பிரபலமான இடுகைகள்

வியாழன், 24 பிப்ரவரி, 2011

வாழ்கை என்னும் பூந்தோட்டம்


வாழ்கை என்னும் பூந்தோட்டம் 

நம் வாழ்கை என்னும் பூந்தோட்டத்தில் என்ன என்ன செடிகளை வைக்கவேண்டும், அதனை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது நாமாக தான் இருக்க வேண்டும். சில சமயம் நம் பக்கத்துக்கு வீட்டுக்காரர், நம் தோட்டத்தை எட்டி பார்த்து, நீ வைத்திருக்கும் சில செடிகள் சரியில்லை என்றும், எப்படி விதைக்கவேண்டும் என்றும், எப்படி நீர் பாய்ச்சவேண்டும் என்றும் என்ன உரங்கள் போட வேண்டும் என்றும் ஆலோசனை சொல்லுவார்.

அதனை கேட்டு நாம் மாற்றங்களை செய்தால் பின்னர் அது நம் தோட்டமாக இருக்காது. பக்கத்து வீடுகாரரின் தோட்டமாக தான் இருக்கும்.

நம் வாழ்கையை முடிவு செய்வது நாமாக தான் இருக்க வேண்டும். பிறர் சொல்லை கேட்டு வாழக்கூடாது. நமக்கு எது நல்லது எது கெடுதல் என்று நாம் தான் யோசனை செய்து முடிவெடுக்க வேண்டும். ஆலோசனை கேட்பது தவறில்லை. முடிவெடுப்பது நாமாக தான் இருக்க வேண்டும். மேலும் நம் வாழ்கை பூந்தோட்டத்தை நம்மால் சரியாக பராமரிக்க முடியாவிட்டால், அடுத்தவரின் தோட்டத்தை எட்டி பார்ப்பதே தவறு 

பாலோ கேல்ஹோ வின் புத்தகத்தில் படித்தது  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக