பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 22 மார்ச், 2011

நம் நாட்டின் பொருளாதார கொள்கையை நிர்ணயம் செய்பவர்கள் யார் ?


நம் நாட்டின் பொருளாதார கொள்கையை நிர்ணயம் செய்வதில் அமெரிக்க உள்ளிட்ட வளர்ந்த நாடுகளின் தலையீடு உள்ளது. இன்னும் சொல்ல போனால் நம் நாட்டு  பொருளாதார கொள்கையை முடிவு செய்வதே அவர்கள் தான் என்றும் கூறலாம். 

1990 களில் IMF ( International Monitory Fund ) கடன் கேட்டு பொருளாதார தேக்கநிலை காரணமாக இந்தியா உலகநாடுகளிடம் கையேந்த வேண்டிய நிலை வந்தது.
உலக வங்கியும் IMF உம் அதற்கு சில நிபந்தனைகளை விதித்தது. Structural adjustment என்று ஒரு நாட்டின் பொருளாதார கட்டமைப்பில் சில மாறுதல்களை வற்புறுத்துவதே அது. IMF கடன் பெரும் எந்த நாடும் இந்த விதிகளை பின்பற்றவேண்டும். கடன் பெரும் ஒப்பந்தத்திலேயே இது குறிப்பிடப்படும். நம் நாட்டின் புதிய பொருளாதரா கொள்கையை அப்போதைய மத்திய நிதி அமைச்சராக இருந்த மன்மோகன் சிங் , புதிய பொருளாதார கொள்கையை அறிவித்தது இந்த அடிப்படையில் தான். IMF கடன் பெற நாடுகள் கீழ்கண்ட பொருளாதார மாற்றத்தை செய்யவேண்டும். 

  • உலகமயமாக்கல் ( liberlaization ) - ஏற்றுமதி இறக்குமதி கட்டுபாடுகளை தளர்த்தல், வெளிநாட்டு நிறுவனங்கள் நம் நாட்டில் கடை பரப்ப அனுமதி அளிதல், நம் நாடு நிறுவங்களும் வெளி நாடுகளில் கிளை திறக்க அனுமதி அளித்தல் போன்றவை.
  • மாநில அரசின் பங்கு (roles )இதில் குறைக்கப்படும்.  
  • பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல், உள்நாட்டு நிறுவனங்களுக்கு சலுகைகளை குறைத்தல் 
  • ருபாய் மதிப்பை குறைதல், வட்டி விகிதத்தை ஏற்றுதல், தொழிலாளர் நல கொள்கைகளில் சமரசங்கள், மானியங்களை படிபடியாக குறைத்து முற்றிலுமாக மானியம் இல்லாத நிலையை உருவாகுதல் போன்றவை     ( குறிப்பாக உணவிற்கான மானியம் )   
  • வெளிநாட்டு முதலீடாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கி அவர்களை நம் நாட்டில் தொழில் தொடங்க ஈர்த்தல். 

  மன்மோகன் சிங் கின் பொருளாதார கொள்கை என்று எது விளம்பரம் செய்ய பட்டது. நம் நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார நிலையும், தேக்க நிலையை கடந்து வெகுவாக முன்னேரே ஆரம்பித்த காரணத்தினால்,இதன் பின்னால் உள்ள சூழ்ச்சியை மக்கள் உணரவில்லை. மன் மோகன் சிங்க் பைக் வாங்கினால் எங்கள் பைக்கை தான் வாங்குவார் என்று கூட விளம்பரம் செய்யப்பட்டது. நம் நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி அனைவராலும் பாரட்டப்பட்டது. இதை எதிர்த்து குரல் கொடுப்போர் முட்டாளாக சித்தரிகபட்டனர். பண பலம் அதிகாரம் கொண்டு இந்த பொருளாதார வளர்ச்சியின் இன்னோரு முகம் மறைக்கப்பட்டு வந்தது 

வெளிநாட்டில் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் முதலாளிகள், நம் நாட்டு மக்களின் உழைப்பினாலும், நம் நாட்டு வளங்களை பயன்படுத்தியும் தங்கள் கல்லாவை நிரப்பி  கொண்டு இருக்கிறார்கள்.

முன்பு சிறு சிறு தயாரிப்பாளர்கள் " கலர் " தயாரித்து - ஆரஞ்சு, மாங்கோ போன்ற சுவைகளில் கிராமங்களில் விற்று கொண்டிருந்ததை பார்க்கலாம். ஆனால்  Pepsi யும் Coke கும் வந்த பிறகு இவர்கள் இருந்த இடம் தெரியாமல் போனார்கள். இது அனைவருக்கும் தெரிந்த ஒரு உதாரணம். அனைத்து தொழில்களிலும் பலர் ஒழிந்து சிலர் மட்டுமே கொழிக்கும் நிலை உருவானது . நமது நாட்டில் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை உயர்ந்தது. ஆனால் ஏழைக்கும் பணக்காரனுக்கும் உள்ள வித்தியாசம் அதிகமாகிக்கொண்டே போகிறது. 

சரி IMF விதித்து நம் நாடு செயல்படுத்திய பொருளாதார மாற்றங்களால் என்ன என்ன விளைவுகள் உண்மையில் ஏற்படுகின்றன /ஏற்படும் ?                    

  • தான் வாங்கிய கடனை முறையாக திருப்பி செலுத்தாத கடன் வாங்கிய நாடுகள் அதிக அளவில் ஏற்றுமதி செய்து பணம் ஈட்டவேண்டும் 
  • இந்தியாவை போல வேறு சில கடன் வாங்கிய நாடுகளும் உலக சந்தையில் தங்கள் பொருட்களை விற்க இவ்வாறு நிர்பந்தபடுத்த பட்டதாலும்,  பெரும்பாலும் ஒரே மாதிரியான பயிர்களும், விவசாய பொருட்களும் விற்பனைக்கு வந்ததாலும் ஒரு பெரிய விலை உத்தமே தொடங்கியது       
  • அதனால் வளரும் நாட்டுகளில் இருந்து வரும் பொருட்களின் விலை உலக சந்தையில் வீழ்ச்சியடையும். இதனால் மேற்கத்திய நாடுகளுக்கு பலன் அதிகம்
  • இதனால் அரசாங்கம் ஏற்றுமதியை அதிகரித்து தங்கள் நாடு ரூபாயின் மதிப்பை  நிலையாக வைக்க பாடுபட வேண்டிருக்கும். எதன் மூலம் அந்நிய செலவாணியை ஈட்டி கடனை அடைக்க வேண்டிய சுழல்லுகு தள்ள படும்.      
  • மேலும் கடன் பெற்ற நாடுகள்
                         - செலவை குறைக்க வேண்டும் .
                         - நிதி கட்டுபாடுகளை நீக்கவோ குறைகாவோ வேண்டும் 
                         - பொருட்களின் சுய பயன்பாட்டை குறைத்துக்கொள்ள           வேண்டிருக்கும்  
  • இதனால் நீண்ட கால விளைவுகளாக - மனித உழைப்பின் மதிப்பு குறையும், மூலதன நிதி தடுமாறும், ஏழை பணக்காரன் ஏற்றத்தாழ்வு மிக அதிகமாகி சமூக பிரச்சனைகளையும், உலகம் முழுக்க கலகங்களையும் ஏற்படுத்தும்        

    • நிலைமை மிகவும் மோசமானால் கடன் வாங்கிய நாட்டில் முதலீடு செய்த வெளிநாட்டு நிறுவங்களும் சுரண்டியவரை போதும் என்று தங்கள் முதலீட்டை திரும்ப எடுத்துகொள்வர் 
      • மேலும் 1997 /98 /99 ஆசிய/உலக நிதி பேரிடரின் பொழுது ஏற்பட்ட பொருளாதார விழ்ச்சி போன்ற நிகழ்வுகள் நடக்கும் ( மெக்ஸிகோ, பிரேசில் போன்ற நாடுகளில் நடந்ததை போல ). எத்தகைய நிகழ்வின் பொது உண்மையான காரணம் மறைக்கப்பட்டு வெகுஜன தொலைதொடர்பு ஊடகங்களும், பொருளாதார நிபுணர்களும் அப்போதுள்ள ஆட்சியை குறை கூறியோ அல்லது வேறு சிறிய பொருளாதார கொள்கைகளின் மீது குற்றம் சும்மத்தியோ செய்திவெளியிடுவர்        
    •  IMF கடனை கொடுத்தவர்கள் ரூபாய்க்கு நிகரான தங்கள் பணத்தின் மதிப்பை கட்டுபாடுக்குள் வைத்துகொண்டு , ஏழை நாடுகள் என்னும் ஏழை நாடாகும் நிலைமையை ஏற்படுத்துவர்
    எனவே நம் நாட்டின் பொருளாதார கொள்கையை முடிவு செய்யும் உரிமையை 1991 இல் IMF கடன் வாங்கிய பொழுதே இழந்துவிட்டோம். ஏழை மக்களை முன்னேற்றி ஏற்ற தாழ்வில்லாத சமுதாயத்தை ஏற்படுத்துகிறோம் என்று நம் அரசில்யல்வாதிகள் சொல்வது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்.

    எப்பொழுது ஏழை மக்களை முன்னேற்ற போடும் திட்டங்களும் அவர்களையும் கடனாளியாகும் திட்டங்களாகவே இருக்கின்றன. வங்கிகளின் மூலம் சுயஉதவி குழுக்கள் பெரும் கடனும், குறு நிதி நிருவனனால் மூலம் பெரும் கடனும் ஏழை மக்களை முன்னேற்றுவதற்கு பதிலாக கடனாளி ஆக்குகின்றது. எளிதில் கடன் கிடைபதால், அதன் பின் விளைவை உணராமல் தங்கள் தேவைகளை அதிகபடுத்திகொண்டு, பின்னர் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தில் பெரும் பகுதியை கடன் கட்டியே சாகின்றனர். சேமிக்கும் பண்பை அடிபடியாகவும், கடன் வாங்குவதை கேவலமாகவும் நினைத்த சமுதாயம் என்று எவ்வளவு கடன் வாங்கவும் தயங்குவதில்லை.

    நம் நாட்டு பொருளாதார கொள்கைகளில் வெளிநாடுகளின் தலையீடு  இருக்கிறது என்பதற்கான சமிபத்திய ஆதாரம் விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்ட தகவல் ஒன்றிலிருந்து தெளிவாக தெரிகிறது.

    ப.சிதம்பரத்திற்கு பதிலாக பிரணாப் முகர்கியை காங்கிரஸ் அரசு தேர்ந்து எடுத்தவுடன் கீழ் கண்ட கேள்விகளை ஹில்லரி கிளிண்டன் எழுப்பியுள்ளார் 
    1. மன்மோகன் சிங்க் இன் பொருளாதார சீர்திருத்தங்களில் பிரணாப்   முகர்ஜிக்கு உடன்பாடு உண்டா ? எது பற்றிய அவரது தனிப்பட்ட கருத்துகள் என்ன ?
    2. எவ்வளவு வேகமாக இந்த சீர்த்திருத்தங்களை பிரணாப் முகர்ஜி எடுத்து செல்வார் ?   
    3. பிரணாப் முகர்ஜி கு இதனை செயல்படுத்தும் திறமைகள் உண்டா ?
    4. பிரணாப் முகர்ஜீக்கு இந்தியா - அமெரிக்க பொருளாதார உறவை பற்றி என்ன கருத்து இருக்கிறது ? இந்த உறவு பலன் தரும் என்று அவர் நம்புகிறாரா?
    5. எந்த எந்த விசயங்களில் அமெரிக்காவுடன் ஒத்துழைக்க அவர் ஆர்வமாக உள்ளார் ?
    6. அமெரிக்க -இந்தியா இடையிலான பொருளாதார உறவையும் அமெரிக்க -சீனா இடையிலான பொருளாதார உறவையும் அவர் எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறார் ? 
    7. மொண்டேக் சிங்க் அஹ்லுவாலியாக்கு(Montek Singh Ahluwalia) பதில்   நிதி அமைச்சர் பொறுப்புக்கு பிரணாப் முகர்ஜி எப்படி தேர்வு செய்யப்பட்டார் ? மொண்டேக் சிங்க் அஹ்லுவாலியா மற்றும் பிரணாப் முகர்ஜி இருவருக்கும் ஒத்து போகுமா ?   
    8. எந்த எந்த தொழில் நிறுவனங்களுடன் பிரணாப் முகர்ஜீக்கு நெருங்கிய தொடர்பு உண்டு ? தன பொருளாதார கொள்கைகள் மூலம் யாருக்கு அவர் உதவி செய்வார் ? வருகின்ற நிதி அறிக்கையில் எது எதற்கு பிரணாப் முகர்ஜி முக்கியத்துவம் தருவார் ?     
    9. பிரணாப் முகர்ஜி யும் பிற தலைவர்களும் உலக  பொருளாதார தேக்க நிலையை சரி செய்ய எத்தகைய பொருளாதார கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என்று நினைகின்றனர் ?
    10. ஒரு நிதி அமைச்சராக பிரணாப் முகர்ஜி எப்படி செயல் பட வேண்டும் என்று பிரதமர் நினைக்கிறார் ?
    11. முகர்ஜீகும் RBI கவர்னர் D.V.சுப்பாராவுக்கும் எத்தகைய உறவு இருக்கிறது ? சிதம்பரம் நிதி அமைச்சர் பொருபில்லிருந்து விலக்கப்பட்டதை சுப்பாராவ் எப்படி எடுத்துக்கொண்டார் ?
    12. இதனால் நிதி அமைச்சகத்துக்கும் RBI கும் உள்ள உறவு எப்படி இருக்கும் ?    
    அப்பாடி !  பிரணாப் முகர்ஜியை நிதி அமைச்சர் ஆக்குவதற்கு முன்னாள் காங்கிரஸ் மற்றும் மன் மோகன் சிங்க் கூட எவ்வளவு யோசித்திருக்க மாட்டார்கள்

    நம் நாட்டின் பொருளாதார கொள்கையை நிர்ணயம் செய்பவர்கள் யார் என்று புரிந்திருக்குமே ? நம் நாடு சுதந்திரமாக செயல்படமுடியாமல், ஒப்பந்தம் என்ற பெயரில் அந்நிய சக்திகளால் ஆடுவிக்கபடுகிறதா இல்லையா என்பதை நீங்களே புரிந்துகொள்ளுங்கள்

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக