பிரபலமான இடுகைகள்

நையாண்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நையாண்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 3 அக்டோபர், 2012

நிதிப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கான யோசனைகள்


தினமணி தலையங்கதில் இருந்து: 
நிதிப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கான யோசனைகளைக் கூறுவதற்காக மத்திய அரசினால் நியமிக்கப்பட்ட விஜய் கேல்கர் கமிட்டி அளித்துள்ள பரிந்துரைகளில் முதன்மையானவை என்று சொல்லத்தக்கவை ஆறு. அவை:
1. டீசல் விலையைக் குறைத்து விற்பனை செய்வதற்காக எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் மானியத்தைக் குறைக்க வேண்டும். முதல் கட்டமாக 2013 மார்ச் மாதத்திற்குள்ளாக டீசலுக்கு தற்போது வழங்கப்படும் மானியத்தைப் பாதியாகக் குறைக்க வேண்டும். மீதியை 2014 மார்ச் மாதத்துக்குள் முற்றிலுமாக இல்லாமல் செய்துவிட வேண்டும். நிகழாண்டில் டீசல் விலையைக் குறைந்தது லிட்டருக்கு ரூ.4 உயர்த்த வேண்டும்.
2. மண்ணெண்ணெய் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்த வேண்டும். இதற்கு, தற்போது ஒதுக்கப்படும் மானியத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைத்துவிட வேண்டும்.
3. அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள், சமையல் எரிவாயு உருளைகளுக்கு அளிக்கப்படும் மானியத்தைப் படிப்படியாகக் குறைத்து, முற்றிலும் இல்லாமல் செய்துவிட வேண்டும். முதல்கட்டமாக 2012-13 நிதியாண்டில் 25% மானியத்தை குறைத்துக்கொள்ள வேண்டும்.
4. தற்போது உணவு மானியமாக ரூ.85,000 கோடி செலவாகிறது. நெல், கோதுமை போன்ற உணவு தானியங்களுக்கு ஆதார விலை அறிவிக்கும் அதே வேளையில், நியாயவிலை கடைகளுக்காக மத்திய அரசு வழங்கும் விலையையும் உயர்த்த வேண்டும். அதேபோன்று, வறுமைக் கோட்டுக்கு மேலே வாழ்பவர்களுக்கு வழங்கப்படும் உணவு தானியங்களுக்கான மானியத்தை ரத்து செய்து, சந்தை விலையில் பொருள்களை விற்பனை செய்ய வேண்டும்.
5. உரங்களுக்கு அளிக்கப்படும் மானியத்தைப் படிப்படியாக குறைத்து, யூரியா, நைட்ரேட் பாஸ்பேட் உரங்களை அதன் சந்தை மதிப்புக்கேற்ப அரசே ஆண்டுதோறும் விலை நிர்ணயம் செய்யலாம்.
6. மானியத் தொகையைப் பொருளாக வழங்காமல், பணத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டால், அமலாக்கக் குறைபாடுகள் இல்லாமல் செய்துவிட முடியும்.
இந்தப் பரிந்துரைகளை அமல்படுத்தினால் நிதிப் பற்றாக்குறை அளவைப் பெருமளவு குறைத்துவிட முடியும் என்று பட்டியலிடுகிறது கேல்கர் கமிட்டி. இதுதவிர, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்றுப் பணம் பெறும் வழிமுறை, பயன்படாத, பயன்படுத்தப்படாத அரசு நிலங்களை விற்பனை செய்து பணம் பெருக்கும் வழிமுறை என்று பலவிதமான யோசனைகளும் இக்கமிட்டியின் பரிந்துரைகளில் அடங்கும்.
மேலும் சில யோசனைகள்
1. மானியங்களை நிறுத்தி விட்டால் மக்கள் பலர் பசி பட்டினியால் தொஉயிர் விடுவர். இது மக்கள் தொகையை வெகுவாக குறைக்கும். இதனால் அரசாங்கத்திற்கு இன்னும் செலவு குறையும்
2.அரசு மருத்துவமனைகளை முற்றிலுமாக மூடிவிடலாம். இதனால் மேலும் உயிர் இழப்புகள் எற்ப்பட்டு மக்கள் தொகை மேலும் குறையும். 
3. அரசு கல்விக்கு செய்யும் செலவுகளையும் நிறுத்திவிடலாம். பள்ளிகூடங்களை அரமூடிவிடலாம். படித்தால் தானே வேளை கேட்பார்கள். கேள்வியும் கேட்பார்கள்?
4. பொதுஇடத்தில் அரைமணி நேரத்திற்கு மேல் நின்றாலோ/கூடிபேசினாலோ மணி நேரத்திற்கு ருபாய் பத்து முதல் நூறு வறை வரி விதிக்கலாம்
5. பொது மக்கள் தங்களுக்கு தேவையான மின்சாரத்தை தாங்களே உற்பத்தி செய்து கொள்ளவேண்டும். வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இது பொறுந்தாது.
6. அரசு அதிகாரிகள்/ அரசியல்வாதிகலுக்கு இனி சம்பளம் கிடையாது. ஆனால் அவர் அவர் திறமைக்கு எற்ப பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கி கொள்ளலாம்.லஞ்சம் வருமானத்ற்கு எற்ப
வருமான வரி செலுத்திவிட வேண்டும். 
7. ஒரு குழந்தைக்கு மேல் பெற்றால் அரசுக்கு முதல் வருடம் ருபாய் இருபதாயிரம் செலுத்த வேண்டும். வயது கூட கூட வருடம் பத்தாயிரம் கூடுதலாக செலுத்தவேண்டும். அப்படி செலுத்த தவறினால் அரசே கருணை கொலை செய்துவிடும்.
8. விவசாயிகள் சாகுபடி செய்யும் பயிருக்கு வரி கட்ட வேண்டும். பயிறுக்கு தகுந்தவாறு வரி விதிக்கபடும்.
9. விடுகளில் பயன்படுத்தபடும் தண்ணிருக்கு லிட்டருக்கு ருபாய்உ ப்த்து ம்ட்டும் வசூலிக்க வேண்டும். நீர் அத்தியாவசிய பொருள் என்பதால் கூடுதல் பணம் வசூல் செய்ய கூடாது
10. விவசாயத்திற்கு 100 லிட்டறுக்கு மேல் போகும் ஒரு ஒரு லிட்டருக்கும் ருபாய் இரண்டு மட்டும் வசூலிக்கலாம். விவசாயம் நாட்டின் முதுகெலும்பு என்பதால் இந்த சலுகையை அளிக்கலாம்.

மேலும் பல யோசனைகள் என்னிடம் உள்ளது. மன் மோகன்சிங், சிதம்பரம், மோண்டேக் சிங் அலுவாலியா ஆகியோர் நேரடியாக தொடர்பு கொண்டால் ஒரு கணிசமான தொகை வாங்கிக்கொண்டு ஆலோசனை தருவேன். இல்லையென்றால் உலக வங்கி, அமெரிக்கா மற்றும் சோனியா காந்தி அனுமதியுடன் என்னையே நிதி அமைச்சர் ஆக்கலாம். மக்கள் கேள்வி கேட்டால் என் மீது பழி போட்டு நீங்கள் தப்பிக்க இது மேலும் உதவும்.


இப்படிக்கு

மன் மோகன்சிங், சிதம்பரம், மோண்டேக் சிங் அலுவாலியா, ராகுல்,மோடி, கருணாநிதி, அத்வானி,அம்மா, மம்தா, நமீதா, குஷ்பு, கனிமொழி, ராமதாசு, விஜயகாந்த்,விஜய், அன்புமணி, விஜய், டி.ராஜேந்தர்,அரவிந்  கெஜிரிவால், பாபா ராம் தேவ், , போல அரசியலுக்கு வந்து சேவை செய்ய ஆசை படும் ஒரு இந்திய குடிமகன். 

ஞாயிறு, 22 மே, 2011

அழுகாச்சி காவியம்

தமிழர்களே தமிழர்களே என்னை நீங்கள் கடலில் தூக்கி போட்டாலும் கட்டுமரமாக தான் மிதப்பேன். அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம்.
படுபாவிங்க இப்படி காலுல பாறங்கல்ல கட்டி தூக்கி போட்டுடிங்களே . இனி நான் இப்படி உங்களுக்கு உதவி செய்வேன் ? ஐயகோ 
-------------------------------------------------------------------------------------------------------

வைரமுத்துவின் புதிய படைப்பு அழுகாச்சி காவியம் - கருணாநிதி, ராஜாத்தி மற்றும் கனிமொழியின் உருக்கமான காட்சிகள் கொண்ட படைப்பு  
----------------------------------------------------------------------------------------------------------
ஒட்டு எண்ணிக்கை நாளன்று வடிவேலுவின் "Reactions "

காலை 9.30௦ மணி 

உஸ். அப்பா. இப்பவே கண்ணா கட்டுதே   

காலை 11.30௦ மணி 

பில்டிங் Strong கு . பேஸ்மட்டம் Weak கு  

காலை 12.30.௦ மணி 

நானா தான் வாய கொடுத்து மாட்டிகிட்டனா 

மதியம் 3.30௦ மணி 

எவளவு  நேரம் தான் வலிக்காத மாறியே நடிக்கிறது 

மாலை 5.30௦ மணி 

மாப்பு வச்சுடாங்கையா ஆப்பு.


அம்மா என்ன மன்னிசுடுங்கம்மா. எல்லாம் சும்மா பில்ட் up தாம. உள்ள எதுவும் இல்லமா 
  



புதன், 18 மே, 2011

இது தான் அந்த ஜோசியர் சொன்ன விபத்தா ? என்ன கொடுமை டா சாமி


சும்மா ஒரு விளக்கத்திற்கு இது என் படம் இல்லை 

பொதுவாக நான் ஜோசியத்தை நம்புவது இல்லை. ஒரு நாள் காலை நான் அலுவலகம் கிளம்பிகொண்டிருக்கும் பொழுது காழியூர் நாராயணன் ஏதோ ஒரு தொலைக்காட்சி சேனலில் ராசி பலன் சொல்லிகொண்டிருந்தார். எத்தேச்சையாக நான் அதை பார்த்த பொழுது என் ராசிக்கு அன்றைய தினம் வாகன விபத்து நடக்க வாய்ப்பு உள்ளது என்றும் வாகனத்தில் செல்லும் பொழுது கவனமாக செல்ல வேண்டும் என்றும் கூறினார். ஹ்ம்ம் எப்படி எல்லாம் சொல்றாங்கபா என்று எண்ணியபடி என் இருசக்கர வாகனத்தை எடுத்து கொண்டு கிளம்பினேன். நூறு மீட்டர் தூரம் வரை கூட சென்றிருக்க மாட்டேன். சாலை ஓர மரத்தில் இருந்து புறப்பட்டு வந்த ஒரு கரு வண்டு நேராக என் உதட்டை நோக்கி வந்தது. சற்று உரசி விட்டு போனது போல தான் இருந்தது. ஆனால் சிறிது நேரத்தில் என் மேல் உதட்டில் பயங்கரமான வலி. என்னையும் அறியாமல் என் கண்களில் நீர். உடனே வீட்டுக்கு திரும்பினேன். முக கண்ணாடியில் பார்த்த பொழுது மேல் உதடு வீங்கி இருந்தது தெரிந்தது. சிறிது நேரத்தில் பல மடங்கு வீங்கி மேல் உதடு மட்டும் முகத்தில் இருந்து தனியாக தொங்கியது போல இருந்தது.  அலுவலகத்திற்கு விடுமறை சொல்லிவிட்டு மருத்துவமனை சென்று ஒரு TT ஊசி போட்டுக்கொண்டேன். கிறுத்துவ மருத்துவமனை அது. அங்கு இருந்த மருத்துவர் இரண்டு நட்ட்களுக்கு மாத்திரைகளும் எழுதி தந்தார். ஒரு நாள் முழுவதும் இருந்த வீக்கம் மறு நாள் தான் சரியானது.

இது தான் அந்த ஜோசியர் சொன்ன விபத்தா ? என்ன கொடுமை டா சாமி 

               

திங்கள், 11 ஏப்ரல், 2011

முதல் அமைச்சர் விஜயகாந்த் -1

இந்த தேர்தலில் ஜெயித்து, ஜெயலலிதா காலில் விழுந்து  ஒரு பேச்சுக்கு விஜயகாந்த் தமிழக முதல் அமைச்சர் ஆகிவிட்டார் என்று வைத்து கொள்வோம். என்ன நடக்கும் ?


அதி காலை 10௦ மணி ( விஜயகாந்திற்கு அது தான் அதி காலை). போதை தெளிந்து எழுந்து மீண்டும் அரை (half )மயக்கத்தில் அமர்ந்து இருக்கிறார்.

விஜயகாந்த் P.A : சார் உங்களை பார்க்க மதுரை கலக்டர் வந்துருக்கார்  

விஜயகாந்த் : அங்.... வர சொல்லுங்க 

மதுரை கலக்டர் : வணக்கம் 

விஜயகாந்த் : சேலம் கலக்டர் ஆ வாங்க வாங்க 

மதுரை கலக்டர் : சார் நான் மதுரை கலக்டர் 

விஜயகாந்த் : நான் பேசும் பொழுது எதிர்த்தா பேசுறே ? ஒரு உதை விட்டேனா தெரியும். P.A. உடனே இவனுக்கு சேலத்துக்கு ட்ரான்ஸ்பர் ஆர்டர் ரெடி பண்ணு.

மதுரை கலக்டர் : நான் வந்த விஷயம் என்ன என்றால் ....

விஜயகாந்த் : சரி சரி ரொம்ப இழுக்காதே வந்த விசயத்தை சொல்லு...

மதுரை கலக்டர் : தேர்தல் நேரத்துல நான் ரொம்ப கெடு பிடியா நடந்துகிட்டதற்கு அழகிரி இப்ப ரொம்ப தொல்லை பண்றார். அடி ஆட்கள விட்டு என் ரூமுக்கு முன்னாடி 2 பாத்ரூம் போய்  வைக்குறார். காலைல கலக்டர் ஆபீஸ் ல அதை சுத்தம் பண்ணிட்டு தான் வேலைய ஆரம்பிக்க வேண்டிருக்கு.

விஜயகாந்த் : என்னையா ... இதை எல்லாம் ஒரு கம்ப்ளைன்ட் ன்னு CM கிட்ட  சொல்ல வந்துட்ட. காலைல வந்துருக்கும். போய் இருப்பானுங்க. பதிலுக்கு நீ வேனும்ன அவன் விட்டுக்கு போயேன்.

மதுரை கலக்டர் : என்ன சார் இப்படி பொறுப்பில்லாம பதில் சொல்றீங்க ? மதுரை போலீஸ் என்னடானா கலக்டர் கம்ப்ளைன்ட் கொடுத்தாலும், அந்த பேப்பர சுருட்டி காது கொடைறாங்க. காவல் துறையை கட்டுபடுத்தும் நீங்களும் பொறுப்பு இல்லாமல் இருக்கீங்க 

விஜயகாந்த் :  என்னடா நீ . சினிமாவுல நான் போலீஸ் வேஷம் போட்டத பார்த்து ரொம்ப எமாந்துட்ட போல. சரி சரி ரொம்ப கெஞ்சுற. CM ம ஒரு தடவ நேர பார்த்துட்டு சொல்லிடு போ 

மதுரை கலக்டர் : (ஜெர்காகி மெதுவான குரலில் ) நீங்க தானே சார் CM

விஜயகாந்த் : ஏன்டா உனக்கு ஒரு தடவ சொன்ன புரியாத ? எதிர்த்து பேசிக்கிட்டே இருக்க. நான் CM இல்ல டம்மி. மம்மி போய் பாரு 

மதுரை கலக்டர் : யாரு சார் நம்ம ஜெயலலிதா அம்மாவையா ?

விஜயகாந்த் : ஐயோ அடிச்ச போதையெல்லாம் போச்சே. இப்படி விவரம் எல்லாம இருக்கியே உன்னையெல்லாம் யார் கலக்டர் ஆக்குனது. மம்மி இன்ன   பிரேமலதா டா. அவ காதுல மட்டும் விழுந்துது ...... உன் சீட்டு கிழிஞ்சிடும். சரி சரி. அந்த Fridge இல் இருந்து VAT -69 எடுத்து கொடுத்துட்டு போ. நானும் அவ கிட்ட உன் பிரச்சனையை சொல்லறேன்.
பின் குறிப்பு 
விஜயகாந்த் P.A யாருன்னு கேட்கலையே. நம்ம வடிவேலு தான். விஜயகாந்த் CM ஆனதை  கேள்விபட்டதும் ஓடி வந்து விஜயகாந்த் காலில் விழுந்து, சில பல உதைகள் வாங்கி ( எவ்வளவு அடிச்சாலும் தாங்குறருயா )- சம்பளமே வாங்காமல் PA வேலை பார்த்துகொண்டிருக்கிறார்   


----------------------------------------------------------------------------------------------------------