பிரபலமான இடுகைகள்

அன்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அன்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 17 மே, 2011

ஒரு குழந்தையின் பக்குவம் -2

ஒரு முறை என் குழந்தை நக பூச்சை ( நைல் போலிஷ்) எடுத்து விளையாடிகொண்டிருந்த பொழுது அது கீழே சிந்திவிட்டது. உடனே அவள் தன விரல் கொண்டு சிந்திய நக பூச்சை எடுத்து தரையில் முன்று முகங்களை வரைந்தாள். முகத்திற்கு ஒரு வட்டம், கண்களுக்கு இரண்டு புள்ளிகள் மூக்கிற்கு ஒன்று. வாய்க்கு இரண்டு முகங்களுக்கு Upward Curve . ஒரு முகத்திற்கு downward Curve. இது என்ன படம் என்று நான் கேட்டேன். உடனே அவள் உன் படம் அம்மா படம் மற்றும் என் படத்தை வரைந்திருக்கிறேன் என்றாள். பிறகு smiling faces நீயும் அம்மாவும் sad face நான் என்றாள். ஏன் அப்படி என்று கேட்டேன் நான்.

முன்னாடி அம்மாகிட்ட நீ சண்டை போட்டுக்கிட்டு இருப்பே. இப்ப சண்டை போடுறது இல்லை. அதனால் அம்மா Smiling face உடன்   இருக்கிறாள் என்றாள்.

அதே போல அம்மா உன்கிட்ட முன்னாடி சண்டை போடுவாங்க. இப்ப சண்டை போடுறது இல்லை அதனால நீயும் சந்தோஷமா இருக்கே என்றால் என் மகள்.  

சரி நீ ஏன் சோகமாக இருக்கே என்றேன்.

நான் சுட்டி டிவி பார்க்க விடாமல் ஆபீஸ் விட்டு வந்ததும் remotai நீ எடுத்து சேனல மாத்துறே அதனால நான் சோகமாக இருக்கேன் என்றது.

நாங்கள் சண்டையிட்டது குழந்தையின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது என்பது தெரிந்தது. மேலும் அலுவலகம் விட்டு வந்ததும் தொலைகாட்சியை பார்க்கும் எண்ணத்தை விட்டோழிதேன். அனால் வெகு நேரம் தொலைகாட்சியை பார்க்க கூடாது என்பதை அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக உணர்த்தி வருகிறேன்.அவளிடம் நான் செலவிடும் நேரத்தையும் அதிகரித்துளேன்.




                             

திங்கள், 16 மே, 2011

ஒரு குழந்தையின் பக்குவம்

ஒரு பெண் "Parnoid Schizophrenia " என்ற மனநல பாதிப்புக்கு உண்டானவர். தனக்கும் தன் குடும்பத்திற்கும் யாரோ கெடுதல் செய்வதாக ஆரம்பித்த இந்த எண்ணம் போக போக அதிகரித்து தன் தாய் தந்தை கணவன் ஆகியோரை கூட தனக்கு கெடுதல் செய்கிறார்கள் என்று நினைக்க ஆரம்பித்தாள். இது இன்னும் அதிகமாகி- தன் கணவன், தந்தை உருவத்தில் வேறு யாரோ வீட்டுக்குள் வருகிறார்கள் என்று எண்ணி அவர்களிடம் சண்டை இடுவது தொடர்கதையானது.
பொதுவாக இத்தகைய மனச்சிதைவு உள்ளவர்களுக்கு தான் நன்றாக தான் இருக்கிறோம் என்ற எண்ணம் ஆழமாக இருக்கும். தனக்கு மன நல பாதிப்பு இருகின்றது என்பதை உணரவோ ஏற்று கொள்ளவோ மாட்டார்கள். இதன் காரணமாக மன நல மருத்துவரிடம் சிகச்சை எடுத்தாலும் மருந்துகளை தொடர்ச்சியாக எடுத்துகொள்ள மாட்டார்கள். மருந்து மாத்திரைகளை எடுத்துகொள்வதை பாதியிலேயே விட்டால், அடுத்த முறை இந்த பாதிப்பு இன்னும் அதிக சேதத்தை ஏற்படுத்தும். மன நல ஆலோசனகளும் சில நபர்களிடம் எடுபடாது 

தன் கணவனுக்கு பதில் வேறு யாரோ விட்டுக்குள் வருகின்றார்கள் என்ற எண்ணத்தால் யார் நீ ? என்று வினவி சண்டை இடுவதும், அவன் தூங்கும் பொழுது விளக்கை போட்டு அவனை உற்று பார்பதுமாக இருந்தார். இந்த குழப்பம் தன் ஆறு வயது குழந்தையிடமும் ஆரம்பித்தது. பள்ளிக்கு சென்றது ஒரு குழந்தை ஆனால் விட்டுக்கு வந்ததோ வேறு குழந்தை என்று நினைக்க ஆரம்பித்தாள். தன் குழந்தைக்கு உணவு ஊட்டிய பிறகு சமையல் அறைக்கு சென்று திரும்பிய நேரத்தில் குழந்தை மாறிவிட்டதாவும் உணர்தாள். சந்தேகத்தில் குழந்தையின் கையை முகர்து பார்பதும் நீ என்ன இப்பொழுது சாப்பிட்டாய் என்று கேட்பதும் வழக்கமாயிற்று. ஒரு முறை பூஜை அறைக்கு குழந்தையை அழைத்து சென்று உண்மையை சொல். நீ என் மகள் தானே என்றதும் அந்த பிஞ்சு குழந்தை தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தது. 

இதனை கண்ட அவள் தன் கணவன் வீடு திரும்பியதும் நடந்ததை சொன்னாள். இது நம்ப குழந்தை தானா ?  நான் தான் குழப்பி கொள்கிறேனே என்று கூறி அழுதாள் . கணவனும் "பல முறை நான் எடுத்து சொல்லியும் நீ கேட்பதில்லை. மன நல மருத்துவரிடம் சென்று வாங்கிய மாத்திரைகளை நீ எடுத்து கொள்ளவில்லை . இன்றாவது மருத்துவமனைக்கு வா" என்று கோபப்பட்டதும்  அவளும் வர சம்மதம் தெரிவித்தாள். மருத்துவமனைக்கு சென்று வீடு திரும்பியதும் ஒரு ஆச்சிரியமான சம்பவம் நடந்தது.

அவளின் ஆறு வயது மகள் "அம்மா ஒரு பேப்பர் கொடு என்றாள்"

அவள் அம்மாவும் ஒரு பேப்பரை எடுத்து வந்தாள்

ஒரு பேனாவை எடுத்து நான் சொல்லுவது போல எழுது என்றது குழந்தை 

அவள் அம்மாவும் இசைந்தாள்

முதலில் " நான் (அதாவது அந்த குழந்தை ) எங்கேயும் போகவில்லை " என்று எழுது என்றது குழந்தை 

அவளும் எழுதினாள்

அடுத்ததாக " அப்பாவும் எங்கேயும் போகவில்லை " என்று எழுது என்று சொன்னது குழந்தை 

அவளும் எழுதினாள்

அடுத்ததாக " நான் உனக்கு ஒரே குழந்தை. வேறு குழந்தை இல்லை " என்று எழுது என்றது குழந்தை 

மீண்டும் " வேற அப்பா இல்லை "என்று எழுது என்றது 

கடைசியாக " இந்த மாத்திரை உனக்கு வழிகாட்டாவிட்டால் இந்த பேப்பர் வழிகாட்டும் " என்று எழுது என்றது குழந்தை ( வழிகாட்டாவிட்டால் என்ற இந்த சொல்லை தான் குழந்தை சொன்னது. )

முடிந்ததா? ஒரு கோடு போடு என்றது குழந்தை 

அவள் அம்மாவும் செய்தால் 

பின்னர் அந்த குழந்தை " அம்மா உனக்கு எப்பலாம் குழப்பம் வருதோ இந்த பேப்பர்ர எடுத்து படி என்றது. மேலும் குழப்பம் வரும் போது அந்த கோட்டிற்கு கீழே என்ன குழப்பம் ? என்று எழுதிக்கொண்டே வா என்றது 

பின்னர் அந்த பேப்பரை எடுத்து நான்காக மடித்து ஒரு சின்ன பிளாஸ்டிக் பெட்டியில் வைத்து அவள் அம்மாவின் " Bedside table இல்" வைத்தது     

அந்த குழந்தை தன் தாய் மீது எவ்வளவு அன்பு செலுத்துகிறது ? தன் தாய்க்கு பிரச்சினை இருக்கின்றது என்பதையும் தெளிவாக உணர்து தன்னால் ஆனா உதவியை செய்ய நினைக்கிறது. 

அவள் தன் மன நல பிரச்சனையினால் என்னை நீ யார் ? என்று கேட்கும் பொழுது நான் எவ்வளவு பக்குவமாக நடந்து இருக்க வேண்டும். அதற்கு பதில் மருத்துவமனைக்கு வர வில்லையே என்று கோபபட்டேனே? இந்த சின்ன குழந்தையிடம் உள்ள பக்குவம் எனக்கு இல்லையே என்று வருத்தப்பட்டேன் 

ஆம். அது என் குழந்தை.

வாழ்கையை பற்றிய புதிய நம்பிக்கையையும் அந்த குழந்தை எனக்கு ஏற்படுத்தியது.     



    
  

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

அன்பே தீர்வு





படித்ததில் பிடித்தது 
  
Thanks to http://enganeshan.blogspot.com/2010/11/blog-post_29.html


பல வருடங்களுக்கு முன் அமெரிக்காவில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஒருவர் மாணவர் குழு ஒன்றை ஏற்படுத்தி அந்தக் குழுவிடம் வித்தியாசமான ஒரு ஆராய்ச்சிப் பணியை ஒப்படைத்திருந்தார். ”பின் தங்கிய குடிசைப் பகுதி ஒன்றிற்குச் செல்லுங்கள். 12 வயது முதல் 16 வயது வரை உள்ள 200 சிறுவர்களைத் தேர்ந்தெடுங்கள். அவர்களைப் பற்றிய முழு விவரங்களைச் சேகரியுங்கள். பின் அவர்களுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்று உங்கள் அனுமானத்தைச் சொல்லுங்கள்” என்று அவர்களிடம் சொன்னார்.

அந்த மாணவர்கள் குழு மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள குடிசைப் பகுதியைத் தேர்ந்தெடுத்து அங்கு சென்றது. அந்த மாணவர்கள் அங்குள்ள 12 முதல் 16 வயதுடைய ஒவ்வொரு இளம் வயதினரிடமும் நீண்ட நேரம் பேசினார்கள், கேள்விகள் கேட்டார்கள். தாங்கள் பேச்சின் மூலம் அறிந்து கொண்டதையும், பேசாமலேயே கவனித்து அறிந்து கொண்டதையும் வைத்து அந்த ஆராய்ச்சி மாணவர்கள் ஒரு முடிவுக்கு வந்தார்கள். “இந்த சிறுவர்களில் 90 சதவீதம் பேர் எதிர்காலத்தில் சிறிது சமயமாவது சிறைச்சாலையில் கழிப்பார்கள்”.

அந்த முடிவுக்கு அவர்கள் வரக் காரணமாக இருந்தது அந்த சிறுவர்களின் மனப் போக்கில் அவர்கள் சில தீய பண்புகள், தீய ஆர்வங்கள், சமூகப் பொறுப்பற்ற தன்மை போன்றவற்றைக் கண்டது தான்.

அந்த மாணவர் குழு சமர்ப்பித்த தகவல்களையும், அந்த தகவல்களை அடிப்படையாக வைத்து அவர்கள் வந்த முடிவையும் பத்திரமாகப் பாதுகாத்த அந்த பேராசிரியர் பல வருடங்கள் கழித்து அந்த குடிசைப் பகுதியில் உள்ள சிறுவர்கள் பெரியவர்களாக ஆன பின்னர் மீண்டும் வேறொரு மாணவர் குழுவை அதே பகுதிக்கு அனுப்பினார். “இந்த 200 பேரும் தற்போது எப்படி இருக்கிறார்கள், அதில் எத்தனை பேர் முந்தைய குழு எண்ணியது போல் சிறைக்குச் சென்றிருக்கிறார்கள் என்ப்பதை அறிந்து வாருங்கள்”

அந்த வேலை இரண்டாவதாகப் போன குழுவிற்கு சுலபமானதாக இருக்கவில்லை. அந்த 200 பேரில் சிலர் இடம் பெயர்ந்திருந்தார்கள். சிலர் இறந்திருந்தார்கள். இடம் பெயர்ந்தவர்களில் சிலரது தற்போதைய விலாசம் கிடைக்கவில்லை. ஆனாலும் இரண்டாவது மாணவர் குழுவின் விடாமுயற்சியால் 200 பேரில் 180 பேரை தொடர்பு கொள்ள முடிந்தது. அவர்களில் நான்கு பேர் மட்டுமே சிறைக்குச் சென்றிருந்தார்கள்.

பேராசிரியருக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்ட மாணவர் குழுவிற்கும் அந்தத் தகவல் பெருத்த ஆச்சரியத்தை அளித்தது. முதல் குழுவின் கருத்து எந்தத் தகவல்களின் அடிப்படையில் எழுந்ததோ அந்தத் தகவல்களை மீண்டும் ஒரு முறை சரி பார்த்தனர். அன்றைய அனுமானம் இன்றைக்கும் அறிவு சார்ந்ததாகவே இருந்தது. குற்றம் புரியத் தேவையான மனநிலைகளிலும், சூழ்நிலைகளிலும் தான் அன்று அந்த சிறுவர்கள் வாழ்ந்து வந்தார்கள். அப்படியானால் இப்படி இந்த 176 பேரும் சிறைக்குச் செல்லாமல் இருக்கக் காரணம் என்ன என்ற மிகப் பெரிய கேள்வி எழுந்தது.

மீண்டும் சென்று சிறைக்குச் செல்லாமல் நல்ல முறையில் வாழ்ந்து கொண்டிருந்த அந்த 176 நபர்களிடமும் அவர்கள் பேட்டி எடுத்தார்கள். அவர்கள் போகவிருந்த அழிவுப்பாதையில் இருந்து அவர்களைக் காத்தது என்ன என்ற கேள்வியைப் பிரதானமாக வைத்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் ஒரு பதிலையே சொன்னார்கள். “எங்கள் பள்ளிக்கு ஒரு புதிய ஆசிரியை வந்தார்....”

உடனே பெரும்பாலானோர் சொன்ன அந்த ஆசிரியையைத் தேடி ஆராய்ச்சியாளர்கள் சென்றனர். இத்தனை பேர் வாழ்க்கையை மாற்றி அமைத்த அந்த ஆசிரியை எந்த வழிமுறையைப் பின்பற்றினார் என்பதை அறிய அவர்களுக்கு ஆவலாக இருந்தது.

அந்த ஆசிரியை தற்போது ஆசிரியைப் பணியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார். அவரிடம் அவர்கள் சரமாரியாகக் கேள்வி கேட்டார்கள். ”உங்களுடைய அந்தப் பள்ளி மாணவர்களில் பெரும்பாலானோர் உங்களை இன்றும் நினைவு வைத்திருக்கிறார்கள். அதன் காரணம் என்ன?” “அவர்கள் உங்களுடைய தாக்கத்தால் நிறையவே மாறி இருக்கிறார்கள். நீங்கள் அவர்களுக்கு கல்வி புகட்டிய முறை என்ன?”

அந்த முதிய ஆசிரியைக்கு குறிப்பிடும்படியாக எதையும் சொல்லத் தெரியவில்லை. ஒரு நீண்ட பதிலை எதிர்பார்த்துச் சென்றவர்களுக்கு ஒரே ஏமாற்றம். அந்த ஆசிரியை தன் பழைய நாட்களின் நினைவுகளில் மூழ்கினார். வந்தவர்களுக்குச் சொல்வது போலவும், தனக்குள்ளேயே பேசிக்கொள்வது போலவும் அவர் மிகவும் கனிவுடன் சொன்னார். “அந்தக் குழந்தைகளை நான் நிறையவே நேசித்தேன்.......”

பெரிய பெரிய சித்தாந்தங்களையும், வித்தியாசமான கல்வி நுணுக்கங்களையும் எதிர்பார்த்து வந்தவர்கள் அந்த தகவலில் மெய்சிலிர்த்துப் போனார்கள்.

எல்லா சீர்திருத்தங்களுக்கும் அன்பே மூலாதாரம். அன்பினால் மட்டுமே முழுமையான, உண்மையான மாற்றங்களைக் கொண்டு வருவது சாத்தியம். சட்டங்களாலும், கண்டிப்புகளாலும், தண்டனைகளாலும் எந்த மிகப்பெரிய மாற்றத்தையும் உலகில் கொண்டு வரமுடிந்ததில்லை. இது வரலாறு நமக்கு உணர்த்தும் பாடம்.

உளமார, உண்மையாக அந்த ஆசிரியை அந்த சிறுவர்களை நேசித்தார். குற்றங்கள் மலிந்த சூழலில் வளர்ந்த அந்த சிறுவர்களின் வரண்ட இதயங்களில் அந்த ஆசிரியையின் மாசற்ற அன்பு ஈரத்தை ஏற்படுத்தி நற்குணங்களை விதைத்திருக்க வேண்டும். அதை அவரே உணர்ந்திருக்கா விட்டாலும் அந்த அற்புதம் அந்த சிறுவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்திருக்கிறது. அவர்களது வாழ்க்கையினை நல்ல பாதைக்கு திருப்பி விட்டிருக்கிறது. இந்த நிகழ்வு சிந்தனைக்குரியது.

இது வீட்டிலும், ஊரிலும், சமூகத்திலும், நாட்டிலும் அனைவராலும் உணரப்பட வேண்டிய ஒன்று. குறை கூறுவதிலும், விமரிசனம் செய்வதிலும் பெருமை இல்லை. சட்டங்களைக் கடுமையாக்குவதிலும், கண்டிப்பை அமலாக்குவதிலும் வலிமை இல்லை. அன்போடு அணுகுவதிலேயே பெருமையும் வலிமையும் இருக்கின்றது.

மாற்றம் எங்கு வரவேண்டும் என்று நினைத்தாலும் அங்கு அன்பு செலுத்துவதில் இருந்து ஆரம்பியுங்கள். அந்த அன்பு சுயநலம் இல்லாததாக இருக்கும் பட்சத்தில், அந்த அன்பு குறுகியதாக இல்லாத பட்சத்தில் அற்புதங்கள் நிகழ்த்த வல்லது. சமூகத்தில் இன்று புரையோடிருக்கும் சண்டை, சச்சரவு, கொலை, கொள்ளை, தீவிரவாதம், சகிப்பற்ற தன்மை, அநீதி முதலான அத்தனை நோய்களுக்கும் அன்பே மருந்து. இந்த பிரச்னைகளுக்கு அன்பே தீர்வு.

வியாழன், 17 மார்ச், 2011

அழகாக காதலை வெளிபடுத்துங்கள்

Newyork இல் இருந்து Chicago செல்லும் விமானம் Chicago விமான நிலையத்தை வந்து அடைந்தது. விமானம் தரை இறங்கும் சமயத்தில் ஒரு இளைஞன் எழுந்து தனக்கு உதவ 12 நபர்கள் வேண்டும். சின்ன உதவி தான் என்றான். உடனே சிலர் உதவ முன் வந்தனர். அவர்களில் 12 நபர்களை தேர்ந்து எடுத்த ஒருவன் அவர்கள் ஒவ்வொருவர் கையிலும் ஒற்றை ரோஜா மலர் ஒன்றை தந்தான். விமானநிலையத்தில் தான் சுட்டிக்காட்டும் பெண்ணிடம் ஒவ்வொருவராக சென்று அந்த ரோஜா மலரை தர வேண்டும் என்றும் சொன்னான். இதனை கேட்டு வியப்படைந்த பிரேசில் நாட்டு பிரபல எழுத்தாளர் Paulo Coelho, அவர்களை பின் தொடர்ந்து என்ன நடக்கிறது என்று பார்த்தார்.
அந்த இளைங்கனை வரவேற்க வந்த பெண்ணிடம் ரோஜா மலரை ஒவ்வொருவராக சென்று தந்தனர். அவர்கள் அவ்வாறு தந்ததும், அந்த இளைஞன் அந்த பெண்ணிடம் சென்று தன் காதலை சொன்னான்.

அந்த விமான நிலையத்தில் பணிபுரிந்தவர்களும் எந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை பார்த்து மகிழ்ச்சியடைந்தனர்.

அன்பை வெளிபடுத்துவதில் பல வகை உண்டு. வித்தியாசமாக சிந்தித்து, பிறரையும் அதில் ஈடுபடுத்தி அனைவருக்கும் மகிழ்ச்சியை தந்த அந்த இளைஞனின் அன்பு நீடுடி வாழட்டும்.

Like the  flowing river by Paulo Coelho - புத்தகத்தில் படித்தது. சில மாற்றங்களுடன் பதிவு செய்ய பட்டுள்ளது 


புதன், 9 மார்ச், 2011

உலகம் உருண்டையானது

சரியாக பத்து வருடங்கள் தொடர்பே இல்லாமல், எங்கு இருக்கிறாள் என்ன செய்கிறாள் என்ற தகவலே இல்லாமல் இருந்த உங்கள் முன்னால் காதலியை பற்றிய தகவல் நீங்கள் முன் பின் சந்தித்திராத நபர் மூலம் தெரிய வந்தால் எப்படி இருக்கும்?

நான் பணி செய்து கொண்டிருக்கும் இடத்திற்கு, பயிற்சி பெறுவதற்காக வேறு ஒரு நிறுவனத்திலிருந்து, அதுவும் வேறு ஒரு மாநிலத்திலிருந்து  சிலர் வந்து இருந்தனர். அதுவும் ஒரு கிராமத்திற்கு. பயிற்சி எடுத்து கொண்டிருக்கும் பொழுது லேசாக ஒரு எண்ணம் வந்தது. என் முன்னால் காதலி ( பெயர் அனாமிகா என்று வைத்துகொள்வோம் )  அங்கு பணிபுரிவதாக சில வருடங்களுக்கு முன் கேள்வி பட்டிருந்தேன். அதுவும் நிறுவனம் பெயர் கூட சரியாக தெரியாது. ஏதோ ஒரு யுகத்தில் அனாமிகா என்று பெயர் கொண்ட பெண், __________ படிப்பு படித்த பெண், தங்கள் நிறுவனத்தில் பணி புரிகிறார என்று அந்த குழுவிற்கு தலைமை தாங்கி வந்தவரிடம் கேட்டேன். 

அப்படி கேட்டவுடனேயே அவர் தங்களுடன் வந்தவர்களை திரும்பி பார்த்தார். ஏதோ அவருக்கு தெரியும் என பட்டது. பின்னர் அவர் தயங்கியபடியே, அனாமிகா அங்கு தான் வேலை பார்த்ததாகவும், குடும்ப பிரச்னை காரணமாக வேலையைவிட்டு நின்று சில வருடங்கள் ஆவதாகவும் சொன்னார். பின்னர் நான் அவரின் தொலைபேசி எண் தெரியுமா என்று கேட்டதற்கு, தற்பொழுது இல்லை எனவும், ஊர்க்கு சென்ற பின் அலுவலகத்தில் தேடி பார்த்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவதாகவும் கூறினார். அனுபவத்தில் எவ்வாறு கூறும் பலர் ஊருக்கு சென்றதும் மறந்துவிட்டு தங்கள் பணியை பார்ப்பார்கள். அது போல தான் இவரும் செய்வார் என்று நினைத்தேன். ஆனால் சொன்னது போல மறக்காமல் அனாமிகாவின் தொலைபேசி எண்ணை மின்னஞ்சல் மூலம் அனுப்பினார்.

நான் அனமிகாவிற்கு போன் செய்தேன். அவள் வேறு மாநிலத்தை சேர்ந்தவள்.
அனாமிகா தான் பேசுகிறாள் என்பதை தெரிந்து கொண்ட நான், நான் யார் என்று கண்டுபிடிக்குமாறு ஆங்கிலத்தில் சொன்னேன். பல வருடங்கள் கழித்து போன் செய்த காரணத்தினாலும், என்னிடம் இருந்து செல்பேசி அழைப்பை எதிர்பார்க்காத  காரணத்தினாலும் அவள் குழுப்பம் அடைந்தது தெரிந்தது.

பின்னர் நான் யார் என்று அறிமுகப்படுதிகொண்டேன் . வந்ததே கோபம் அவளுக்கு. எத்தனை நாள் கோபமோ, எத்தனை நாள் விரக்தியோ , பட பட வென்று பொரிந்தாள். எங்கள் விட்டில் முழு சம்மதத்தை தெரிவித்தபிறகு, என் பெற்றோர் என் வற்புறுத்தலின் பெயரில் அவர் விட்டுக்கு பெண் கேட்டு  சென்றும், அவர் தாய் மறுத்ததுடன் தமிழர்களுக்கு என்றாலே எங்களுக்கு பிடிக்காது, அவர்களுக்கு எதிராக ஹோமம் செய்த குடும்பம் எங்களுடையது என்று வேறு கூறி அவமானபடுத்தி அனுப்பிவிட்டார்கள். பின்னர் சில காரணங்களினால் அவளும் மனம் மாறிவிட்டாள். 

பிறகு தொடர்பே இல்லாமல் போன பிறகு நான் திருமணம் செய்து கொண்டேன். இருந்தாலும் அவள் என் மீது கோபபட்டபோழுது அமைதியாக இருந்தேன். சிறிது நேரம் கழித்து தான் எப்படி என் செல்பேசி என் கிடைத்தது என்றாள். நான் விவரத்தை கூறினேன். பின் என் குடும்பத்தை பற்றி கேட்டாள். பதில் கூறினேன். அவள் குடும்பத்தை பற்றி கேட்ட பொழுது தனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதாக கூறினாள். வேறு விபரம் எதுவும் கூறவில்லை.

பின் எப்பவாவது ஒரு முறை நான் பேசினால் பதில் பேசுவாள். சில சமயம் பேசவும் மாட்டாள். பல மாதம் வரை பேச மாட்டாள். பிறகு திடீர் என பதில் அளிப்பாள். இப்பொழுது தொலைபேசியில் பேசுவதில்லை. மின்னஞ்சல் அனுப்பினால் பதில் வரும். பின்னர் ஒரு மின்னஞ்சலில் தனக்கு விவாகரத்து ஆகிவிட்டதாகவும், தாயாருக்கு உடல் நிலை சரி இல்லை என்பதால் அவரையும் குழந்தைகளையும் பார்த்து கொண்டு வீட்டில் இருப்பதாகவும் கூறினாள். தனக்கு அன்பான கணவர் தான் அமைந்ததாகவும், சிறிய பிரச்சனை ஒன்று ஆரம்பத்திலேயே சரி செய்யமால் விட்டதால் பெரிதாகி பிரிய நேரிட்டதாகவும் கூறினாள். ஆனால் தற்பொழுதும் அவள் கணவர் குழந்தைகள் மேல் அதிகம் பாசம் வைத்துள்ளதாகவும், அடிகடி குழந்தைகளை அவர் விட்டுக்கும் அழைத்து செல்வதாகவும், தானும் அதனை தடுபதில்லை எனவும் கூறினாள்.

மிகவும் புத்திசாலிதனமும், நல்ல ஆங்கில புலமையும், திறமையும், தைரியமும், தன்னம்பிக்கையும் கொண்ட பெண் அவள். அவளின் தைரியமும் தன்னம்பிக்கையும் தான் என்னை ஈர்த்தது. வேடிக்கை என்னவென்றால் கல்லூரி முடித்து சென்ற பின்னால் தான் தானும் என்னை காதலிப்பதாக சொன்னாள். அது வரை நண்பர்கள் என்ற எல்லையை தாண்டவில்லை.( தன் தாயிடம் இப்பொழுதே இவருடன் விட்டை விட்டு சென்றுவிடுவேன் என்று என் கையை பிடித்து சொன்னவள் அவள். நான் தான் அப்பொழுது தடுத்து அது தவறு என்றும், எப்படியாவது சம்மதத்தை பெறுவோம் என்று சொன்னேன்) 

அந்த பெண் மீது தவறே இல்லை. ஒரு முறை நான் அதிக உரிமையுடன் பழகுவதை உணர்ந்த அவள் " என்னிடம் தவறான எண்ணத்தில் ஒன்றும் பழகவில்லையே ? அப்படி ஒரு எண்ணம் இருந்தால் விட்டுவிடு. என் குடும்பத்தில் ஏற்றுகொள்ளவே மாட்டார்கள் என்று கூறினாள். என் மனதில் ஆசை இருந்தாலும், நான் பொய் சொன்னேன். அப்படி ஒரு எண்ணம் இல்லை என்று. கல்லூரி படிப்பு முடிந்தபின் தான் என் பிரிவு அவளிடம் மாற்றத்தை உண்டு பண்ணியது தெரிந்தது. கல்லூரி படிப்பு முடிந்தாலும் வேறு ஒரு காரணத்திற்காக  இருவரும் கல்லூரிக்கு செல்ல நேர்ந்தது. அப்பொழுது  பேருந்தில் இருவரும் ஒன்றாக அமர்ந்த பொழுது, என் தோள் மீது  தலை சாய்த்து அவள் அமர்ந்தாள் . வார்த்தையால் இல்லாமல் செய்கையால் உணர்த்தினாள் . பிறகு தான் புரிந்தது. கல்லூரி படிப்பு முடிந்தவுடன் தன் விட்டுக்கு வரும்படி  அவள் முன்பு வற்புறுத்தி அழைத்து சென்றதும் இதனால் தான் என்று. படிப்பு முடிந்ததும் நேரே என் விட்டுக்கு செல்லாமல் அவள் அழைத்த காரணத்தால், அவள் விட்டுக்கு சென்று விட்டு பின்னர் என் வீட்டுக்கு சென்றேன். 

உண்மையான அன்பு இப்பொழுதும் இருவருக்கும் இருக்கிறது. ஆனால் நான் கடவுளிடம் வேண்டிகொள்வது இது தான். மீண்டும் அவளை நேரில் சந்திக்க கூடாது. புனிதமான உறவாகவே இது இருக்கட்டும்.