பிரபலமான இடுகைகள்

சனி, 14 மே, 2011

திருமணமும் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவும் -2


சமிபகாலமாக திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகளை பற்றிய செய்திகளும் அதனால் ஏற்படும் குடும்ப வன்முறைகள் மற்றும் கொலைகள் பற்றிய செய்திகள் அதிர்ச்சியை தருவனவாக இருக்கின்றன. ஆனால் எதார்த்தமாக சிந்தித்து பார்க்கும் பொழுது இத்தகைய உறவுகள் சூழ்நிலைகள் காரணமாகவும், நிறைவேறாத எதிர்பார்ப்புகள் காரணமாகவும் ஏற்படுகின்றன என்பது புரியும். ஒரு கொலையை செய்தவனுக்கு கூட தன் தரப்பு வாதங்களை கூற சட்டம் அனுமதி தருகிறது. அனால் இத்தகைய தவறுகள் செய்யும் பெண்களுக்கு சமூகம் அந்த அனுமதியை அளிபதிலை. நம் கலாசாரம், குடும்பம், சமூகம் மற்றும் சட்ட திட்டங்களையும் மீறி ஒரு பெண் இத்தகைய முடிவை எடுபதற்கு காரணம் வெறும் காம இட்சையாக பல நேரங்களில் இருக்க முடியாது. திருமணம் என்ற உறவில் கணவன் மற்றும் மனைவி சமூக கலாச்சாரா விதிமுறைகளால் கட்டுண்டு இருக்கின்றார்கள். கணவன் தனக்கு மட்டுமே சொந்தம். மனைவி தனக்கு மட்டுமே சொந்தம். அவர்கள்   திருமணத்திற்கு பிறகு தாய் தந்தையிரடம் கூட இடைவெளி விட்டு பழகவேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. ஒரு மேசை, நாற்காலி, நகை, பணம் முதலியவற்றை எப்படி நமக்கு சொந்தமாக பார்கிறோமோ அதுபோல தான் கணவன் மனைவியையும் மனைவி கணவனையும் பார்க்கிறான். பெண்களுக்கு அதுவும் தன்னம்பிக்கை இல்லாத மற்றும் கணவனை மட்டுமே முழுமையாக சார்திருக்கும் பெண்களுக்கு இத்தகையே எண்ணம் அதிகம். கணவன் தன் தாயிடம், தந்தையிடம், சகோதர சகோதரிகளிடம் அன்பு கொண்டிருந்தால் இத்தகையே பெண்களுக்கு பிடிக்காது. கணவன் அவர்களிடம் கொண்டிருக்கும் உறவை துண்டிக்க  முற்படுவார்கள்.   இது கணவனுக்கு தன் மீது வெறுப்பை ஏற்படுத்தும் என்பதைகூட உணரமாட்டார்கள்.ஒரு பாதுகாப்பில்லாத உணர்வின் காரணமாக செய்யப்படும்   இத்தகைய செயல்கள் கணவன் மனைவி இருவரிடம் உள்ள பரசபர அன்பை குறைத்து காலபோக்கில் வெறுப்பை ஏற்படுத்திவிடும். பிறகு உண்மையான அன்பை நினைத்து மனது எங்கும். இத்தகையே சுழலில் இருவருமே பாதை மாறி போக நேரிடும். தன தேடும் அன்பு வேறு ஆண் அல்லது பெண் மூலம் கிடப்பது போல் தெரிந்தால் அவர்கள் மனம் மாறக்கூடும்.


வாழ்வில் பாதுகாப்பாக உணர சில ஆண்கள் பணத்தை தேடி அலைவர். தன வேலையில் தொழிலில், அதனால் அதிக அக்கறையும் ஈடுபாட்டையும் செலுத்துவர். இத்தகையே சுழலில் குடும்பத்தின் மீது செலவிடும் நேரம் குறையும். கலைத்து போய் வேலையிலிருந்து வீடு திரும்பும் அவர்களுக்கு மனைவிடம், தங்கள் குழந்தைகளிடம் அன்பாகவும் அக்கறையாகவும் பேச எண்ணம் இருக்காது. சற்று இளைபாறிவிட்டோ, அல்லது தொலைகாட்சியை பார்த்து விட்டு பின்னர் உணவருந்திவிட்டு தூங்க செல்வர். உண்மையில் மனைவி குழந்தைகள் மீது அவர்களுக்கு அக்கறை இருந்தாலும் கூட அதனை வெளிபடுத்த முடியாத சுழல் நிலவும். குடும்பம் நன்றாக இருக்க தான் பொருள் ஈட்டுவார். ஆனால் குடும்பம் வேலை இரண்டையும் சமன் படுத்தி வாழ தெரியாத காரணத்தால், மனைவி தானும் தன் குழந்தைகளும் தனித்து விடப்பட்டதை போல உணருவார். பணமும் ஆடம்பர வாழ்கையை விரும்பும் பெண்களுக்கு இது ஒரு பொருட்டாக தெரியாவிட்டாலும், அன்பையும் அக்கறையும் விரும்பும் பெண்களுக்கு இந்த வாழ்கை பெரும் சுமையாக அமையும். தன் கருத்தை காதுகொடுத்து கேட்க கூட நேரமிலாத கணவனை நினைத்து வருந்துவர். தன் தொழிலில் வேலையில் ஏற்படும் வெற்றிகளினால், அதனால் ஏற்படும் போதையினால், கணவன் குடும்பத்திற்கு செலவிடும் நேரம் குறைந்துகொண்டே போகும். கணவன் மீது மனைவிக்கு அன்பு குறைந்து வெறுப்பு ஏற்படும். தான் குடும்பத்திற்காக கஷ்டப்பட்டு உழைத்தும் மனைவி தன்னை மதிகவில்லையே என்று கணவன் நினைப்பான். இந்த கசப்புணர்வும் அவர்களை பாதை மாற செய்யும்.      


காதல் திருமணம் செய்து கொண்டு வாழும் கணவன் மனைவி இருவருக்கும் இடையே உள்ள அன்புகூட காலபோக்கில் கசந்துபோகிறது. காதலிக்கும் பொழுது தவறாக தெரியாத ஒரு விஷயம், திருமணத்திற்கு பிறகு தவறாக தெரியும். காதலிக்கும் பொது பெருமையாக நினைத்த ஒரு விஷயம் கூட திருமணத்திற்கு  பிறகு கஷ்டமாக தெரியும். திருமணமாகியும் தான் செல்லும் இடமெல்லாம் தானும் கூடவே வந்து உதவி புரிந்த கணவனை நினைத்து பெருமை பட்டு கொண்ட ஒரு பெண், பின்னர் சில ஆண்டுகளுக்கு பிறகு அது கணவன் தன் மீது கொண்ட அக்கறையால் அல்ல, அது சந்தேகத்தால் என்று தெரியவந்ததும் மனம் நொந்த கதை எனக்கு தெரியும். சிறிது காலம் தாழ்த்தி விட்டுக்கு வந்தாலும் ஏன் எதற்கு என்ற கேள்வி, அவளில் பிற நண்பிகளிடம் விசாரிப்பது தெரிந்ததும் அவள் மனம் சுக்கு நூறாகி இருக்கும். மேலும் காதலிக்கும் பொழுது உண்மைத்தன்மையை யாரும் வெளிபடுத்துவதிலை. அருகில் இருந்து பார்க்கும் பொழுது தான் பிற குறைகள் தெரியும். காதலிக்கும் பொழுது சில விசயத்திற்காக விட்டுகொடுத்ததை போல திருமணத்திற்கு பிறகு விட்டு கொடுக்க இயலாது. காரணம் கணவனை மனைவியோ அல்லது மனைவியை கணவனோ ஒரு ' பொருளாக' தான் பார்க்கும் நிலைமையை திருமண பந்தம் ஏற்படுத்திவிடுகிறது. காதலிக்கும் பொழுது மனது வேலை செய்யும். திருமணத்திற்கு பிறகு மூளை வேலை செய்யும். கவர்ச்சி மறைந்து எதார்த்த வாழ்கையை எதிர்கொள்ளும் பொழுது சங்கடம் ஏற்படும். ஒருவனின் பொருளாதார நிலையை வைத்து திட்டமிட்டு காதலிக்கும் பெண்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு கணவன் மீது உண்மையான அன்பு இருக்காது. அதனை உண்மையான அன்பு என்று நினைத்த காதலனும் திருமணத்திற்கு பிறகு உண்மை தெரிந்தால் வெறுதுவிடுவான்.  (நீங்கள் வாங்கும் சம்பளம் நான் குடும்பம் நடத்த பத்தாது என்று சொன்ன பெண்களும் இருக்கிறார்கள் )
                              
பணத்தை தேடிஅதனால் குடும்பத்தை தொலைபவர்களை விட குடும்பத்தின் மீது அக்கறையே இல்லாத கணவர்கள் பலர் இருக்கின்றனர். மாறி வரும் சமூக சுழலில் பெண்கள் மீது பாரம் அதிகமாகிக்கொண்டே வருகிறது. ஏழ்மை நிலையில் இருக்கும் பல குடும்பங்களில் கணவன் கூலி வேலை செய்து ஈட்டும் பணத்தை பெருமளவு குடிபதார்காக பயன்படுத்துகிறான். சரியாக வேலைக்கு செல்லாத கணவர்களையும் பார்த்திருக்கிறேன். இத்தகையே கணவனை கொண்ட கிராமத்து பெண்கள் அவனால் ஒரு பயனும் இல்லை என்றாலும்,  சமூக கட்டுப்பாடு  காரணமாக  விவாகரத்து செய்யாமல் சேர்ந்து வாழ்கின்றனர். தன் குழந்தைகளை முன்னிட்டு, அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பொருத்து கொண்டு வாழ்கின்றனர்.



தன் எதிர்பார்பிற்கு மாறாக குடும்பத்தினரின் கட்டாயத்தினால் திருமணம் செய்து கொண்டவர்களின் குடும்ப சிக்கல், கணவன் மூன்று முடிச்சி போடும் போதே தொடங்கிவிடும். திருமணம் சரியில்லை என்றால், விவாகரத்து செய்து விட்டு மறுமணம் செய்து கொள்ளும் பெண்களும் முதல் திருமணத்தால் ஏற்பட்ட பாதிப்பை நினைத்து , தன் மறுமண வாழ்கையையும் சரியாக அமைத்து கொள்ளாமல் தவிகின்றனர்.



தன் வருங்கால வாழ்கையை பற்றி ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆணுக்கும் கனவுகள் பல இருக்கும். ஆனால் எதார்த்தம் என்பது வேறு. நம் ஆசைகள் எல்லாம் கனவாகவே போகும் நிலை ஏற்படலாம். அல்லது சில ஆசைகள் பூர்த்தி அடையாளம். அதிலும் கூட ஒரு பெண்ணுக்கு தான் எதிர்பார்த்தபடி கணவன் கிடைத்தாலும், அதே பெண்ணின் கணவன் தான் எதிர்பார்த்தபடி மனைவி இல்லையே என்று நினைக்கலாம் . மிக திருப்த்திகரமாக ஒருவரை ஒருவர் சரியாக புரிந்து கொண்டு, விட்டு கொடுத்து மகிழ்ச்சியாக வாழ்வது வெகு சிலரே. ஆனால் காலபோக்கில் இத்தகைய குடும்பத்தின் எண்ணிக்கை குறைந்துகொண்டே போகிறது.


அன்பும் ஆன்மிகமும் காலச்சாரமும் மிகுந்த நம் நாட்டில், மேற்கத்திய தாகத்தினால் பல மாற்றங்கள் உண்டாகியுள்ளன. இது திணிக்கப்பட்டதாக நாம் எடுத்துகொள்ள கூடாது. தவிர்க்க முடியாத மாற்றம் தான் இது. தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியினால் உலகமே உள்ளங்கையில் இருக்கிறது. பல விசயங்களை தெரிந்து கொள்ள நேரிடுகிறது. மேலும் வாழ்கை மேலும் மேலும் கடினமாகி கொண்டே போகிறது. எதற்கும் போட்டி போட வேண்டிருக்கிறது. அதனால் அன்பு குறைகிறது.


அன்பு குறைகிறது. இது தான் இப்பொழுது நாம் சந்திக்கும் பெரிய பிரச்னை. ஒருவருக்கு ஒருவர் பரசபரம் அன்பு செலுத்துவது குறைந்துவிட்டது. நாம் அன்பை தேடுகிறோம். ஆனால் தர மறுக்கிறோம். அது கணவன் மனைவிக்கும் இடையில் உண்மையான அன்பு இல்லாத  பொழுது, எங்கு அன்பு கிடைக்கிறதோ அங்கு மனம் பாயதொடங்குகிறது. அத்தகைய சுழலில் சமூக, குடும்ப காலச்சார கட்டுபாடுகள் தடையாக தோன்றுவதில்லை. அன்பிற்காக தன் மானத்தை கூட இழக்கும் கேவலமான நிலைக்கு பெண்கள் தள்ள பட்டுள்ளனர் என்பதே உண்மை.


திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு ஏன் ஏற்படுகிறது என்று அலசி ஆராயும் பக்குவம் இதில் சம்மந்தப்பட்டவர்களுக்கு இல்லை.  முதலில் அவன் அல்லது அவன் தனக்கு சொந்தமான பொருள். அதனை எப்படி இன்னொருவன் பயன்படுத்தலாம் என்ற எண்ணம் தான் வருகிறது. அவர்களுக்குள் ஒரு இதயம் இருக்கின்றது, அது எத்தகைய சுழலில் இந்த கடினமான முடிவை எடுக்க தூண்டியது என்று யாரும் யோசிபதில்லை. சமூகமும் யோசிக்கவிடுவதில்லை.இந்த சமூகம் பெண்களுக்கு விதித்துள்ள கட்டுபாடுகள் அதிகம். ஆண்களுக்கு கட்டுபாடுகள் குறைவு. ஆனால் காமத்தின் காரணமாக தப்பு செய்பவர்கள் பெரும்பாலான ஆண்கள். பெரும்பாலான பெண்களுக்கோ காமம் முதன்மையான காரணமாக இருக்காது. அன்பை தேடும் பெண்கள் காமம் வேண்டும் ஆண்களின் போலியான அன்பில் சில சமயம் விழுந்து விடுவதும் உண்டு. வாழ்க்கையில் வெறுப்பு, விரக்தி, நம்பிகைஇன்மை, போலியான அன்பு, நிறைவேறாத சின்ன சின்ன ஆசைகள் அவர்களை தடம் மாற செய்கின்றன.காற்றில் அசைந்தாடும் கொடி ஏதோ ஒன்றை பற்றி கொள்ள துடிப்பது போல துடிக்கும் அவர்கள், ஒரு நம்பிக்கையின் பெயரில் ஏதேனும் ஒன்றை பற்றிகொள்கின்றனர்.  


போட்டிகளும், எதிர்பார்ப்புகளும், அகந்தையும், சுயநலமும் அதிகமாகிக்கொண்டே போகும் சுழலில் இத்தகைய மாற்றம் தவிர்க்க முடியாதது. ஆனால் இதற்கும் வழக்கம் போல பெண்களை மட்டும் குறை சொல்கிறோம்.  


ஒரு ஆணிடம் ஒரு பெண் நட்பாக பழகினால் கூட அதனை தவறாக பார்க்கும் சமூக சுழல் தான் நிலவுகிறது. ஒரு பெண் அப்படி பட்ட சொற்களை தன் காதால் கேட்டுவிட்டால் வேறு வழி இல்லாமல் நட்பை துண்டித்துகொள்கிறாள். அல்லது சமூகமே நம்மை தவறாக பார்க்கும் பொழுது அப்படி நடந்தால் தான் என்ன என்ற எண்ணத்திற்கும் ஆளாகிறாள். நம் இந்திய நாட்டில் தான் மக்கட் தொகை அதிகம். ஆனால் உடலுறவு குறித்தும் ஒழுக்கத்தை பற்றியும் மிகவும் கவலைபடுவது அதனை கொச்சைபடுத்துவதும் நாம் தான். உண்மை தெரியாமல் நட்பையும் கொச்சை படுத்துவோம்.    பெண்களுக்கு விதிக்கப்பட்டுள அதிகபடியான சமூக  கட்டுபாடுகள் அதிகபடியான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இதற்காக கட்டுபாடுகள் தேவையில்லை என்று அர்த்தம் இல்லை. கட்டுப்பாடு என்பது சமூகத்தில் உள்ள அனைவர்க்கும் சமம் என்றால் பெரிதாக எதிர்வினை இருக்காது. ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி. ஏழைக்கு ஒரு நீதி பணக்காரனுக்கு ஒரு நீதி, பதவியும்  அதிகாரமும் உள்ளவனுக்கு ஒரு நீதி சாமானியனுக்கு ஒரு நீதி என்ற சுழலில் எதிர்வினைகள் பெரிதாக ஏற்படும்.   
   


ஒரு திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவில் ஈடுபட்டுள்ள ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே "இவள் எனக்கு சொந்தம்" அல்லது "இவன் எனக்கு சொந்தம்" என்ற நினைப்பு இல்லாவிட்டால் கண்டிப்பாக அது திருமணத்தை விட ஒரு புனிதமான உறவாக இருக்கும் . ஆனால் அங்கேயும் "possessiveness " வரும் பொழுது அன்பு மறைந்து சுயநலம் மேலோங்குகிறது. 


"பதினொரு நிமிடங்கள்" என்ற புத்தகத்தில் "Paulo Coelho " ஒரு விலைமகளின் உண்மையான காதலை வெளிபடுத்தியிருபார். தான் காதலிக்கும் ஓவியன் மீது எல்லையட்ட்ற அன்பை கொண்ட அவள் அந்த அன்பு நிலைக்க அவனை தான் சொந்தமாகி கொள்ள கூடாது என்று எண்ணுவாள். அவனை அன்பின் மிகுதியால் விலகி செல்லவும் நினைப்பாள். உண்மையான அன்பு எதையும் எதிர்பார்க்காது. அப்படி பட்ட அன்பை தேடுகிறோம். ஆனால் தர மறுக்கிறோம். அப்படி பட்ட அன்பு கிடைத்தால் அதற்காக எதுவும் செய்ய முயல்கிறோம். ஒருவன் தன் மீது உண்மையான அன்பை செலுத்துகிறான் என்பதை ஒரு பெண் உணர்துவிட்டால் அதற்காக தடைகள் அனைத்தையும் உடைத்தெறிந்து வெளியேறுகிறாள். மிக கடினமான முடிவுகளையும் எளிதாக எடுக்கிறாள். இதை கள்ள தொடர்பு என்று எளிதில் நாம் கொச்சைபடுத்துகிறோம். அன்பின் மிகுதியால் ஏற்படும் எந்த உறவும் நல்ல உறவே. வெறும் செய்தித்தாளை படித்துவிட்டு அதனை கள்ளஉறவு என்று முடிவு செய்து அவர்களை தூற்றி நம் மன அழுக்குக்கு வடிகால் தேடுகிறோம். 


"Kahil Gibranin" உடைந்த சிறகுகள்" என்ற கதையில் செல்மா என்ற பெண் " தன் தந்தை மற்றும் மதபோதகரின் வற்புறுத்தலால் பணக்காரன் ஒருவனை தன் விருபத்திற்கு மாறாக திருமணம் செய்து கொண்டு கஷ்டபடுவதை அழகாக பதிவு செய்திருப்பார். தான் விரும்பிய காதலன் கிடைக்காமல் பொருள் ஈட்டுவதிலும் பெண் பித்தனாக பல பெண்களுடன் தொடர்பு கொண்ட அன்பில்லாத கணவனுடன் அவள் வாழும் வாழ்கையை சகிக்காமல், அவள் தந்தையும் தவறை உணர்து நோய் வாய் பட்டு இறந்துவிடுவார். சமூகத்தின் மீது கொண்ட பயத்தின் காரணமாக திருமணத்திற்கு பிறகு சில சந்திப்புகளில் " வா ஓடிவிடலாம் " என்ற காதலனின் அழைப்பை புறக்கணித்து நிமதியட்ட்ற வாழ்வை வாழ்து அவள் இறந்துவிடுவாள். அவள் இறப்பு கூட அவள் கணவனிற்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது .


உடைந்த சிறகுகளில் திருமணத்தை பற்றி குறிபிடும்போழுது " திருமணம் என்பது பெண்களை பொறுத்தவரை பெற்றோர்கள் மற்றும் ஆண்களின் கையில் வேடிக்கையான சடங்காகும். பெண் என்பவள் ஒரு வீட்டிலிருந்து மற்றொரு வீட்டுக்கு வாங்கி எடுத்து செல்லும் பொருளாக தான் பார்க்க படுகிறாள். காலபோக்கில் அவள் அழகு   குறைந்து ஒரு பழைய நாற்காலியை போலவோ மேசையை போலவோ வீட்டின் இருட்டான மூலையில் இருக்கிறாள்" என்று "kahlil gibran " கூறுகிறார்     
    
மேலும் தற்கால பெண்களின் நிலையை பற்றி கூறும் பொழுது ' தற்கால நாகரீகம் பெண்களை சற்று புத்திசாலிகளாக  மாற்றியுள்ளது, ஆனால் ஆண்களின் சூழ்ச்சியினால் அவளுக்கு கஷ்டத்தை அதிகபடுத்தியுளது. நேற்றைய பெண் மகிழ்ச்சியான மனைவியாக இருந்தாள். இப்பொழுதோ துன்பத்தில் உழல்பவலாக இருக்கிறாள். நேற்று கண்ணை மூடி கொண்டு வெளிச்சத்தில்  நடந்தாள். இன்று கண்ணை திறந்து கொண்டு இருட்டில் நடக்கிறாள். நேற்று அவள் அறியாமையின் அழகில், எளிமையின் பண்பில், தன் இயலாமையிலும் உறுதியாக இருந்தாள். இன்று அவள் தன் அறிவின் அசிங்கத்தில், மேலோட்டமாக இதயமில்லாமல் இருக்கிறாள். அறிவும் அழகும் , ஞானமும் குணமும், உடலின் உறுதியின்மையும் உள்ளத்தின் உறுதியும் என்று தான் பெண்களுக்கு ஒன்றாக அமையுமோ என்கிறார்             


செல்மா தன்னுடன் வர வற்புறுத்திய தன் காதலனிடம் தன் துயரமான வாழ்வை பற்றி குறிப்பிடும் பொழுது : சொர்க்கம் எனக்கு தந்த கசப்பான பானத்தை சில துளிகள் மட்டும் மிட்சம் வைத்துவிட்டு அதன் முழு கசப்புதன்மையை உணர்வதற்காக குடித்துவிட்டேன். மீதம் இருக்கும் சிறு துளிகளையும் பொறுமையாக பருகுவேன். புதிய அன்பான அமைதியான  வாழ்க்கைக்கு தகுதியானவள் நான் அல்ல. வாழ்கையின் மகிழ்ச்சியையும் சுவையும் உணர்வதற்கான சக்தி என்னிடம் இல்லை. வானத்தில் பறக்கமுடியாத அளவிற்கு என் சிறகுகள் உடைந்து போய்விட்டன. மெழுகுவர்த்தி வெளிச்சத்திற்கு பழக்கப்பட்ட என் கண்கள் சூரிய வெளிச்சத்தை தாங்காது. மகிழ்ச்சியை பற்றியே என்னிடம் பேசாதே. அதனை பற்றிய எண்ணமே என்னை துன்புரசெய்கிறது. அமைதியை பற்றி நீ கூறாதே, அதன் நிழல் என்னை பயமுற செய்கிறது.ஆனால் நீ என் இதயத்தை பார். என் இதயம் என்ற சாம்பல் குவியலில் சொர்க்கம் ஏற்றி வாய்த்த புனித வெளிச்சத்தை பார். நான் உன் தாய் உன் மீது அன்பு செலுத்தியதை போல் அன்பு செலுத்துவது தெரியும். அந்த அன்பு தான் உன்னை என்னிடமிருந்தும் பாதுகாக்க கற்று தந்தது. நெருப்பினால் புனிதபடுத்தபட்ட அந்த அன்பு தான் உன்னை நான் பின்தொடர்து தூர தேசத்திற்கு வர தடையாக இருக்கின்றது. அந்த அன்பு தான் என் ஆசைகளை கொன்று நீ சுதந்திரமாகவும் பண்புள்ளவனாகவும்  வாழ வழிவகுத்துள்ளது. எல்லையுள்ள அன்பு அன்புகொண்டவரை கேட்கும். எல்லை இல்லாத அன்பு அன்பை மட்டுமே கேட்கும். 


பின்னர் செல்மா சொல்கிறாள் " நான் இப்பொழுது மகிழ்ச்சியாக கொடூரமான பேய்கள் இருக்கும் இருண்ட குகைக்குள் செல்கிறேன். என்னை எண்ணி வருத்தப்படவோ பாவபடவோ வேண்டாம். கடவுளின் நிழலை கண்ட ஆத்மாவிற்கு பேய்களை பார்த்து பயம் இருக்காது. சொர்கத்தை கண்ட கண்கள் இந்த பூவுலகின் வலிகளை கண்டு மூடாது 


செல்மாவை போல வலிகளை பொறுத்துக்கொண்டு வாழும் பெண்கள் தான் இன்னும் அதிகம். காரணங்களும் சூழ்நிலைகளும் வேறுபடலாம். ஆனால் துன்பம் மட்டுமே அவர்களுக்கு நிரந்தரம். செல்மா தனக்கு சிறகுகள் உடைந்து விட்டதாக கூறுகிறாள். பல பெண்களுக்கு சிறகுகள் உடைக்க பட்டு தான் இருக்கின்றது. இதையும் மீறி பறக்க நினைக்கும் பெண்களை தாக்க தயாராக காத்திருக்கின்றன சமூகத்தில் பல வல்லூறுகள். தவறு செய்யாதவர் யாரேனும் இருந்தால் இந்த பெண் மீது கல்லை வீசுங்கள் என்றார் இயேசு. நாம் மனதில் அழுக்கையும் முதுகு நிறைய பாவத்தையும் வைத்திருந்தும் காரணம் தெரியாமலேயே ஒருவர் கல் வீசுகிறார் என்பதால் நாமும் வீசுகிறோம்.    


ஆசை படாமல் வாழவேண்டும் என்று போதனை உண்டு. ஆனால் வாழ்வதற்கு கூட ஆசைபட  கூடாதா ? வாழ்கையில் எப்போதாவது வரும் சின்ன சின்ன சந்தோஷங்களை விட வேறு எதுவும் இல்லை.     


இந்த உலகில் எதுவும் நமக்கு சொந்தமில்லை. நாம் இறந்தால் அதன் வருத்தமும் வலியும் நீண்ட நாள் நம்மையே நம்பியிருப்பவருக்கு கூட இருக்காது. காலம் அதற்கு மருந்தாக அமையும். ஆனால் அன்பு செலுத்தபடாமல் வாழ்நாள் முழுவதும் புறக்கனிகபடும் வலி மிகவும் கொடுமையானது. 


" சொந்தம் " என்ற வார்த்தையை உறவினர்களுக்கு இடையே பயன்படுத்துவது கூட தவறானது. எனக்கு சொந்தம் என்ற உரிமையே ஒருவர் மீதான ஈடுபாட்டை அதிகபடுத்துகிறது. மனைவி- கணவன்- குழந்தைகள் என்ற குடும்ப அமைப்பில் இந்த ஈடுபாடு மிக அதிகம். இதனால் சுயநலம் மேலோங்குகிறது. தனது "தீர்க்கதரிசி " என்ற அற்புதமான  படைப்பில் குழந்தைகளை பற்றி சொல்லும் பொழுது "கஹ்ளில் கிப்ரான்" இவ்வாறு கூறுகிறார்             
உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல 
வாழ்கை தனக்காக ஆசைபடுவதனால்
அதனின் மகனாகவும் மகளாகவும் பிர்றபவர்கள்
அவர்கள் உங்களால் வந்தவர்கள் அல்ல 
உங்கள் வழியே வந்தவர்கள்,
அவர்கள் உங்களுடன் இருந்தாலும் உங்களுக்கு சொந்தம் இல்லை'
நீங்கள் அவர்களுக்கு உங்கள் அன்பை தர முடியும் எண்ணத்தை தரமுடியாது,
என்னென்றால் அவர்களுக்கு என ஒரு சொந்த எண்ணம் இருக்கும்
நீங்கள் அவர்களின் உடம்பிற்கு அடைக்கலம் தரலாம் ,
உள்ளத்திற்கு தரமுடியாது       
என்னென்றால் அவர்களின் ஆன்மா நீங்கள் கனவிலும் கூட செல்ல முடியாத நாளை என்ற வீட்டில்  வாழ்கின்றன 


நாம் பெற்ற குழந்தைகளிடம் கூட இந்த பக்குவத்தில் தான் நடந்து கொள்ள வேண்டும் என்றால் திருமண பந்தத்தின் மூலம் இணைந்த கணவன் மனைவியிடமும் மனைவி கணவனிடமும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் 


ஒரு குடும்பம் என்ற அமைப்பு சமூகத்தினால் சில பல காரணங்களால் எற்படுத்தபட்டுளது. ஒரு குடும்பம் ஒரு தெரு ஒரு கிராமம், ஒரு மாநிலம் ஒரு நாடு என்பது ஒரு அடையாளம். நன்ற யோசித்து பார்த்தல் திருமணம் என்ற பந்தம் ஒரு சமூக பாதுகாப்பை மனிதர்களுக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு வழங்க ஏற்படுத்த பட்ட ஒரு அமைப்பாகும். சில பழங்குடியினர் சமுதாயத்தை பொறுத்தவரை பல தாரத்துடன் கூட்டமாக வசிக்கும் நிலை இருக்கிறது. அவர்களை பொறுத்தவரை அது தங்கள் பாதுகாபிற்காக ஏற்படுத்திக்கொண்ட ஒரு சமூக முறை. மேலை நாடுகளில் விவாகரத்தும் மறுமணமும் சாதாரணம். அதனால் பெரிதாக சமூதாய சிக்கல் ஏற்படுவதில்லை. குழந்தையை தாயோ தந்தையோ குறிப்பிட்ட வயது வரை பொறுபெடுத்து வளர்கின்றனர். திருமண உறவின் மூலம் ஏற்படும் குடும்பம் என்ற அமைப்பில் சமூதாய பாதுகாப்பு குழந்தைகளுக்கு உறுதிசெயயபடிகிறது. இதை தவிர பொருளாதார நோக்கத்துடன் ( தன் குடும்பத்திற்கு சொத்து சேர்க்க) சுயநலமாக செயல்படும் அமைப்பாக அது மாறிவிடுகிறது. அதனால் தான் தன் குடும்பத்தை தாண்டி பலர் சமூக அக்கறையோடு சிந்திபதில்லை. தனக்கு நேரடியாக பாதிப்பு ஏற்படும் வரை சமூகத்தில் ஏற்படும் சீர்கேடு குறித்து குரல் எழுப்புவதில்லை. உதாரணம் : கள்ள காதல் குறித்த செய்திகளை அசை போட்டு அதில் ஒரு வித திருப்தி அடைவதோடு இருந்துவிடுவர். தன் குடும்பத்திலும் தான் சரியாக அன்பு செலுத்த தவறும் பட்சத்தில் இது போன்ற ஒரு நிகழ்வு நடக்கும் என்று யாரும் சிந்திபதில்லை.


எனவே குடும்பம் என்ற அமைப்பில் உள்ளவர்களை பாதுகாப்பது மட்டும் தான் நமது கடமை. வேறு எந்தவிதத்திலும் யாரும் யாருக்கும் உடமையாகவோ அடிமையாகவோ  மாட்டார்கள்.


சரி. காமத்தின் மிகுதியால் தவறு செய்யும் பெண்கள் இல்லவே இல்லையா என்றால் அப்படிப்பட்டவர்களும் இருகிறார்கள். காமம் மிகுந்தால் பேருந்தில் இடிப்பதில் இருந்து ஆரம்பித்து விலைமகளிடம் செல்லும் ஆண்கள் வரை இருக்கிறார்கள்.அவர்களுக்கு பெரிதாக இந்த சமூதாயத்தில் தண்டனைகள்  இல்லை. ஆனால் பெண்கள்? தகுந்த வாய்ப்பு வந்தால் பயன்படுத்திகொள்வார்கள். ஆனால் இத்தகைய பெண்களின் சதவிகிதம் வெகு குறைவே. பசி போல காமமும் ஒரு உணர்வு. 


ஒருவரின் உடலமைப்பையும் குணதிசயத்தையும் முடிவு செய்வதில் அடிப்படை மூல கூறுகளான "Gene 's " ( ஜீன்கள் ) பெரும் பங்கு வகிகின்றான. பிறப்பால் நிர்ணயம் செய்யப்பட்ட சில அடிப்படை உணர்வுகள் மீது குடும்பம் மற்றும் சமுதாயத்தின் தாக்கம் நிகழும் பொழுது அது குணமாக உருவெடுக்கிறது. இந்த அடிப்படையில் பார்த்தல் அதுவும் கூட தவறில்லை.


இந்த கட்டுரையின் நோக்கம் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு வேண்டும் என்பது அல்ல. எந்த சுழலில் அது ஏற்படுகிறது என்பதை என் அறிவுக்கு எட்டியவரை பதிந்திருக்கிறேன். 


கணவர்களே மனைவி மீது அன்பு மட்டும் செலுத்துங்கள் 
மனைவிகளே கணவன் மீது அன்பு மட்டும் செல்லுதுங்கள் 
ஒருவர் மீது ஒருவர் முழுமையான நம்பிக்கை வையுங்கள். 
அவர்களின் குறைந்தபட்ச சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றுங்கள்  
அவர்களை தனக்கே தனக்கு என்று சொந்தம் கொண்டாடவேண்டாம் 
வாழ்க்கை மிக அமைதியாக இருக்கும். யாரும் வழி தவறியும் செல்லமாட்டார்கள். 


அப்படியே சென்றாலும் "LaoTzu" வின் இந்த கவிதையை நினைவில் வைத்திருங்கள் 


அனைத்தும் கடந்துவிடும் 


சூரியன் உதித்து கொண்டே இருப்பதில்லை 


அனைத்தும் கடந்துவிடும் 


மழையும் பொழிந்துகொண்டே இருப்பதில்லை 


மறைந்த சூரியன் மீண்டும்  உதிக்காமல் இருப்பதில்லை 


அனைத்தும் கடந்துவிடும் 


இவை எல்லாம் மாறும் 


இந்த பூமி ... வானம்... இடி 
மலை... தண்ணீர்... 
காற்று... நெருப்பு - கண்மாய் --




இவையே மாறும் என்றால் 
இவையே  நிரந்தரம் இல்லை என்றால் 


மனிதனின் எண்ணங்கள் நிலையாக இருக்குமா ?
கற்பனைகள் நிலையாக இருக்குமா ?
வருவதை அப்படியே ஏற்று கொள்ளுங்கள் 
அனைத்தும் கடந்துவிடும் 

"THIS TOO WILL PASS AWAY "  





  



1 கருத்து:

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

செல்மாவை போல வலிகளை பொறுத்துக்கொண்டு வாழும் பெண்கள் தான் இன்னும் அதிகம். காரணங்களும் சூழ்நிலைகளும் வேறுபடலாம். ஆனால் துன்பம் மட்டுமே அவர்களுக்கு நிரந்தரம். செல்மா தனக்கு சிறகுகள் உடைந்து விட்டதாக கூறுகிறாள். பல பெண்களுக்கு சிறகுகள் உடைக்க பட்டு தான் இருக்கின்றது. இதையும் மீறி பறக்க நினைக்கும் பெண்களை தாக்க தயாராக காத்திருக்கின்றன சமூகத்தில் பல வல்லூறுகள். தவறு செய்யாதவர் யாரேனும் இருந்தால் இந்த பெண் மீது கல்லை வீசுங்கள் என்றார் இயேசு. நாம் மனதில் அழுக்கையும் முதுகு நிறைய பாவத்தையும் வைத்திருந்தும் காரணம் தெரியாமலேயே ஒருவர் கல் வீசுகிறார் என்பதால் நாமும் வீசுகிறோம். //

இதைவிட ஆழமா சொல்ல முடியுமா னு தெரியலை..துன்பம் மட்டுமே நிரந்தரம்..

பல காரணங்களுக்காக வெளியில் வர முடியா சூழலும் .. நீங்க சொன்னதுபோல் கழுகுகளும், சிங்கங்களும் ஏ காத்திருக்கின்றன..

கருத்துரையிடுக