பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 17 மே, 2011

அரசியல் மாற்றம்

தமிழகத்தில் ஒரு அரசியல் மாற்றம் வந்துள்ளது. மிகவும் அவசியமான மாற்றம் சரியான தருணத்தில் வந்துள்ளது. மக்கள் இலவசதிற்கும் பணத்திற்கும் விலை போக மாட்டார்கள் என்பதை நெத்தியடியாக மக்கள் உணர்தயுள்ளர்கள்.

தான் செய்யும் தவறுகளை பற்றி கேள்வி கேட்டால் அல்லது பத்திரிகைகளில் எழுதினால் மிக கேவலமாக பேசுவதையும் பிரச்சனையை தன் நா வன்மையின் மூலம் திசைதிருப்புவதையும் கருணாநிதி செய்து வந்தார். பணத்தின் மீதும் பதவியின் மீதும் அவருக்கு இருந்த ஆசை தள்ளாத வயதிலும் கூடி கொண்டே இருந்தது பதவியும் பணமும் எவ்வளவு ஆபத்தான விஷயம் என்பதை உணர்த்தியது. தமிழகத்தையே தன் குடும்ப சொத்தாக கருதி பதவி அதிகாரம் பணம் முதலியவற்றை பயன்படுத்தி அனைத்து பணம் கொழிக்கும் துறையிலும் மூக்கை நுழைத்து அனைவரின் எதிர்ப்பையும் சம்பாதித்துக்கொண்டார். Spectrum ஊழலில் கலைஞர் டிவி கு நேரடி பங்கு வந்ததை சகித்துகொள்ளவே  முடியவில்லை. இது கருணாநிதி குடும்பம் செய்த ஊழலில் ஒரு (௦.0001 % ?)சதவிகிதம் தான்.

மதுரையில் ஒரு ரௌடி ராஜ்யமே நடந்தது. கடந்த ஐந்து வருட காலத்தில் நான்கு கலக்டர்கள் மாற்றப்பட்டனர் ( சகாயத்தை தவிர்த்து). அழகிரியின்  அடிமையாக செயல்பட முடியாத காரணத்தினால்.

அனைத்துக்கும் ஒரு முற்றுப்புள்ளி.

ஜெயலிதா ஒரு சிறந்த நிர்வாகி. கடந்தகாலத்தில் அவசர பட்டு சில முடிவுகளை எடுத்து பல இழப்புகளை சந்தித்தார். தற்பொழுது அந்த தவறை உணர்துள்ளார் என்று நம்புவோம். அவர் பதவி ஏற்றதில் இருந்து நடந்த சில நிகழ்வுகள் அவர் பக்குவம் அடைதுள்ளதை காட்டுகிறது. சரியான நபர்களை நம்பி சரியான முடிவுகளை எடுத்தால் இந்த ஆட்சி தமிழர்களுக்கு மிக சிறப்பாக அமையும் என்று நம்புவோம்    
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக