பிரபலமான இடுகைகள்

வியாழன், 31 மார்ச், 2011

பாலின் சில்லறை விற்பனை விலை Rs50 / என்று மாறினால் ஆச்சிரிய படவேண்டாம்



இந்திய நாட்டின் பால் உற்பத்தி 1951 யில்  17 மில்லியன்  டன் ஆக இருந்து, 2009 தில் 110 மில்லியன் டன் ஆக உயர்ந்துள்ளது (2010 -11 இல் 115 மில்லியன் டன் ). இந்திய பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் சந்தை மதிப்பு ஆண்டுக்கு 7 %  வளர்ச்சியடைந்து வருகிறது.
சுமார் 7.5 கோடி இந்திய குடும்பங்கள் பால் உற்பத்தியின் மூலம் கிடைக்கும் வருமானத்தை நம்பி இருக்கின்றார்கள். ஆனால் இதில் 1.1 கோடி நபர்கள் தான் பால் கூட்டுறவு சங்கங்களில் இணைந்துள்ளனர். 
Operation Flood மற்றும் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் விற்பனையை கட்டுபடுத்தும் ஆணையின் விதிகளில் சில கட்டுபாடுகளை தளர்த்திய காரணத்தால் (MMPO _2002 ) பால் உற்பத்தி பன்மடங்கு பெருகியது. பல தனியார் நிறுவனங்கள் பால் விற்பனையில் இறங்கின. ஆனால் எதனால் பால் உற்பத்தி செய்யும் சிறு குறு விவசாயிகள் பயனடையவில்லை. தனியார் முதலாளிகள் தான் பயன் பெற்றனர். 

விதிகளை தளர்த்தினாலும் பல்வேறு காரணங்களால் சிறு மற்றும் குறு விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பாலை ஒழுங்குமுறை படுத்தாத விற்பனை சந்தையின் மூலம் தான் விற்பனை செய்யா முடிகிறது. அவர்களிடம் இருந்து பால் பெரும் இடைத்தரகர்கள் தான் பெரிதும் பயன் அடைகின்றனர். தங்கள் குடும்ப சுழல் காரணமாகவும், சரியான படிப்பறிவு இல்லாத காரணத்தாலும் தங்களுக்கு மிகவும் தெரிந்த உள்ளூர்காரரான இடைதரகரிடம் தங்கள் அவசர தேவைக்கு முன்பணம் வாங்கிவிட்டு பின் அவர்களுக்கே பாலை ஊற்றும் நிலைக்கு தள்ளபடுகின்றனர்.

தற்பொழுது பால் கூட்டுறவு சங்கங்களும், தனியார் பால் நிறுவனங்களும் நகர்புற பால் தேவையை அடிப்படியாக கொண்டே செயல்படுகின்றன. அதனால் பால் உற்பத்தியும் கிராமபுறத்தில் இருந்து நகரை சுற்றயுள்ள புற நகர் பகுதிக்கு இடம் பெயர்ந்து வருகிறது.     

பாலின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், சிறு குறு விவசாயிகளுக்கு பால் மாடு வளர்த்தல் என்பது லாபகரமாக இல்லை. பால் கொள்முதல் விலை உயர்தாலும் அதைவிட பால் மாடு பராமரிப்பு செலவு அதிகமாவதே இதற்கு காரணம். கண்டிப்பாக ஒன்று முதல் மூன்று மாடு வரை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு பால் உற்பத்தியால் லாபம் இல்லை என்பதே உண்மை.

இதற்கு கீழ்கண்ட காரணங்களை சொல்லலாம் 

  1. பால் மாடுகளின் உற்பத்தி திறன் குறைவாகவே உள்ளது. ஜெர்சி போன்ற கலப்பின பசுக்களின் முதலாம் மற்றும் இரண்டாம் தலைமுறை ஈத்துகள், நன்கு பராமரித்தல் ஓரளவு நன்றாக பால் சுரக்கும். ஆனால் நம் நாட்டில் கால்நடை பராமரிப்பு துறையின் செயல்பாடு சரியாக இல்லை. தரமான மாடுகள் தான் நல்ல பயனை தரும். இது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவும், இதற்கான இனபெருக்க தேவையை சரிவர பூர்த்தி செய்யவும் நம் அரசாங்கம் தவறி வருகிறது.
  2. கால்நடை ஆராய்ச்சியிலும் மக்களுக்கு( சிறு குறு விவசாயிகளுக்கு ) பெரிதும் பயன் தரும், விஞ்ஞான செயல்முறைகள் கண்டுபிடிக்க படவில்லை.பால் கறவை இயந்திரம் பெரிய பண்ணைகளில் தான் பயன்படுத்த படுகின்றன. பால் கொள்முதல் நிலையங்களில் இதன் பயன்பாட்டை செய்வதில்லை. பால் பதனிடுதல், பாலின் தரத்தை அளவிடும் கருவிகள், பால் பண்ணையின் வளர்ச்சிக்கு உதவும் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றிற்கு தான் முக்கியத்தும் தரபடுகிறது. ஜெர்சி கலப்பினத்தை தவிர்த்து, நம் நாடு சீதோசன நிலைக்கு உகந்த கலப்பின பசுக்கள் நீண்டகாலமாக உருவாக்கப்படவில்லை என்பது மிகவும் வருத்தத்தை தரும் விஷயம்.
  3. கிராமபுறத்தில் மேய்ச்சல் நிலங்கள் குறைந்துகொண்டே வருவதும் கவலை தரும் விஷயம். இதனால் பால் மாடு வளர்ப்போர் புண்ணாக்கு,   மாட்டு தீவனம் போன்றவற்றை கடைகளில் வாங்கி பயன்படுத்துவது அதிகமாகி உள்ளது. இதனால் பால் மாட்டை வளர்க்கும் செலவு கூடியுள்ளது.      
  4. கடந்த இரண்டு ஆண்டுகளில் மாட்டு தீவன விலை அடிக்கடி உயர்ந்து ( மாதம் மாதம் கூட விலை உயர்ந்தது) 20௦ % திற்கு அதிகமாக விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
  5. கால்நடைகளை காப்பிடு செய்யும் பழக்கம் குறைவாகவே உள்ளது. இதனால் கால்நடை இறந்தால் ஏழை எளிய மக்களுக்கு பெரிய பாதிப்பு உண்டாகும்.
  6. பால் கொள்முதல் விலை கண்டிப்பாக கட்டுபடியாகாது. லிட்டருக்கு ருபாய் இருபது பால் உற்பத்தியாளர்களுக்கு கிடைத்தால் தான் சிறு குறு விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும் 
  7. தீவன விலை ஏற்றத்தால், மாடுகளுக்கு குறைந்த தீவனம் கொடுக்கபடுகிறது. சரியான தீவனம் கொடுக்காத காரணத்தாலும் பால் உற்பத்தி குறைந்து அவர்களின் வருமானத்தை பாதிக்கிறது.   
தற்பொழுது 4.3 % கொழுப்பு மற்றும் 8.2 % SNF உள்ள பசும் பாலுக்கு கொள்முதல் விலையாக ருபாய் 15 .54 / லிட்டர் மற்றும் எருமை மாட்டு பாலுக்கு ருபாய் 23 /     ( Fat 7 % SNF 8.8 % ) என்று  ஆவின் நிறுவனம் நிர்ணயம் செய்து உள்ளது. இதற்கு முன் செப்டம்பர் மாதம் 2009 தில் பால் கொள்முதல் விலையில் மாற்றம் செய்யப்பட்டது.  

கடந்த ஐந்து ஆண்டுகளில் பால் கொள்முதல் விலை Rs5 .50 மட்டுமே அதிகரித்துள்ளது. ஆனால் பல்வேறு காரணங்களால் பயனீட்டாளர்களுக்கு சில்லறை விற்பனை விலை Rs11 / வரை அதிகரித்துள்ளது. தற்பொழுது நிர்ணயம் செய்யப்பட்டுள்ள Rs15 .54 என்ற விலை பால் கொள்முதல் நிலையத்திற்கு கொடுக்கும் விலையாகும். அவர்கள் கமிசன் போக Rs15 / தான்  பால் உற்பத்தியாளர்களுக்கு கிடைக்கும்.    

சில தனியார் நிறுவனங்கள் இதை விட அதிக விலைக்கு பால் கொள்முதல் செய்தாலும், பாலின் கொழுப்பு சத்து மற்றும் SNF சதவீதத்தை குறைத்து காட்டி விவசாயிகளை ஏமாற்றுவதும் நடக்கிறது.

இடைதரகர்களிடம் பால் ஊற்றும் பொழுது அவர்களிடம் வாங்கிய முன் பணத்திற்கு அதிக வட்டியை பிடித்து கொண்டு பணம் கொடுப்பதால், வறுமையில் வாடும் நிலை ஏற்படுகிறது.

நான் ஜல்லிக்கட்டிற்கு பெயர் போன அலங்காநல்லூர் ஒன்றியத்தில் கண்கூடாக கண்ட காட்சி இது. மேலே குறிப்பிட்ட காரணங்களினால் பால் மாடுகளின் எண்ணிக்கை கடந்த நான்கு ஆண்டுகளில் வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் பால் உற்பத்தி குறைந்துள்ளது. ஆனால் தேவை அதிகரித்துள்ளது. இதனால் பால் கொள்முதல் செய்வதற்கு கூட்டுறவு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இடையே பயங்கர போட்டி நிலவுகிறது. ஆச்சிரியமாக பால் கொள்முதல் விலை ஏற்றம் மட்டும் நடக்கவில்லை. பால் பதபடுத்தும் நிறுவனங்களும்,  உற்பத்தி இடத்திலிருந்து பதபடுத்தும் இடத்துக்கு பாலை எடுத்து செல்லும் போக்குவரத்து செலவு வெகுவாக அதிகரித்துளதால் பதிப்பு அடைந்துள்ளன. தங்கள் விற்பனை பாதிக்க கூடாது என்பதற்காக விற்பனை விலையையும் மற்ற நிறுவனத்திற்கு நிகராக வைக்கும் நிலைக்கும் எந்த நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன      


பால் உற்பத்தியாளர்களின் போராட்டத்தினால் சமிபத்தில் பால் கொள்முதல் விலையை தமிழக அரசு உயர்த்திள்ளது. ஆனால் ஆவினின் சில்லறை  விற்பனை விலையை உயர்த்தமாட்டோம் என்று அரசு அறிவித்துள்ளது. இதனால் ஆவினின் லாபம் குறையும். தேர்தல் முடிந்த பிறகு கண்டிப்பாக பால் சில்லறை விற்பனை விலை உயரும்    
  
பால் விலை மேலும் மேலும் கூடியவிரைவில் அதிகரிக்கும். இந்த விலை உயர்வு தவிர்க்கமுடியாதது. நாம் நாட்டின் பெரிய கூட்டுறவு நிறுவனமான அமுல், கடந்த Febraury 17 ஆம் தேதி முதல் தன் சில்லறை விற்பனை விலையை மகாராஷ்டிரா மாநிலத்தில் உயர்த்திள்ளது. மற்ற நிறுவனங்களும் Rs3 / வரை தங்கள் பால் சில்லறை விற்பனை விலையை. மும்பையில் அதிகம் விற்பனை ஆகும் பால் அமுல் பால். அமுல் தன் பால் தேவையில் 40௦ % தத்தை மகாராஷ்டிரா மாநிலத்திலும் மீதம் தேவைப்படும் பாலை குஜராத்திலிருந்தும் கொள்முதல் செய்கிறது. மகாராஷ்டிரா மாநில அரசு பால் கொள்முதல் விலையை Rs2 /- Rs2 .50௦/லிட்டர் வரை கடந்த 16 .02 .2011 முதல் உயர்த்தியதே இதற்க்கு காரணம். அமுல் தன் சில்லறை பாலை தரத்தை பொறுத்து Rs30 முதல் Rs38 / வரை தற்பொழுது விற்பனை செய்து கொண்டு வருகிறது                  

கர்நாடக அரசும் பால் கொள்முதல் விலையை Rs2 / உயர்திள்ளது 


அமுல் பால் உற்பத்தியாளர்களுக்கு செலவு அதிகரித்த காரணத்தினால், கொள்முதல் விலை உயர்த்தபட்ட்து என்றும், விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்றும் அறிவித்துள்ளது.

தமிழக பால் உற்பத்தியாளர்களை பொறுத்த வரை இந்த பால் கொள்முதல் விலையும் கட்டுபடியாகாது 

நாம் நாட்டு பொருளாதார கொள்கைகள் வெளிநாட்டு தொழில் நிறுவனங்களுக்கும் சேவை நிறுவனங்களுக்கும் சாதகமாக உள்ளது. இதனால் விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில் செய்பவர்களும் பாதிக்கபட்டுள்ளனர்  
      
ஆனால் இதன் பாதிப்புகள் பொது மக்களை சென்றடையும் நாள் வெகு தொலைவில் இல்லை. இப்பொழுதே அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை பன் மடங்காக எகிறி உள்ளது. பாலின் சில்லறை விற்பனை விலை Rs50 /  ஆகா இரு ஆண்டுகளில் மாறினால் ஆச்சிரிய படவேண்டாம்   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக