பிரபலமான இடுகைகள்

புதன், 3 அக்டோபர், 2012

நிதிப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கான யோசனைகள்


தினமணி தலையங்கதில் இருந்து: 
நிதிப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கான யோசனைகளைக் கூறுவதற்காக மத்திய அரசினால் நியமிக்கப்பட்ட விஜய் கேல்கர் கமிட்டி அளித்துள்ள பரிந்துரைகளில் முதன்மையானவை என்று சொல்லத்தக்கவை ஆறு. அவை:
1. டீசல் விலையைக் குறைத்து விற்பனை செய்வதற்காக எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் மானியத்தைக் குறைக்க வேண்டும். முதல் கட்டமாக 2013 மார்ச் மாதத்திற்குள்ளாக டீசலுக்கு தற்போது வழங்கப்படும் மானியத்தைப் பாதியாகக் குறைக்க வேண்டும். மீதியை 2014 மார்ச் மாதத்துக்குள் முற்றிலுமாக இல்லாமல் செய்துவிட வேண்டும். நிகழாண்டில் டீசல் விலையைக் குறைந்தது லிட்டருக்கு ரூ.4 உயர்த்த வேண்டும்.
2. மண்ணெண்ணெய் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்த வேண்டும். இதற்கு, தற்போது ஒதுக்கப்படும் மானியத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைத்துவிட வேண்டும்.
3. அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள், சமையல் எரிவாயு உருளைகளுக்கு அளிக்கப்படும் மானியத்தைப் படிப்படியாகக் குறைத்து, முற்றிலும் இல்லாமல் செய்துவிட வேண்டும். முதல்கட்டமாக 2012-13 நிதியாண்டில் 25% மானியத்தை குறைத்துக்கொள்ள வேண்டும்.
4. தற்போது உணவு மானியமாக ரூ.85,000 கோடி செலவாகிறது. நெல், கோதுமை போன்ற உணவு தானியங்களுக்கு ஆதார விலை அறிவிக்கும் அதே வேளையில், நியாயவிலை கடைகளுக்காக மத்திய அரசு வழங்கும் விலையையும் உயர்த்த வேண்டும். அதேபோன்று, வறுமைக் கோட்டுக்கு மேலே வாழ்பவர்களுக்கு வழங்கப்படும் உணவு தானியங்களுக்கான மானியத்தை ரத்து செய்து, சந்தை விலையில் பொருள்களை விற்பனை செய்ய வேண்டும்.
5. உரங்களுக்கு அளிக்கப்படும் மானியத்தைப் படிப்படியாக குறைத்து, யூரியா, நைட்ரேட் பாஸ்பேட் உரங்களை அதன் சந்தை மதிப்புக்கேற்ப அரசே ஆண்டுதோறும் விலை நிர்ணயம் செய்யலாம்.
6. மானியத் தொகையைப் பொருளாக வழங்காமல், பணத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டால், அமலாக்கக் குறைபாடுகள் இல்லாமல் செய்துவிட முடியும்.
இந்தப் பரிந்துரைகளை அமல்படுத்தினால் நிதிப் பற்றாக்குறை அளவைப் பெருமளவு குறைத்துவிட முடியும் என்று பட்டியலிடுகிறது கேல்கர் கமிட்டி. இதுதவிர, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்றுப் பணம் பெறும் வழிமுறை, பயன்படாத, பயன்படுத்தப்படாத அரசு நிலங்களை விற்பனை செய்து பணம் பெருக்கும் வழிமுறை என்று பலவிதமான யோசனைகளும் இக்கமிட்டியின் பரிந்துரைகளில் அடங்கும்.
மேலும் சில யோசனைகள்
1. மானியங்களை நிறுத்தி விட்டால் மக்கள் பலர் பசி பட்டினியால் தொஉயிர் விடுவர். இது மக்கள் தொகையை வெகுவாக குறைக்கும். இதனால் அரசாங்கத்திற்கு இன்னும் செலவு குறையும்
2.அரசு மருத்துவமனைகளை முற்றிலுமாக மூடிவிடலாம். இதனால் மேலும் உயிர் இழப்புகள் எற்ப்பட்டு மக்கள் தொகை மேலும் குறையும். 
3. அரசு கல்விக்கு செய்யும் செலவுகளையும் நிறுத்திவிடலாம். பள்ளிகூடங்களை அரமூடிவிடலாம். படித்தால் தானே வேளை கேட்பார்கள். கேள்வியும் கேட்பார்கள்?
4. பொதுஇடத்தில் அரைமணி நேரத்திற்கு மேல் நின்றாலோ/கூடிபேசினாலோ மணி நேரத்திற்கு ருபாய் பத்து முதல் நூறு வறை வரி விதிக்கலாம்
5. பொது மக்கள் தங்களுக்கு தேவையான மின்சாரத்தை தாங்களே உற்பத்தி செய்து கொள்ளவேண்டும். வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இது பொறுந்தாது.
6. அரசு அதிகாரிகள்/ அரசியல்வாதிகலுக்கு இனி சம்பளம் கிடையாது. ஆனால் அவர் அவர் திறமைக்கு எற்ப பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கி கொள்ளலாம்.லஞ்சம் வருமானத்ற்கு எற்ப
வருமான வரி செலுத்திவிட வேண்டும். 
7. ஒரு குழந்தைக்கு மேல் பெற்றால் அரசுக்கு முதல் வருடம் ருபாய் இருபதாயிரம் செலுத்த வேண்டும். வயது கூட கூட வருடம் பத்தாயிரம் கூடுதலாக செலுத்தவேண்டும். அப்படி செலுத்த தவறினால் அரசே கருணை கொலை செய்துவிடும்.
8. விவசாயிகள் சாகுபடி செய்யும் பயிருக்கு வரி கட்ட வேண்டும். பயிறுக்கு தகுந்தவாறு வரி விதிக்கபடும்.
9. விடுகளில் பயன்படுத்தபடும் தண்ணிருக்கு லிட்டருக்கு ருபாய்உ ப்த்து ம்ட்டும் வசூலிக்க வேண்டும். நீர் அத்தியாவசிய பொருள் என்பதால் கூடுதல் பணம் வசூல் செய்ய கூடாது
10. விவசாயத்திற்கு 100 லிட்டறுக்கு மேல் போகும் ஒரு ஒரு லிட்டருக்கும் ருபாய் இரண்டு மட்டும் வசூலிக்கலாம். விவசாயம் நாட்டின் முதுகெலும்பு என்பதால் இந்த சலுகையை அளிக்கலாம்.

மேலும் பல யோசனைகள் என்னிடம் உள்ளது. மன் மோகன்சிங், சிதம்பரம், மோண்டேக் சிங் அலுவாலியா ஆகியோர் நேரடியாக தொடர்பு கொண்டால் ஒரு கணிசமான தொகை வாங்கிக்கொண்டு ஆலோசனை தருவேன். இல்லையென்றால் உலக வங்கி, அமெரிக்கா மற்றும் சோனியா காந்தி அனுமதியுடன் என்னையே நிதி அமைச்சர் ஆக்கலாம். மக்கள் கேள்வி கேட்டால் என் மீது பழி போட்டு நீங்கள் தப்பிக்க இது மேலும் உதவும்.


இப்படிக்கு

மன் மோகன்சிங், சிதம்பரம், மோண்டேக் சிங் அலுவாலியா, ராகுல்,மோடி, கருணாநிதி, அத்வானி,அம்மா, மம்தா, நமீதா, குஷ்பு, கனிமொழி, ராமதாசு, விஜயகாந்த்,விஜய், அன்புமணி, விஜய், டி.ராஜேந்தர்,அரவிந்  கெஜிரிவால், பாபா ராம் தேவ், , போல அரசியலுக்கு வந்து சேவை செய்ய ஆசை படும் ஒரு இந்திய குடிமகன்.