பிரபலமான இடுகைகள்

திங்கள், 18 ஏப்ரல், 2011

மகா கஞ்சன்

ஒரு ஊரில் மகா கஞ்சன் ஒருவன் இருந்தான். அவன் தன் உயிர் உடலை விட்டு பிரியும் தருணத்தில், தன் மனைவியை அழைத்தான். தான் இறந்தபிறகு உடலை புதைக்கும் பொழுது, தான் சம்பாதித்து வைத்த அனைத்து பணத்தையும் ஒரு கவரில் போட்டு தன் உடலுடன் புதைக்க வேண்டும் என்று கூறினான். அவன் மனைவியும் அப்படியே செய்வதாக உறுதி அளித்தாள்.

கஞ்சனும் இறந்தான். அவன் மனைவியும் சொன்னது போலவே அவன் உடலுடன் ஒரு கவரையும் புதைத்தாள். அவளது தோழி உன் கணவன் கேட்டுக்கொண்டது போல் அனைத்து பணத்தையும் நீ புதைக்கவில்லை போல தெரிகிறது. கவர் மிகவும் சிறிதாக இருக்கிறதே என்றாள்.
அதற்கு கஞ்சனின் மனைவி " நான் என்றைக்கும் வாக்கு தவறமாட்டேன். என் கணவரின் பணம் முழுவதையும் வங்கியில் என் பெயரில் உள்ள சேமிப்பு கணக்கில் போட்டு, என் கணவர் பெயருக்கு முழுதொகைக்கும் ஆனா காசோலை எழுதி அவன் உடலுடன் புதைத்துள்ளேன் என்றாள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக