பிரபலமான இடுகைகள்

சனி, 19 மார்ச், 2011

நாய் கடியுடன் தொடங்கிய புத்தாண்டு



01 .01 .2011 . அதிகாலை ஆறு மணிக்கு படுக்கையை விட்டு எழுந்தேன். வீட்டில் வேறு யாரும் இல்லை. மனைவி குழந்தையுடன் சொந்த ஊருக்கு சென்று இருந்ததால் இந்த புத்தாண்டு தனிமையில் தான் தொடங்கியது. படுக்கையை விட்டு எழுந்த நான் வாசல் கதவை திறந்து வெளியில் காலடி எடுத்து வைத்தேன். என் வீடு, தனி வீடுகளுடன் அமைந்த ஒரு குடியிருப்பு பகுதி. ஆறு தெருக்களுடன் நூற்றுக்கும் சற்று அதிக பிளாட்களுடன், அதில் அறுபதிற்கு மேற்பட்ட வீடுகளுடன் புறநகரில் உள்ள குடியிருப்பு பகுதி அது. ஒரு கட்டிட நிறுவனத்தால்  தேவையின் அடிபடியில் வீடுகள் கட்டிகொடுக்கபட்டு, கம்பி வேலி மற்றும் பாதுகாவலர் வசதியுடன் இருக்கும் அந்த குடியிருப்பு பகுதியில் சரியான சாலை வசதியும் ( மண் சாலை அதுவும் சரியில்லாமல் ) சாக்கடை வசதியும் இல்லை. மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வசதிகளை செய்து கொடுக்காமல் அந்த நிறுவனம் ஏமாற்றி வருகிறது என்பது வேறு விசயம்.

நான் இருக்கும் வீடு கடைசியாக ஆறாவது தெருவில் வடக்கு பார்த்து  இருந்தது. வீட்டின் வலது பக்கத்தில் ஒரு வீடு. எதிரில் இப்பொழுதுதான் இரு வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

வீட்டை விட்டு வெளியில் வந்த நான் சிறிது தூரம் காலாற நடக்கலாம் என்று நடக்க ஆரம்பித்தேன். பத்து அடி தான் எடுத்து வைத்திருப்பேன். எங்கிருந்தோ ஓடி வந்த பக்கத்துக்கு வீட்டு நாய், பாய்ந்து வந்து என் தொடையை கவ்வியது. அரைகால் சட்டை சிறிது மொத்தமாக இருந்த காரணத்தினால், அதன் பற்கள் தொடையில் ஆழமாக பதியவில்லை. அதன் இரு பற்கள் மட்டும் லேசாக பதிந்தது. இரத்தம் லேசாக எட்டி பார்த்தது.
   
மேலும் அந்த நாய் என்னை கடிபதற்குள், அந்த நாயை வளர்க்கும் பக்கத்துக்கு வீட்டு இளைஞன், அதனை விலக்கிவிட்டு "சாரி சார், அந்த நாய் குட்டி போட்டிருக்கு அதனால் தான் பாய்ந்துவிட்டது" என்றான்

இந்த நியூ இயர் நாய் கடியில் தான் ஆரம்பிக்க வேண்டும் என்ற விதி இருந்தால் யாரால் மாற்றமுடியும்?

ஆனாலும் சிறிது கோபப்பட்ட நான் " நாயை கட்டி வைக்க வேண்டும் என்று கூடவா என்று தெரியாது" என்றேன் 

சரி நாய்க்கு Anti rabis தட்டுபூசி மற்றும் வேறு தடுப்பூசிகள் போடபட்டுல்லதா என்று கேட்டேன். அவன் போடபட்டுள்ளது என்றான்.

இருந்தாலும் நீங்கள் ஒரு ஊசி போட்டுக்கொள்ளுங்கள் என்றான். 

அதற்கு மேல் என் நடையை தொடராமல் வீட்டுக்குள் சென்று நாய் கடித்த இடத்தை சோப்பு போட்டு கழுவினேன். ஊசி போடும் எண்ணத்தை கைவிட்டேன்.

என்னை கடித்தது ஒரு போமரனியன் வகையை சார்ந்த நாய். ஆனால் அந்த இளைஞன் தன்  வீட்டில் ஒரு நாய் பண்ணையே வைத்து உள்ளான். அவன் தந்தை காய்கறி மொத்த வியாபாரம் செய்கிறவர். மூத்த மகன் வெளிநாட்டில் இருக்கிறான். இளைய மகனும் அவர் மனைவியும் இந்த வீட்டில் இருக்கின்றனர். இளைய மகன் டிகிரி முடிக்காமல், வேறு வேலை எதுவும் செய்யாமல் இருந்தான். தீடிரென ஒரு வருடத்திற்கு முன் அவனுக்கு நாய் வளர்க்க ஆசை வந்தது

முதன் முதலில் ஒரு நாயை ருபாய் 20000௦௦௦௦ / கொடுத்து வாங்கி வந்தான். ஆறு மாத குட்டி என்று அவன் சொன்னான். ஆனால் அதுவே ஒரு கன்றுகுட்டி அளவு இருந்தது. மிகவும் சுறு சுறுப்பாகவும் இருந்தது. அந்த நாயை எனக்கும் பிடித்து விட்டது.

ஒரு வாரம் தான் இருக்கும். ஒரு நாள் அலுவலகம் விட்டு வரும் பொழுது பார்த்தால் அவன் வீட்டை சுற்றி மேலும் 5 நாய்கள் கட்டபட்டிருந்தது. எல்லாமே உயர் ரக நாய்கள். ஒரு மாதத்தில் நாய்களின் எண்ணிக்கை ஒன்பதாக கூடியது. 

முதலில் ஒரு நாய் இருக்கும் பொழுது அதனை நடைபயிற்சிக்கு தினமும் அவன் அழைத்து செல்வான். பின்னர் பல நாய்கள் ஆனதும் கூட அவைகளை ஒரு மாத காலம் கவனத்துடன் பார்த்து கொண்டான்.

எதற்கு எத்தனை நாய் என்று நான் ஒரு நாள் கேட்டதற்கு நாய் வளர்த்து விற்க போவாதாக அவன் கூறினான் . என் வீட்டிற்கும் அவன் வீட்டிற்கும் எடையில், அவர்களுக்கு சொந்தமான காலி எடம் இருந்தது. அதில் தான் நாய்களுக்கு மாட்டுக்கறி சமையல் நடக்கும். நாற்றம் குடலை பிடுங்கும். அத்தனை நாய்களையும் அவனால் வெகு நாட்கள் சரியாக பார்த்து கொள்ள முடியவில்லை. மாதத்தில் சில நாட்கள் குடும்பத்துடன் வெளியூர் செல்வதுண்டு. அப்பொழுது எல்லாம் நாய்கள் கட்டியே வைக்கப்படும். அதனால் நாய்கள் தாங்கள் கட்டப்பட்ட எடத்திலே உச்சா கக்கா போகும். அருகில் இருக்கும் எங்களுக்கு நாற்றம் சகிக்காது. என் மனைவி புலம்பிக்கொண்டே இருப்பாள் .

வீட்டிற்கு பேப்பர் போடுபவர், பால்காரர் ஆகியோர் நாய்கள் கட்டி இருந்தாலும் அவற்றிற்கு பயந்து என் வீட்டுக்கு சுற்றி வருவர். குப்பை அள்ளுபவரும், குப்பை வண்டியை தொலைவிலேயே நிறுத்திவிட்டு, அவர் மட்டும் வந்து குப்பையை எடுத்துக்கொண்டு போய் வண்டியில் போடுவார்.

இதற்கிடையில் அங்கு  இருக்கும் சிறுவர்களுக்கு நாய் வேடிக்கை பொருள் ஆனது. கும்பலாக வந்து வேடிக்கை பார்த்து செல்வர். 

ஒரு நாள் காலை நிறைய நபர்கள் பேசும் குரல் கேட்டு, வெளியில் சென்று பார்த்த பொழுது காணகிடைக்காத அறிய காட்சியை கண்டேன். 

ஒரு உயர் ஜாதி பெண் நாயை, வேறு இடத்திலிருந்து அழைத்து வந்த ஒரு உயர்  ஜாதி நாயுடன் கலவி (Mating ) செய்ய வைத்து அதனை சுற்றி நின்று பலர் வேடிக்கை பார்த்துகொண்டிருந்தனர். காலங்கார்தாளையில் எந்த காட்சியை பார்க்க நேரத்தை நினைத்து தலையில் அடித்து கொண்டேன்.

இந்த சம்பவம் இரு வாரதிற்கு ஒரு முறையாவது நடந்தது.  

ஒரு நாள் காலையில் அலுவலகம் செல்ல என் காலனியை அணிய தேடியபொழுது ஒரு செருப்பை மட்டும் காணவில்லை. உடனேயே பாகத்து வீட்டு நாய் ஏதோ ஒன்றின் வேலை தான் என்று புரிந்தது. வீட்டை சுற்றி தேடி பார்த்தும் கிடைக்கவில்லை என்றதும் மொட்டைமாடிக்கு சென்று அடுத்த வீட்டு மொட்டை மாடியை பார்த்தேன். அங்கு என் செறுப்பு இருந்தது. மற்றும் ஒரு நாள் ஏன் குழந்தையின் ரப்பர் செறுப்பு ஒன்று சுக்கு நூறாக கடித்து குதறப்பட்டு இருந்தது 

இந்த நிலையில் வெளிநாட்டில் இருக்கும் மகனுக்கு திருமணம் ஏற்பாடு நடந்து, திருமணம் பழனியில் நடைபெற்றது. வரவேற்ப்பு திருமணம் முடிந்த மறுநாள் மாலை மணமகன் வீட்டில். வரவேற்புக்கு வருபவர்களுக்கு நாய்கள் தொந்திரவாக இருக்கும் என்பதினால் சில நாய்களை அவசர அவசரமாக வந்த விலைக்கு விட்டுவிட்டனர். இன்னும் சில நாய்களை நாய்கள் காப்பகத்தில் வைத்திருந்தனர்.

வரவேற்ப்பு நாளும் வந்தது. இரவு ஏழு மணி போல் வரவேற்பு நடக்க இருந்த நிலையில் கரண்ட் கட் ஆனது. முன்னேற்பாடாக ஜெனரேட்டர் வசதி செய்யப்படவில்லை. அனால் விருந்தினார்கள் வந்து விட்டனர். கரண்ட் கட் ஆனதால் வீடே இருளில் மூழ்கியது. புகைப்படம் வீடியோ எடுக்க முடியவில்லை. எனவே மணமக்களை வெளியில் அமரவைத்தனர். இந்த எடம் தெரியோமா ? நாய்கள் சில கட்டப்பட்டு அசிங்கம் பண்ணி வைத்த இடத்தில். நானும் என் மனைவியும் பரிசு பொருளுடன் அங்கு சென்ற பொழுது இந்த காட்சியை பார்த்து அதிர்சியானோம். பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு பரிசளித்து விட்டு வந்தோம்.

திருமணம் முடிந்த சில நாட்களிலேயே மணமக்கள் வெளிநாடு சென்று விட்டனர் 

மீண்டும் சில நாய்கள் வீட்டுக்கு திருப்பி அழைத்து வரப்பட்டன. அனால் அதில்  முதன்முதலில் வாங்கிய நாய் (அதன் பெயர் Sophie ) எல்லை. சோபியை விற்று விட்டீர்களா ? என்று பக்கத்துக்கு வீட்டு இளங்கனை கேட்டேன். எல்லை அது நாய்கள் காப்பகத்தில் இறந்து விட்டது என்றான். அவர்கள் அதனை சரியாக கவனிக்கவில்லை என்று குறை கூறினான்.
உண்மையில் அந்த அருமையான நாயை இவன் தான் சரியாக கவினிக்கவில்லை. மிகவும் சுறு சுறுப்பாக இருந்த அந்த நாய், சில மாதங்களிலேயே அதன் பொலிவை இழந்ததை நான் கண்டேன். உடல் இளைத்தும் போனது. நாய் இறந்ததற்கு காரணம் இவன் தான் என மனதிற்குள் நினைத்துக்கொண்டேன்.

இவன் வளர்ர்த்த Labrador இன நாய் ஒன்று ஒரே சமயத்தில் ஆறு குட்டிகளை ஈன்றது. Mating கிற்கு பலன் கிடைத்தது என்று நினைதேன். 

சில நாட்கள் கழித்து நாய்க்குட்டிகளை பார்த்த பொழுது அவை Labrador குட்டிகளை போல தெரியவில்லை. ஒரு சந்தேகத்தில் பக்கத்துக்கு வீட்டு இளைங்கனை கேட்ட பொழுது " ஆமாம் சார். Mating செய்ததில் இது கர்ப்பம் ஆகவில்லை. கொஞ்சம் Careless ஆகா நான் இருந்ததினால் தெரு நாயோடு சேர்ந்து விட்டது என்றான்.

மகனுக்கு சளைத்தவள் நான் எல்லை என்று அவன் தாயும் ஒரு ஆட்டை வாங்கி வளர்க்க ஆரம்பித்தல். நாயை கண்டால் பயப்படும் என் குட்டி பெண், ஆட்டுக்குட்டியிடம் விளையாட ஆரம்பித்தால். எங்கள் வீட்டு Fridge இல் உள்ள  காய்கறிகள் அதற்க்கு உணவாக சென்றது. ஐந்து வயதாகும் என் மகள் விளையாடுகிறேன் என்ற பெயரில் செய்த வேலை இது.

ஒரு நாள் வழக்கம் போல குடும்பம்மே வெளியூர் சென்ற நிலையில், ஆடுகுட்டியின் அலறல் சத்தம் கேட்டது. என் மனைவி ஆடு விநோதமாக கத்துகிறது என்னவென்று பாருங்கள் என்றாள். வெளியில் சென்று பார்த்த பொழுது ஒரு பெரிய நாய் ( என்ன ரகம் என்று தெரியவில்லை ) கட்டி இருந்த கயிறாய் அறுந்தது கொண்டு வந்து, ஆட்டின் குரல்வலையை கடித்துகொண்டிருந்தது.
நான் விரைந்து சென்று அந்த நாயின் சங்கிலியை பிடித்து இழுத்து வந்து ஒரு இடத்தில் கட்டினேன். பின்னர் ஆட்டின் கழுத்தை பார்த்த பொழுது ரத்தம் வடிந்துகொண்டிருன்தது. பின்னர் ஆட்டின் கழுத்தை தண்ணீர் கொண்டு கழுவி விட்டேன். என் பெண் வழக்கம் போல fridge இல் இருந்து முட்டைகோஸ், காரட் கொண்டு வந்து தந்தாள். அருகில் இருந்த சில புற்களையும் பறித்து வந்து தந்தாள்.

அடுத்த வீட்டு குடும்பம் திரும்பி வந்ததும் நடந்ததை சொன்னேன். பிறகு அவர்கள் ஆட்டை அழைத்து சென்று ஊசி போட்டனர். சில நாட்களில் அந்த ஆட்டை விற்றுவிட்டனர்.

இந்த நிலையில் தான் அவர்கள் வர்த்த போமேரனியன் குட்டி போட்டு, பிறகு புத்தாண்டை எனக்கு நல்லபடியாக தொடங்கிவைத்தது.

புத்தாண்டிற்கு பிறகு மீண்டும் மூன்று நாய்களை அவன் வாங்கி வந்தான். (பொமேரேனியன் முதற்கொண்டு பழைய நாய்களில் இரண்டை தவிர மீதம் உள்ளவற்றை விற்றுவிட்டான் ? குட்டி போட்ட லப்ரடோரையும் விற்று விட்டான்)     

ஒரு மாதத்திற்கு முன் புதிதாக வாங்கிய நாய் ( Labrador ) ஒன்று இரவு நேரங்களில் ஊளை இட தொடங்கியது. எங்கள் தூக்கத்தை கெடுத்தது. தொல்லை தாங்காத என் மாமனார் புகார் செய்தார். அப்படியா நாங்கள் நன்றாக தூங்கிவிடுவதால் எங்களுக்கு தெரியவில்லை என்று பதில் வந்தது.

ஒரு நாள் ஊளை இட்டுகொண்டிருந்த Labrador குப்பை எடுக்க வந்தவரை பாய்ந்து கடிக்க சென்றதாகவும்,  நல்ல வேலை அருகில் இருந்த இளைஞன் அதனை கட்டுபடுத்தி கட்டிபோட்டதாகவும் என் மாமனார் கூறினார்.
மீண்டும் இரண்டு நாள் சென்று என் மாமனார், அந்த லப்ரடோர் அந்த இளைங்கனையே பாய்ந்து கடிக்க சென்றதாகவும், சந்தேகப்பட்ட இளைகன் கால்நடை மருத்துவரிடம் கேட்டதற்கு சில மருந்துகளை  கொடுத்து, இன்னும் இரண்டு தினங்கள் பார்க்கலாம் என்று கூறியதாகவும் சொன்னார். அனால் அன்று மாலையே மீண்டும் அந்த இளைங்கனை லப்ரடோர் கடிக்க பாய்ந்தவுடன், அவன் நாய் கட்டிருக்கும் சங்கிளியாலேயே அதன் கழுத்தை இருக்கி கொன்று விட்டதாக கூறினார். பின்னர் அந்த வீட்டில் இருந்த அனைவரும் Anti Rabis போட்டுகொண்டதாகவும் கூறினார்.

ஆம். அந்த நாய்க்கு ராபிஸ் வந்துவிட்டது. வாங்கி வரும் பொழுதே இருந்திருக்கலாம் என்பது அவன் எண்ணம். மேலும் சில நாட்களில் இன்னும் இரண்டு நாய்களின் வாயில் எச்சில் வழக்கத்திற்கு மாறாக அதிகம் வருவதை கண்ட அந்த இளைஞன், அவற்றையும் அடித்து கொன்று புதைக்க செல்லும் பொழுது பார்த்தேன்.

அனால் அவன் நாய் வளர்ப்பதை நிறுத்தவில்லை. இப்பொழுது மூன்று நாய்கள் பக்கத்துக்கு வீட்டில் இருக்கின்றன. என் செருப்பும் கடந்த இரு வாரங்களில் இரு முறை ரோட்டில் கண்டு எடுத்தேன். 

ஆடு வளர்த்த அவன் தாய் ஆறு கோழி குஞ்சிகளையும், ஒரு முட்டை இடும் பருவத்தில் உள்ள நாட்டுகோழி ஒன்றையும் சேவல் ஒன்றையும் இப்பொழுது வளர்க்க ஆரம்பித்துள்ளார்.

ஐந்தறிவு ஜீவனங்களின் மேல் அவர்களுக்கு உள்ள பாசம் புரிகிறது. அனால் பக்கத்துக்கு வீட்டில் உள்ள இந்த பாவப்பட்ட ஆறறிவு ஜீவன்களையும் அவர்கள் நினைத்து பார்த்தால் மகிழ்ச்சியடைவேன்.

பின்குறிப்பு: புத்தாண்டு அன்று என்னை நாய் கடித்ததை ஊரில் இருந்து வந்த என் மனைவி, குழந்தை மற்றும் மாமனாரிடம் கூறிவிட்டேன். ஒரு வாரம் முன்பு தான் என் மாமனார் " தம்பி , ஒன்னு கேட்டா தப்பா நினைக்கமாட்டிங்களே ? என்றார் 

கேளுங்க அப்படின்னு சொன்னேன் 

நாங்கள் ஊரில் இல்லாத பொழுது தண்ணி அடிப்பீர்களா என்றார் 

என் அப்படி கேட்கறீர்கள்? என்றேன் 

இல்லை. நீங்கள் குடித்து விட்டு தள்ளாடி கொண்டு வந்ததினால் தான் நாய் கடித்துவிட்டதாக பாகத்து வீட்டு பையன் சொன்னான் அதான் கேட்டேன் என்றார்.

அடப்பாவிகளா! புத்தண்டுதினதன்று அதிகாலையிலேயே தண்ணி போடுபவனா நம் மருமகன் என்று என் மாமனார் நினைதிருபார். அல்லது இரவு அடித்த மப்பு தெளியாமல் நடந்து சென்று இருப்பான் என்று நினைத்திருப்பார். பாண்டிசேரி காரனை மருமகனாக தேர்ந்துஎடுத்தது தப்பு என்று வருந்தி இருப்பார்.

 நான் தண்ணி அடிக்கவில்லை என்பது தான் உண்மை . வருடத்தில் ஒரு மூன்று முதல் நான்கு முறை, அதுவும் நல்ல சந்தர்பம் அமைந்தால் மட்டுமே அடிப்பேன் என்று நான் எப்படி அவரிடம் கூறுவது ?

தண்ணி எதுவும் அடிக்கவில்லை என்று மட்டும் கூறினேன் .




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக