பிரபலமான இடுகைகள்

திங்கள், 23 மே, 2011

ஆசிரியர்கள்

விவசாய கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் பொழுது நிகழ்ந்த நிகழ்வு இது. கல்லூரியில் நான் சேர்ந்த உடனேயே சீனியர் மாணவர் ஒருவர் வந்து " நீங்கள் கொடுத்துவைத்தவர். உங்களை தான் தன் மாணவனாக ஏற்றுகொள்வது என கே. ஆர் ( K.ராமசாமி) முடிவு செய்திருக்கிறார். அதனால் நீங்கள் செய்ய போகும் Thesis இற்கு அவர் தான் சரிமன்" என்று சொன்னார். என்னக்கு மிக ஆச்சிர்யமாக இருந்தது. என்னை பற்றி அவருக்கு தெரியாது. அனால் வேறு ஒஉர் கல்லூரியில் படித்த என்னை பற்றிய தகவலை அவர் அறிந்து கொண்ட பிறகே இந்த முடிவை எடுத்துள்ளார் என்பதை கேள்விபட்டதும் மேலும் வியப்பு. கே. ஆர் மாணவர் என்றால் கண்டிப்பாக வெளிநாடு சென்று விடுவர் என்ற பேச்சும் கல்லூரியில் உண்டு. மேலும் அவர் பரிசோதனை கூடம் மிகவும் நவீன மயமாகபட்டது.கல்லூரியிலேயே மிக சிறந்தது என்ற பெயரும் இருந்தது. 

முதுகலை சுற்றுபுற சூழலியலில் ஐந்தே ஐந்து மாணவர்களை தான் வருடத்திற்கு சேர்ப்பர். அந்த ஐந்தில் மூவர் பெண்கள். இருவர் ஆண்கள். இதில் எனக்கு மட்டும் தான் இந்த வாய்ப்பு. என்னை தவிர பிறருக்கு அந்த பரிசோதனை கூடத்தில் கே. ஆர் அனுமதியிலாமல் நுழைய முடியாது. அதனால் என்னை பொறாமையோடு தான் சக மாணவர்கள் பார்பர். என் மீது அவர் வைத்த நம்பிக்கையை பொய் ஆக்க கூடாது என்று லேபிலேயே கிடந்தேன். மாலை மற்றும் இரவு நேரங்களிலும் விடுமுறை நாட்களிலும் என் பொழுது ஆராய்ச்சியில் கழிந்தது. இதற்கு உறுதுணையாக நாகமணி என்ற உதவி பேராசிரியரும் இருந்தார்.     

ஒரு முறை என் பிறந்த நாள் அன்று 5 ஸ்டார் சாக்லேட் வாங்கி எங்கள் துறையில் இருந்த 15 நம்பர்களுக்கு கொடுத்தேன். பேராசிரியர் கே. ஆர் அவர்களுக்கும் ஒன்று கொடுத்தேன். மதிய உணவு உண்ண Hostel லுக்கு சென்று விட்டு லேபிற்கு சென்று என் இருக்கைக்கு சென்ற பொழுது ஒரு ஆச்சிர்யம் காத்திருந்தது. ( ஆசிர்யர்களுக்கு மட்டும் அல்ல தன் மாணவர்களுக்கும் ஒரு இருக்கை லேபில் இருக்கும் மாறு கே. ஆர் பார்த்துகொண்டார் ). என் மேசையின் மேல் ஒரு பெரிய கேக் இருந்தது. நான் யார் இதை இங்கு வைத்து என்று கேட்டேன். அதற்கு லேபில் சிறப் ஆக  பணி புரியும் பெண் ஒருவர் " கே. ஆர் தான் வாங்கி உன் டேபிள் இல் வைக்க சொன்னார். நான்கு மணிக்கு அவர் வருகிறாராம். உன்னை கேக் வெட்டி லேபில் அனைவர்க்கும் தர சொன்னார் என்றார். நான் அடைந்த மகிழ்சிக்கு அளவேயில்லை. இது வரை வீட்டில் கூட அந்த பழக்கம் இல்லை என்பதால்  கேக் வெட்டியதில்லை. 

கே. ஆர் என்றாலே அனைவரும் பயந்து நடுங்குவர். ஆனால் அவர் என் மீது வைத்திருந்த பிரியம் அனைவர்க்கும் ஆச்சிரியம் அளித்தது. அவரிடம் என்னை கவர்தது நிர்வாக திறனுடன் கூடிய எளிமை. 

அவர் மட்டும் அல்ல. அப்பொழுது  உதவி பேராசிரியராக பணி புரிந்த நாகமணி அவர்களும், ஒரு சிறந்த நண்பனை போல பழகினார்.

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தன் மாணவனை நல்ல நிலைக்கு உயர்த்த அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

எனக்கு பதினொன்றாம் மற்றும் பனிரண்டாம் வகுப்பு எடுத்த நாவலர் நெடுஞ்செழியன் அரசு மேல்நிலை பள்ளியின் (பாண்டிசெரி)ஆசரியர்கள் அனைவருமே ( இரண்டு சாமிநாதன் ( physics அண்ட் Botany ), பார்த்தசாரதி ( ZoologY ) மற்றும் Chemistry ஆசிர்யர்களும் தங்கள் ஆசிரியர் பணியை மிக சிறப்பாக செய்தனர். 

என்னை நல்வழி படுத்திய ஆசிரியர்  அனைவர்க்கும் நன்றிகள் 

இத்தகைய நல்ல மனிதர்களுக்கு எதிர்மறையான மோசமான மனிதர்களை தான் நான் பிறகு சந்திக்க நேர்ந்தது. இருந்தாலும் நல்ல ஆசிரியர்களிடம் இருந்து நான் கற்ற நற்பண்புகள் எனக்கு இன்றும் உதவியாக இருகின்றது 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக