பிரபலமான இடுகைகள்

வியாழன், 19 மே, 2011

என்டோசல்பான்- தடை தேவையா ? சிந்திப்பீர்


C9H6Cl6O3S


எண்டோசல்பான் என்ற பூச்சிகொல்லி மருந்தை தடை செய்ய கூக்குரல் எழுந்த பொழுதே மனதில் ஒரு சந்தேக விதை தோன்றியது. ஒரு விவசாய பட்டாதாரியாகவும் ஒரு உர நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதியாகவும் வேலை பார்த்த அனுபவம் இப்படி நினைக்க சொன்னது.

இன்று விவசாய பயன்பாட்டிற்கு எண்ணற்ற பூச்சிகொல்லிகள் வந்துவிட்டன. அதுவும் பன்னாட்டு கம்பனிகள் இந்தியாவில் தங்கள் விற்பனையை தொடங்கியவுடன் சந்தைக்கு புதிது புதிதாக பூச்சிகொல்லிகள் வர ஆரம்பித்தன. புதிய ரசாயன கூறுகளுடன் உள்ள பூச்சி கொல்லிகள். இரண்டு அல்லது மூன்று ரசாயனகளை கொண்ட பூச்சி மருந்துகள் ( பாரசிட்டமால் மற்றும் nimusulide இரண்டும் கலந்த மாத்திரையை போல ) வித விதமான Brand Name ( சந்தை பெயர்) களில் சந்தையில் விற்பனைக்கு வந்தன. உர மற்றும் பூச்சிமருந்து கடைகளில் வித விதமான கவர்சிகரமான வண்ணமிகு  டப்பாக்கள் மற்றும் பாட்டில்களில் அடைகபட்டிருக்கும் இந்த பூச்சிமருந்துகளை கண்டு நான் வியப்படைந்ததுண்டு. வருடா வருடம் புதிய புதிய பூச்சிமருந்துகள். எவ்வளவு தான் தாங்கும் இந்த தேசம் ?  


ஆனால் எத்தனை இரகங்கள் வந்தாலும் காய்கறி மற்றும் நெல் போன்ற உணவு பயிர்களுக்கு சர்வரோக நிவாரணி போல செயல்பட்டு வந்தவை மோனோ க்ரோடோபாஸ் ( Monocrophos - இது ஊடுருவிபாயும் தன்மை கொண்ட அர்கனோ போஸ்பராஸ் வகையை சார்ந்தது ) மற்றும் தற்பொழுது பிரச்சனைக்கு உண்டாகியுள்ள எண்டோசல்பான் ( தொடு நஞ்சு  வகையை சார்ந்த அர்கனோ க்ளோரின் பூச்சிமருந்து ). விவசாயிகளுக்கு இதன் ரசாயன பெயர் தெரியாவிட்டாலும், தங்கள் பகுதியில் பிரபலமாக இருக்கும் இந்த பூச்சிகொல்லிகளின் சந்தை பெயர் தெரியும் ( Monocil , Nucacron Endocel , thiosulfan ). மற்ற பூச்சிமருந்துகளை  விட விளையும் குறைவு. 

எனக்கு சந்தேகம் எழுந்தது இதனால் தான். எனவே இது குறித்து கொஞ்சம் வலைபதிவுகளை யும் செய்திகளையும் கணினியில் பார்த்த பொழுது சந்தேகம் உறுதியானது.
இதன் பின்னால் வழக்கம் போல வளர்ந்த நாடுகளை சார்ந்த பன்னாட்டு நிறுவனங்களின் சதி உள்ளது. 
கடந்த ஏப்ரல் 29 , 2011  இல் Geneva வில் நடந்த Stockholm Convention இல் என்டோசல்பான் தயாரிப்பு மற்றும் பயன்பாட்டை நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது. மேலும் என்டோசல்பானுக்கு மாற்றாக புதிய மருந்தை கண்டுபிடிக்க வளரும் நாடுகளுக்கு நிதி உதவி அள்ளிகவும் முடிவு செய்யப்பட்டது . இந்த மாநாட்டில் கலந்து கொண்ட 173 நாடுகளும் இந்த முடிவுக்கு கட்டுப்படவேண்டும். ஆனால் அதற்கு ஐந்து வருடவிதிவிலக்கு (அவகாசமும்) தரபட்டுள்ளது. இந்த விதிவிலக்கின் படி ௪௪ பூச்சிகளுக்கு எதிராக 22 பயிர்களில் மட்டும் இதனை பயன்படுத்த அனுமதியளிகபட்டுளது. பருத்தி, சணல், காப்பி, டி, புகையிலை, கொத்தவரை , பீன்ஸ் , தக்காளி , வெண்டை, கத்திரிக்காய், உருளை, மிளகாய், ஆப்பில், மா, பயிறு வகை செடிகள் , மக்கா சோளம், நெல் , கோதுமை , நிலகடலை மற்றும் கடுகு ஆகிய பயிர்களுக்கு இதனை பயன்படுத்தலாம்.

இருந்தாலும் என்டோசல்பான் தடை குறித்து நம் நாடு தான் முடிவெடுக்க வேண்டும். அத்தகைய முடிவை எடுக்க வற்புறுத்தியே சில நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன   
வானுர்தி மூலம் என்டோசல்பான் 

            


முதன் முதலாக ஒரு தொண்டு நிறுவனம் ( Centre for Science and Environment ) வட கேரளா மாநிலத்தில் உள்ள காசர்கோடு மாவட்டத்தை சார்ந்த சில கிராமங்களில் என்டோசல்பான் பாதிப்பு பற்றி செய்தி வெளியிட்டது.  அதன் சொந்த பத்திரிக்கையான Down to Earth (28 .02 .2001 ) இதழில் இந்த செய்தி வெளியானது. கேரளா அரசின் Plantation Corporation of Kerala (PCK )விற்கு சொந்தமான முந்திரி காடுகளில் வானூர்தி மூலம் என்டோசல்பான் தெளிக்கபட்டதால் அருகில் இருந்த கிராம மக்களுக்கு உடல் குறைபாடு மற்றும் மன நோயுடன் குழந்தைகள், கான்செர் , குழந்தை இறப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டதாக செய்தி வெளியிட்டது. பின்னர் பல செய்தி தாள்கள் மற்றும் தொலைகாட்சிகள்  இது குறித்து செய்தி வெளியிட்டன.

தேசிய மனித உரிமை கழகம் இதன் அடிப்படையில் இந்திய மருத்துவ கழகம் உள்ளிட்ட பல நிருவனகளை இது குறித்து ஆய்வு மேற்கொள்ள செய்தது. இந்திய மருத்துவ கழகம் தனக்கு கீழ் செயல்படும் National Institute Of Occupational Health (NIOH )என்ற நிறுவனத்திடம் ஆய்வை ஒப்படைத்தது   

காசர்கோட்டில் தனியார் முந்திரி தோப்புகளை தவிர கேரளா வனதோட்ட நிறுவனத்திற்கு சொந்தமாக மூன்று முந்திரி தோட்டங்கள், மொத்தமாக 4500 ha பரப்பளவில் இருந்தன,. இந்த முந்த்ரிகாடுகளில் என்டோசல்பான் கடந்த இருபது வருடாங்களாக பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்த முந்திரி காடுகளை சுற்றியுள்ள கிராமங்களில் முக பக்கவாதம், மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள், கை கால் ஊனமுட்ட்ற குழந்தைகள், இரத்த மற்றும் ஈரல் புற்று நோய்கள் , மலட்டுத்தன்மை உடையவர்கள், ஹோர்மோன் பிரச்சனை, தோல் வியாதிகள் போன்றவை வழக்கத்துக்கு மாறாக அதிக அளவில் இருந்தன    




Center for Science and Research தன் ஆராய்ச்சியில் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தத்தில் 108 முதல் 196 ppm வரை என்டோசல்பான் இருந்ததை காஸ் Chromotography பரிசோதனை மூலம் உறுதி செய்ததாக கூறியது ( ஆனால் அந்து என்டோசல்பான் தான் என்று காஸ் Chromotography மூலம் உறுதி செய்ய  முடியாது என்பது இதை எதிர்பவர்களின் வாதம். அதில் உண்மையும் உண்டு. ஆனால் Fredrick Institute of Plant Protection and Toxicology (FIPPAT) என்ற அரசால் நியமிக்கப்பட்ட நிறுவனம் ௦.001 ppm முதல் ௦.012 வரை மண்ணிலும் முந்திரி இலைகளில் ௦.04 முதல் 2.8 ppm வரை தான் என்டோசல்பான் இருந்ததாக அறிக்கை அளித்தது.

NIOH அமைப்பு இது குறித்து ஒரு முழுமையான ஆய்வை தாங்கள் மேற்கொண்டதாகவும், அதன் அடிப்படையில்  கீழ்கண்ட முடிவுகளையும் பரிந்துரைகளையும் அரசுக்கு செய்வதாகவும்  ஒரு அறிக்கை அள்ளிதது

  1. கேரளா அரசின் முந்திரி தோட்டம் மலைப்பாங்கான இடத்தில உள்ளது. தொடர்ச்சியாகவும் இல்லை. இடையிடையே மக்கள் வாழும் குடியிருப்புகள் கிராமங்கள் உள்ளன , இது வானுர்தி மூலம் பூச்சிமருந்து தெளிக்க சாதகமான அம்சம் இல்லை 
  2. முந்திரி தோட்டங்களை சுற்றி பல கிணறுகள் உள்ளன. உயர்வான பகுதியில் உள்ள முந்திரி காடுகளில் இருந்து மழை நீர் பொது மக்கள் பயன்படுத்தும் கிணற்றை அடைகிறது. மேலும் காசர்கோடு டவுன் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் சந்திரகிரி ஆறுக்கு இந்த முந்திரிகாடுகளின் வழியே வரும் கிளை நதிகளின் நீர் தான் ஆதாரம். இதுவும் வானுர்தி மூலம் பூச்சிமருந்து அடிக்க இயலாது என்பதையே தெரிவிக்கிறது.  
  3. மனித குடியிருப்பு பகுதிகள் முந்திரிகாடுகளுக்குள்ளும்  அமைந்துள்ளன. பள்ளிகூடங்களும் அமைந்துள்ளன. கால்நடைகளும் மேய்ச்சள்ளுக்கு முந்திரிகாட்டை தான் பயன்படுத்துகின்றன. அனைத்து பூச்சி மருந்து உற்பத்தியாளர்களும் இந்த கருத்தை ஏற்று கொண்டனர் 
  4. PCK வானுர்தி .பயன்புத்தியதிலும் எந்த விதிமுறையையும் பின்பற்றவில்லை என்று தெரிய வந்தது. பூச்சிமருந்து தெளித்தல் சரியாக மேற்பார்வையிடபடவில்லை. முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை 
  5. 1981 தில்  இருந்து என்டோசல்பான் மட்டுமே பயன்படுத்தபட்டுளது . சுழற்சி முறையில் பூச்சிமருந்துகளை பயன்படுத்தவேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்படவில்லை. இதற்க்கு அதன் குறைவான விலையே காரணம் என PCK சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது 
  6. மட்டற்ற எந்த பூச்சிமருந்தை போலவே என்டோசல்பானும் அதிக பயன்பாட்டின் காரணமாக மனிதனுக்கும் விலங்கிற்கும் Acute Toxicity யை  ஏற்படுத்தும். ஆனால் நீண்ட கால பயன்பாட்டின் காரணமாக Chronic Toxicity என்டோசல்பான் பயன்பாட்டினால் வரும் என்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்றாலும்,அப்படி நிகழ கூடிய வைப்பு இருகின்றது என்பதை நாம் நிராகரிக்க கூடாது.   
  7. முந்திரி தோட்டத்தை ஒட்டிய கிராம பஞ்சாயத்துகளில் சுகாதார பிரச்சனை இருக்கின்றது என்பது உண்மை. ஆனால் அதற்கு என்டோசல்பான் தான் காரணம் என்று உறுதிபட  சொல்லமுடியாது . ஆனால் அதை மறுக்கவும் முடியாது. இந்த இடங்களில் சுற்று சுழலை மாசு படுத்தும் தொழிற் சாலைகளோ அல்லது வாகன போக்குவரத்தோ இல்லை. நீண்ட காலமாக ஒரே பூச்சிமருந்தை எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் தவிர்கபடவேண்டிய வானூர்தி மூலம் தெளிக்க பட்டதே தவறான ஒரு விசயமாக இருக்கின்றது. நேரடி  ஆதாரம் இல்லை என்ற காரணத்திற்காக  இதனை ஒதுக்கிவிடமுடியாது . எனவே என்டோசல்பான் காரணமில்லை என்றால் அதனை நிரூபிக்கவேண்டிய பொறுப்பு பூச்சிமருந்து தயாரிபாளர்களுக்கு தான் உண்டு. பொதுமக்களுக்கு என்டோசல்பான் தான் கரணம் என்று நிருபிக்கும் பொறுப்பு இல்லை .
மேற்கண்ட முடிவுகளின் அடிப்படையில் கீழ்கண்ட பரிந்துரைகள் செய்யபடுகிறது

  1. வானூர்தி மூலம் பூச்சி மருந்துகளை முந்திரி காடுகளில் தெளிப்பதை பக் காசர்கோடு மாவட்டத்தில் முழுவதுமாக நிறுத்த வேண்டும்.
  2. PCK தோட்டங்களில் என்டோசல்பான் பயன்பாட்டை ஐந்து வருடங்களுக்கு முற்றிலுமாக நிறுத்த வேண்டும் 
  3. அதிகம் பாதிக்க பட்ட Enmakaje Panchayath இல் உள்ள முந்திரி காடுகளில் எந்த பூச்சு மருந்தும் பயன்படுத்த படகூடாது . இந்த காலகட்டத்தில் முந்திரியை தாக்கும் தேயிலை கொசுவை பற்றியும் அதனால் உண்டாகும் உற்பத்தி பாதிப்பை பற்றியும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படவேண்டும் 
  4. PCK யின் பிற முந்திரி தோட்டங்களில் விவசாய ஆராய்ச்சி நிலையங்களின் பரிந்துரை மற்றும் ஆலோசனை படி என்டோசல்பான் பயன்படுத்தலாம் .
  5. பூச்சி மருந்து நிர்வாகம் மற்றும் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மிகவும் விஞ்ஞான பூர்வமாக PCK செய்யவேண்டும் 
  6. ஒருங்கிணைந்த பூச்சி கட்டுப்பாடு குறித்த ஆராய்ச்சிகளை PCK மேற்  .கொள்ள வேண்டும்.   
  7. தேயிலை கொசு எதிர்ப்பு தன்மை கொண்ட முந்திரி இரகங்களை உருவாக்க முயற்சிகள் எடுக்கப்படவேண்டும் 
  8. என்டோசல்பானுகும் அங்கு நிலவும் சுகாதார கெடுக்கும் ஆதாரபூர்வமான உறவை நிரூபிக்க மிகவும் பாதிக்க பட்ட Padre கிராமம் மற்றும் பிற கிராமங்களில் அறிவியல் பூர்வமான பல ஆராய்சிகளை நிபுணத்துவம் கொண்ட விஞ்ஞானிகளை கொண்டு செய்ய வேண்டும். அங்கு நிலவும் சுகாதார சுழல் குறித்து முழுமையான அடிப்படை தகவலை எடுக்க வேண்டும். முந்திரி காடுகளில் பணிபுரிவோரையும் இதில் உள்ளடக்க வேண்டும்.
  9. சுகாதார பிரசானை உள்ளவர்கள் ஏழைகளாக இருபதால் அவர்களுக்கு சிறப்பு மருத்துவ உதவிகளை அரசாங்கம் செய்ய வேண்டும்  
  10. மேற்குறிப்பிட்ட அனைத்து நடவடிக்கைகளையும்  எடுத்து பூச்சி மருந்து குறித்து மக்களிடம் உள்ள பயத்தை போக்கவேண்டும் . 
  11. பூச்சிமருந்து பயன்படுத்துதல் சம்மந்தமான அனைத்து விவரங்களையும் கிராம பஞ்சாயதுகள் அறியும் படி செய்ய வேண்டும்  
NIOH ஆராய்ச்சி முடிவு என்டோசல்பான் பயன்படுத்திய  முறையில் உள்ள தவறை தான் மீண்டும் மீண்டும் சுட்டிகாட்டுகிறது. தவறு என்டோசபானில் இல்லை. அதனை பயன்படுத்திய முறையில் தான் என்றும் முடிவுக்கு வர இந்த அறிக்கையே சான்று. மேலும் மனித உடல் பாதிப்பிற்கும் என்டோசல்பானுகும் உள்ள நேரடி தொடர்பு நிரூபிக்க படவில்லை.

நம் தமிழ்நாட்டிலும் விழுப்புரம் மாவட்டத்தில் பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிராமங்களில் என்டோசல்பான் தான் பெரும் அளவிற்கு முந்திரி காடுகளில் அடிக்க படுகிறது. மேலும் மா மரங்களுக்கும் பூக்கும் தருணத்தில் என்டோசல்பான் பயன்படுத்த படுகிறது. பூச்சை கட்டுபடுத்துவதுடன் பூ உதிர்வதை தடுத்து அதிக மகசூல் எடுக்க உதவுகிறது என்பதே பூக்கும் தருணத்தில் என்டோசல்பானை பயன்படுத்துவதற்கான காரணம். பயன்படுத்துவது எளிது, விலையும் குறைவு, நீண்ட காலமாக   நல்ல பலனை தருகிறது என்பது என்டோசல்பான் பயன்படுத்த விவசாயிகள் உணர்ந்த காரணம். இந்த பகுதிகளில் எல்லாம் காணப்படாத உடல் நல குறைப்பாடு காசர்கோடு மாவட்டத்தில் மட்டும் இருகின்றது என்றால் குறை என்டோசல்பான் என்ற பூச்சி மருந்தில் இல்லை. இதற்கு எந்த வித ஆராய்ச்சியும் தேவையில்லை. கண்முன்னே தெரியும் தகவல்களை சரியாக சேகரித்து சரி பார்த்தால் போதும்.

இருந்த போதிலும் இதற்கு முன் என்டோசல்பான் குறித்து செய்த சில ஆராய்ச்சிகளின் முடிவு என்ன சொல்கிறது என்று பாப்போம்  
The EFSA Journal (2005) 234, 1 - 31 என்ற விஞ்ஞான இதழில் உணவு சங்கிலியில் மாட்டு தீவனத்தில் என்டோசல்பான் இருபதால் ஏற்படக்கூடிய பாதிப்பை பற்றிய ஆராய்ச்சியில் கீழ்கண்ட முடிவுகள் வெளிவந்தன 
  1. மற்ற அர்கனோ க்ளோரின் வகையை சார்ந்த பூச்சு மருந்துகளை விட என்டோசல்பான் கொழுப்பு சத்துடன் எளிதில் இணையாது. அதனால் உணவு சங்கிலியில் அது சேர்வதோ கூடிகொண்டே இருப்பதோ ( Bioaccumulation and Biomaginification ) பெருமளவு சாத்தியம் இல்லை 
  2.  என்டோசல்பான் நம் குடல் பகுதியில் இருந்து எளிதில் உறிஞ்சப்பட்டு கிட்னி மற்றும் லிவர் ஆகிய இடங்களுக்கு அதிகளவிலும் பிற இடங்களுக்கு குறைவாகவும் செல்லும்.
  3. என்டோசல்பான் உணவிலும் தீவனதிலும்  மிக குறைவான அளவே காணப்படும் 
  4. என்டோசுல்பான் அதிக அளவில் இருந்தால் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் லிவர் கிட்னி பாதிப்பு ஏற்படும், நோய் எதிர்ப்பு சக்தியில் மாறுதல் ஏற்படும் என்பது நிரூபிக்க பட்ட உண்மை   



எண்டோ சல்பான் எந்த அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை சில ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன 
எலிகள் : 30௦ ppm உணவில் அல்லது 1.5 mg/kg bw

 நாய் :0.75 mg/kg bw day

 மனிதன் : 0.008 mg/kg bw 

கேன்சர் உருவாகும் தன்மை என்டோசல்பானுக்கு இல்லை IPCS, 1998a)

நன்மை செய்யும் தேனீக்களுக்கு என்டோசல்பான் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை 

உலக சுகாதார நிறுவனம் பூச்சிமருந்துகளின் நச்சு தன்மையை பொருத்து அவைகளை வகைபடுத்தியுளது. அதன் படி என்டோசல்பான் மிக நச்சு தன்மை வாய்ந்த பூச்சிகொல்லி இல்லை. மிக நச்சு தன்மை வாய்ந்த பூச்சிகொல்லி மருந்து பாட்டிலில் சிவப்பு நிற முக்கோணமும் ( class 1), class 2 ரக பூச்சிகொல்லி வகையை சார்ந்த என்டோசல்பான் பாட்டிலில் மஞ்சள் நிறமும், பாதுகாப்பான பூச்சிகொல்லிகளின் பாட்டிலில் பச்சை நிற முக்கனமும் இருக்கவேண்டும். அதன் படி என்டோசல்பான் பாட்டிலில் இது நாள் வரை மஞ்சள் நிற முக்கோணமே இடம்பெற்று இருக்கிறது.

Pesticide Manufacturers and Formulators Association of India (PMFAI ) என்டோசல்பானை முடக்க Eurpeon Union சதி செய்கிறது என்ற குற்ற சாட்டை முன்வைக்கிறது. உலக அளவில் என்டோசல்பான் உற்பத்தி மற்றும் விற்பனையில் 70௦ % பங்கை இந்திய கம்பனிகளே வைத்திருகின்றன. என்டோசல்பானை விட விஷ தன்மை வாய்ந்த பல பூச்சிமருந்துகள் இருந்தும் என்டோசல்பான் மட்டும் குறிவைக்கபடுவது நிதர்சனமான உண்மை.  
என்டோசல்பான் தடை செய்யப்பட்டுவிட்டால் பன்னாட்டு கம்பனிகளின் விலை அதிகமான பூச்சிமருந்துகளை தான், தாங்கள் இது வரை பயன்படுத்தி வந்த என்டோசல்பானுக்கு மாற்றாக விவசாயிகள் பயன்படுத்த நேரிடும். 

அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. நாம் பூச்சிகளுக்கு நஞ்சாக  இருக்கும் பூச்சி மருந்தை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் ஏன் கெடுதல் வராது ? 

நான் பருத்தி தோட்டத்தில் பூச்சி மருந்தை தெளித்துக்கொண்டே செல்லும் மருந்து அடிபவர்கள் சிலர், மருந்து அடித்து கொண்டிருக்கும் பொழுதே விஷம் தனக்குள் ஏறி மாண்டு போன செய்தி பலவற்றை கேள்விபட்டு இருக்கிறேன்.

ஒரு பக்கம் அவரை கையை பறித்து கொண்டே மறு பக்கம் பூச்சி மருந்தை தெளிக்கும் செயலை செய்யும் விவசையை கண்டிருக்கிறேன்.

நாம் உண்ணும் அனைத்து காய்கறிகளிலும் ஏதோ ஒரு பூச்சி மருந்தின் மிச்சமும் எச்சமும் இருந்துகொண்டு தான் இருக்கும் 

இயற்கை விஞ்ஞானி என்று சொல்லப்படும் நம்வாழ்வார் போன்றவர் கூட இந்த பொய்யை நம்பியது எப்படியோ ?

ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்லுங்கள். அது எத்தகைய பெரிய பொய்யாக இருந்தாலும் சரி. மக்கள் கண்டிப்பாக அதனை உண்மை என நம்ப ஆரம்பிப்பார்கள். இது ஹிட்லரின் மந்திரியான Henry Gobbells அனுபவம் தந்த படிப்பினை.


          
   என்டோசல்பான்- தடை தேவையா ? சிந்திப்பீர் 

1 கருத்து:

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

ரொம்ப விளக்கமா இருக்கும்போல.. இன்னும் படிக்கல.. நீளம்தான் பயமுறுத்தியது..

படித்தபின் பின்னூட்டம்.. மன்னிக்கவும்

கருத்துரையிடுக