்டே வீட்டுக்கு சென்றான். அவன் அம்மா ஏன்டா அழுவறே என்று கேட்டாங்க. ரமேஷ் நடந்ததை சொன்னான். உடனே அவங்க அம்மா அவனை திட்டி ' உன்னை காலேஜ் கு படிக்க அனுப்புனா லவ் வா பண்ற லவ்வு. இந்த வயசுல என்ன லவ் வேண்டி கிடக்கு. போய் படிக்கிற வேலைய பாரு என்றாள். அதுலேர்து ரமேஷும் ஒழுங்கா படிக்க ஆரம்பிச்சான் ( அப்பாடி தப்பித்தேன் )       

இந்த கதையை கேட்டு சந்தோஷ படுவதா? இல்லை வருத்தபடுவதா ?

இப்பொழுது பள்ளிகூடங்களும் குழந்தைகளின் கற்பனை திறனை வளர்க்கும் பல விசயங்களை கற்று தருகின்றன. வீடு சுவர் முழுவதும் என் பெண் பள்ளியில் வரைந்த படங்களை, கற்று கொண்ட பாடங்களை வரையும் எழுதும் போது நான் தடுபதில்லை. நம் குழந்தைகள் நம்மைவிட புத்திசாலிகளாக இருப்பதை நாம் ஒத்துகொள்ளதான் வேண்டும். அவர்களின் அறிவு வளர்ச்சியை நாம் கட்டுபடுத்த முடியாது. ஆனால் எது நல்லது எது கேட்டது என்ற ஒழுக்க கல்வியை குழந்தைபருவம் முதலே எடுத்து சொல்ல வேண்டும். அதையும் கட்டாய படுத்தி திணிக்காமல் சொல்லும் விதத்தில் சொன்னால் நம் குழந்தைகள் அறிவுள்ளவைகலாக மட்டும் அல்லாமல் ஒழுக்கம் உள்ளவைகளாகும் வளரும். இந்த உலகம் போட்டி நிறைந்ததாகவும் வாழ்கை போராட்ட மயமாகவும் இருக்கும் சுழலில் டார்வின் நின் வலியதே வெல்லும் என்ற தத்துவத்தின் படி தவறான பாதைக்கு நம் குழந்தைகள் பிற்க்காலத்தில் செல்லாமல் தவிர்ப்பது நம் கடமையாகும். நல்ல சந்ததியினை உருவாக்குவதே நம் கடமை. 
குழந்தைகளிடம் ஆக்கபூர்வமான நேரத்தை செலவிடுங்கள். அவர்களின் திறமையையும் ஆர்வத்தையும் அறிந்துகொண்டு அதற்க்கு முக்கியத்துவம் கொடுங்கள். அவர்கள் புத்தி கூர்மையாக இருக்க உதவுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் குழந்தை எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அவ்வாறே நீங்களும் இருங்கள். அவர்கள் மகிழிசியாக இருக்கும் படி பார்த்து கொள்ளுங்கள். தடுக்கி விழுந்தல்லும் மீண்டும் மீண்டும் எழும் தைரியத்தை ஊட்டுங்கள் 

குழந்தைகளின் எதிர்காலமும் அவர்கள் வாழ போகும் உலகமும் அழகாக இருக்க இயன்றதை செய்வோம்