பிரபலமான இடுகைகள்

சனி, 5 மார்ச், 2011

நரகத்தில் பில் கேட்ஸ்

பில் கேட்ஸ் 2050 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். கடவுள் அவரை வரவேற்று " நீங்கள் கணினியை கண்டுபிடித்து விட்டுக்கு வீடு கணினி மயம் ஆகிவிட்டது. ஆனால் உலகமே இயந்திர மயம் ஆன காரணத்தால் ஒரு வித வெறுப்பு நிலையில் மனிதர்கள் வாழ்கிறார்கள். எனவே எனக்கு உங்களை நரகத்துக்கு அனுப்பலாமா அல்லது சொர்கத்துக்கு அனுப்பலாமா என முடிவுசெய்ய முடியவில்லை. அதனால் முடிவை உங்களிடமே விடுகிறேன். நீங்கள் சொர்கம் நரகம் இரண்டுக்கும் சென்று பார்த்து எது பிடிக்கிறதோ அங்கே நீங்கள் இருக்கலாம் என்று கடவுள் கூறினார்.

பில் கேட்ஸ் கு மகிழ்ச்சி தாங்க  முடியவில்லை. சரி என்று ஏற்றுகொண்ட அவர் முதலில் நரகத்தை பார்க்க விரும்பினார். கடவுளும் அவரை நரகத்திற்கு அழைத்து சென்றார். நரகத்தில் அவர் கண்ட காட்சி வியப்பில் ஆழ்த்தியது. 
அங்கு அழகான கடற்கரையில் இளம் பெண்கள் குளித்து கொண்டும் விளையாடிக்கொண்டும் இருந்தனர். இயற்கை எழில் கொஞ்சி விளையாடியது. அருமையான தட்பவெட்ப நிலையும் இருந்தது. சரி சொர்கத்தையும் பாப்போம் என்று அங்கு சென்றார். அங்கு வெண் மேக கூட்டத்தில் தேவதைகள் அமர்ந்து இனிய மெல்லிசையை இயற்றி கொண்டிருந்தனர். 

பில் கேட்ஸ் கு சொர்கத்தை விட நரகம் பிடித்திருந்தது. எனவே நரகத்திற்கு அனுப்புங்கள் என்று கடவுளிடம் கேட்டார். கடவுளும் அவர் விருப்பபடி செய்தார்.

இரு வாரம் கழித்து கடவுள் நரகத்திற்கு சென்ற பொழுது பில் கேட்ஸ் எண்ணை கொப்பரையில் தீயில் வாடி கொண்டிருந்ததை கண்டார். கடவுளை பார்த்ததும் கோபம் கொண்ட பில் கேட்ஸ் நீங்கள் என்னை நீங்கள் ஏமாற்றி விட்டர்கள் என்று புலம்பினார். நான் பார்த்த காட்சி வேறு. நிஜத்தில் வேறாக இருக்கிறது என்றார். அதற்கு கடவுள் நீங்கள் பார்த்தது "SCREEN SAVER " என்று கூறினார்.

நெட்டில் சுட்டது          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக