பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 18 மார்ச், 2011

யானைக்கும் எறும்புக்கும் காதல்

ஒரு யானைக்கு விபத்து நடந்து மருத்துவமனையில் அட்மிட் ஆனது. செய்தி கேட்ட அதன் நண்பியான எறும்பு பூங்கொத்துடன் மருத்துவமனைக்கு வந்து பார்த்தது. கால் எலும்பு யானைக்கு முறிந்துவிட்டது என்பதை கேள்விப்பட்ட எறும்பு மிகவும் கவலைப்பட்டது. தினமும் மருத்துவமனைக்கு வந்து யானைக்கு ஆறுதல் கூறியது. எதனால் அந்த நட்பு காதலாக மாறியது.
யானையும் குணமடைந்தது. பிறகு யானையும் எறும்பும் சேர்ந்து பார்க், கடற்கரை, சினிமா, ஹோட்டல் என்று ஜாலியாக சுற்றி திரிந்தனர். 
யானையும் எறும்பும் இவ்வாறு சுற்றும் பொழுது அதனை எறும்பின் தாய் பார்த்து விட்டு மகளை கண்டித்தார். 
எவ்வளவு சொல்லியும் இருவரும் சேர்ந்து சுற்றுவதை நிறுத்தவில்லை. எறும்பின் தாய் மீண்டும் தன மகள் எறும்பை அழைத்து " அவன் என்ன ஜாதி நாம் என்ன ஜாதி. இருவருக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது. எனவே நீ யானையை மறந்துவிடவேண்டும். நீ சொல்லவதை கேட்கவில்லை என்றால் நானும் உன் தந்தையும் தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழி இல்லை. நம் குடும்ப மானத்தை தான் நாங்கள் பெரிதாக நினைகிறோம் என்றது.

எறும்பும் என்னை மன்னித்து விடுங்கள் அம்மா! எனக்கு யானையை திருமணம்   செய்து தரவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறியது.
எனக்கு வேறு வழி இல்லை அம்மா. ஒரு தப்பு நடந்துடுச்சி என்றது எறும்பு

என்ன தப்பு என்றது தாய் எறும்பு

நான் இப்ப மூணு மாசம் முழுகாம இருக்கேன் என்று சொல்லிவிட்டு எறும்பு கேவி கேவி அழுதது




2 கருத்துகள்:

அன்புடன் நான் சொன்னது…

அடக்கடவுளே....

jothi சொன்னது…

பாவ‌ங்க‌ எறும்பு,.. அதைவிட‌ பாவ‌ம் க‌டி ஜோக்கை ப‌டிச்ச‌ நான் (காதுல‌ எறும்பு க‌டிச்சு ர‌த்த‌ம் வ‌ருது). Please remove word verification

கருத்துரையிடுக