பிரபலமான இடுகைகள்

திங்கள், 11 ஏப்ரல், 2011

கருணாநிதி வளர்த்துள்ள விஷ செடி

திருவாரூரில் இருந்து திருட்டு ரயில் ஏறி, இன்று மனைவி, துணைவி, மகன்கள், மகள்கள், தாய்மாமன் மகன்கள், பேரன்கள் பேத்திகள் என்று தன் குடும்பத்தினர் அனைவரையும் அதிகராமையமாக்கி, தமிழ்நாட்டை கொள்ளைஅடித்து வரும் கருணாநிதி மீண்டும் மக்களை ஏமாற்ற தயாராகி உள்ளார்.

முதல் அமைச்சர் ஆக வேண்டும் என்பது என் ஆசை இல்லை. உங்களுக்கு வேலைக்காரனாக இருந்து பணிபுரியவே ஆசை.

முதல் அமைச்சர் என்பதை விட திருவாரூர் M.L.A என்று சொல்லிகொள்வதில் தான் எனக்கு பெருமை என்று கூறிகொள்கிறார்( கூறி கொல்கிறார்)

தமிழ்நாட்டு பிரச்சனைக்காக போராடாதவர், தன் பேரன்களுக்கும் மகனுக்கும் அமைச்சர் பதவி வேண்டி இந்த தள்ளாத வயதிலும் தவம் இருந்தார்.

சீட்டு பிரச்சனையில் மதிய அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்வோம் என்று காங்கிரஸ் ற்கு மிரட்டல் விடுத்தார்.

ரியல் எஸ்டேட் தொழிலில் நிலங்களை மிரட்டி வாங்குவது, சினிமா உலகத்தையே தன் கட்டுபாடுக்குள் வைத்திருப்பது, மதுரையில் அழகிரி ராஜ்ஜியம், கல்லூரிகளையும் மிரட்டி பங்குகளை வாங்குவது போன்ற அதிகார துஷ்பிரயோகங்கள் மூலமும், விஞ்ஞான ஊழல்கள் மூலமும் பல தலைமுறைக்கு சொத்து சேர்த்த பிறகும் என்னும் ஆசை குறையாமல் வளையவரும் முதியவர் கருணாதிக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்தால் என்னாகும் ?

இலவசங்கள் மூலம் நம்மை ஏற்கனவே அடிமை ஆக்கியுள்ளார். தமிழக மக்கள் அனைவரையும் கொத்தடிமை ஆக்க முயற்சிகள் நடக்கும். சட்டம் மற்றும் நீதியை ஏற்கனவே அதிகாரா துஸ்பிரயோகம், ரௌடி ஸம் மற்றும் கட்டபஞ்சாயட்டு மூலம் அவர்கள் கட்டுபாட்டில் தான் வைத்துலார்கள். இது மேலும் அதிகமாகும்.

சாதாரண குடிமக்கள் ஆகிய நாம் வேலைக்கு சென்றோமா, குடும்பத்தை பார்த்தோமா, பிள்ளைகளை நல்ல பள்ளியில் படிக்கவைத்து நம்மை  விட நல்ல நிலைமைக்கு அவர்களை ஆக்குவோமா, கடைசி காலத்தில் சேமித்த பணத்தில் வாழ்கையை ஒட்டுவோமா என்று தான் நினைகிர்றோம். ஊழல்களை பற்றியும், கொலை கொள்ளை பற்றியும் பேசி திரிகிறோம். ஆனால் அதற்கு எதிராக ஒரு சின்ன எதிர்ப்பை கூட காட்டுவதில்லை. இவை எல்லாம் அதிகமாவதற்கு நாம் தான் காரணம் என்பதை உணருவதில்லை.

இலவசங்கள், NREGA மூலம் கூலி வேலையை செய்யாமலேயே ( அல்லது பெயருக்கு வேலை செய்தவர்களுக்கு ) சம்பளம். ஊருக்கு ஊர் மதுபான கடை, ஓட்டுக்கு பணம்  இவைகள் மூலம் மக்களை சோம்பேறிகளாக்கி, அவர்களை சிந்திக்க விடாமல் சிற்றின்பங்களில் திளைக்கவைத்து, ஊழலில் அவர்களையும் பங்குதார்கள் ஆக்கி ஒரு மோசமான சமுதாய சூழலையே ஏற்படுத்தி இருக்கிறார்கள். நேர்மையாக வாழ்பவர்கள், இலவசங்களை எதிர்பார்காதவர்கள் ஏமாளிகளாக சித்தரிக்கப்படும் சுழல் தான் இருக்கிறது. இப்படி தான் வாழ வேண்டும் என்பதற்கு பதில் எப்படி வேண்டும் என்றாலும் வாழலாம் பணம் சம்மதிக்கலாம் என்ற சிலரது சிந்தனையை பாலும் தேனும் ஊட்டி வளர்த்து, பலரது சிந்தனையாக சமூக சிந்தனையாக மாற்றியது தான்     தி .மு.கா வின் சாதனை.

ஒரு கேவலமான பாதையை நோக்கி தான் மற்றும் தன் குடும்பம் சென்றது மட்டும் அல்லாமல் தமிழகத்தையே தவறான பாதையில் திருப்பியது தான்  தான் இவர்களது சாதனை.

மக்களை தவறான பாதையை பின்பற்ற வைப்பது எளிது. குறுக்கு வழியில் பணம், உழைக்காமல் பணம், சோம்பி இருப்பதே சுகம், போதையில் மனம் என்று அடித்தட்டு மக்கள் மாறிவிட்டார்கள். இன்றைய சமுதாயத்தை நினைத்தாலே மனதில் பயம் ஆட்கொள்கிறது. நம் குழந்தைகள் நல்லவர்களாக இருந்தால் நசுக்கி பிழிந்து எறிய பட்டுவிடுவார்களோ என்ற பயம்.

நல்ல மாற்றத்தை யாரால் கொண்டு வர முடியும் ? நூறு இளைங்கர்களை தாருங்கள். இந்த நாட்டையே மாற்றி காட்டுகிறேன் என்று சொன்னார் விவேகானந்தர். அந்த நூறு நல்ல இளைங்கர்களை கண்டுபிடிபதேயே மிக சிரமமான காரியமாக கருணாநிதி மாற்றிவிட்டார். 

நகரத்தில் பிறந்தாலும் கிராமத்தில் வேலை பார்க்க வேண்டும் என்று சிறு வயதிலேயே விரும்பியவன் நான். இன்று கிராமங்களில் மக்களின் மனதை வெகுவாக கெடுத்த புண்ணியம் கருணாநிதிக்கும், அவர் வளர்ந்த சினிமா உலகத்திற்கும், வளர்த்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும், திறந்த மதுபான கடைகளுக்கும் கொடுத்த இலவசங்களுக்கும், போய் சேரும். 

தான் வளர பிறர் குடியை கெடுத்தவர்களை பற்றி கேள்விபட்டிருக்கிறோம். தானும் தன் குடும்பமும் வளர ஒரு சமூதாய சீர்கேட்டையே உருவாக்கியவர் கருணாநிதி. அவர் வளர்த்துள்ள விஷ செடியை அகற்றவே வெகு நாட்கள் ஆகும். இவரை தேர்ந்து எடுத்தால் இந்த விஷ செடிக்கு உரம் போட்டு நீர் பாய்ச்சி வளர்ப்பார்.



3 கருத்துகள்:

rajan சொன்னது…

Ilavasa TV vaanguneengala? veetla amma kitta kettu sollunga sir..

ramalingam சொன்னது…

கருணாநிதி; நூறு நல்லவர்களை என்னிடம் காட்டுங்கள். அவர்களை மாற்றிக் காட்டுகிறேன்.

Sankar Gurusamy சொன்னது…

மிக அருமையான கருத்து.. மக்களை முக்கிய பிரச்சினைகளிலிருந்து சினிமா, கிரிக்கெட், டிவி, குடி, இலவசம் என்று மயக்கி வைத்திருக்கிறார்கள்.

இதற்கு எந்த அரசியல்வாதியும் விதிவிலக்கல்ல.

http://anubhudhi.blogspot.com/

கருத்துரையிடுக